AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Abhishek Sharma: 18 பந்துகளில் அபிஷேக் சர்மா அதிரடி அரை சதம் – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி

Historic Opening Partnership: போட்டி முழுவதும் ரன்கள் எடுக்க போராடி விமர்சனங்களை எதிர்கொண்ட இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பினார். களத்தில் இறங்கிய உடனேயே வெறும் 18 பந்துகளில் தனது புயல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். நாக் அவுட் போட்டிகளின் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாகும்.

Abhishek Sharma: 18 பந்துகளில் அபிஷேக் சர்மா அதிரடி அரை சதம் – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி
அபிஷேக் சர்மாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 08 Mar 2026 21:15 PM IST

அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா (Abhishek Sharma) இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்தார். இதன் மூலம் அவர் தனது விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அகமதாபாத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நரேந்திர மோடி மைதானத்தில் இன்று அதாவது 2026 மார்ச் 8ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த 2026 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளே வந்தது.

டாஸ் இழந்தது இந்திய ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் சோகத்தை கொடுத்தாலும், இந்த முடிவு தங்களது சாதகமானது என்று நிரூபித்து காட்டினார்கள் அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சனும். இன்னிங்ஸைத் தொடங்க வந்த அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி, முதல் ஓவரிலிருந்தே நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாட தொடங்கினர். இந்த இரண்டு வீரர்களும் பவர்பிளேயிலேயே பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை கொண்டு மில்லியன் கணக்கான ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் கிரிக்கெட் உலகில் ஒரு புதிய வரலாற்று சாதனையையும் படைத்துள்ளனர்.

ALSO READ: மாற்றமில்லாமல் களமிறங்கிய இந்திய அணி.. தாக்கத்தை தருவார்களா அபிஷேக், வருண்?

இந்திய அணிக்கு மற்றொரு மைல்கல்:

சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடியால் முதல் 4 ஓவர்களில், இந்திய அணி 50 ரன்களை கடந்தது. அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் 4 ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மாவும் முதல் 6 ஓவர்களில், அதாவது பவர்பிளேயிலேயே 92 ரன்கள் குவித்திருந்தனர். இந்த அதிரடியான தொடக்கத்திலிருந்தே, இந்திய அணி இன்று மைதானத்தில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான ஸ்கோரை உருவாக்கும் உறுதியான நோக்கத்துடன் களமிறங்கியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

வெறும் 18 பந்துகளில் அபிஷேக்கின் அதிரடியான அரைசதம்:

போட்டி முழுவதும் ரன்கள் எடுக்க போராடி விமர்சனங்களை எதிர்கொண்ட இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பினார். களத்தில் இறங்கிய உடனேயே வெறும் 18 பந்துகளில் தனது புயல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். நாக் அவுட் போட்டிகளின் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாகும். முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஃபின் ஆலன் மற்றும் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஜேக்கப் பெத்தேல் ஆகியோரும் வெறும் 18 பந்துகளில் இந்த சாதனையை எட்டியிருந்தனர்.

ALSO READ: கோப்பையுடன் வந்த தோனி, ரோஹித்.. அதிர்ந்த ஸ்டேடியம்! ஐசிசி சிறப்பு கௌரவம்..!

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

இந்திய அணி:

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து அணி:

டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திர, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி.

Follow Us