AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சபரிமலையில் கூட்ட நெரிசல்… இனி ஒருநாளில் 75,000 பேருக்கு மட்டுமே அனுமதி.. புதிய கட்டுப்பாடுகள்!

Darshan Restriction Order : சபரிமலையில் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் சபரிமலையில் ஏற்பாடுகள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் ஏன் ஒருங்கிணைப்பு இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேள்வி எழுப்பியது.

சபரிமலையில் கூட்ட நெரிசல்… இனி ஒருநாளில் 75,000 பேருக்கு மட்டுமே அனுமதி.. புதிய கட்டுப்பாடுகள்!
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 Nov 2025 09:56 AM IST

கேரளா மாநிலம் சபரிமலையில் (Sabarimala) நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இந்த நிலையில், சபரிமலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கேரளா (Kerala) உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, தினமும் 75,000 பேர் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போல முன்பதிவு எண்ணிக்கையை 5,000 ஆகக் குறைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  ஆன்லைன் முன்பதிவு வரிசையை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள்

இந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், சபரிமலையில் ஏற்பாடுகள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஒருங்கிணைப்பு ஏன் இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேள்வி எழுப்பியது. மறுநாள் சுமார் 20,000 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் கோவிலுக்கு வந்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இனி, 5,000 பேருக்கு மட்டுமே இடங்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : கேரளாவில் தொடரும் கனமழை.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை..

ஆன்லைன் முன்பதிவில் எந்த சமரசமும் இருக்க கூடாது. திட்டமிடப்பட்ட நேரத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பும், 18 மணி நேரத்திற்குப் பிறகும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த நேரத்திற்குப் பிறகு, ஆன்லைன் முன்பதிவு வரிசை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கூட்டம் அதிகரிப்பதற்கான காரணம், ஆன்லைன் வரிசை டிக்கெட்டுகளை வைத்திருக்கும் அனைத்து பக்தர்களையும் மலையேற அனுமதிக்கப்படுவதே ஆகும். 18வது படியில் அனுபவம் வாய்ந்த போலீசாரை நிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் எச்சரிக்கை

மத்திய ராணுவத்தை வரவழைப்பதற்கான நடவடிக்கையை கலெக்டர் எடுக்க வேண்டும் என்ற நீதிமன்றம், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த தேவசம் போர்டுக்கு  உத்தரவிட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேரழிவை ஏற்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

இதையும் படிக்க : டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத இந்தியாவின் முதல் நகரம்.. எது தெரியுமா?

நிலக்கல் முதல் சன்னிதானம் வரை, இடங்களை ஐந்து அல்லது ஆறு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். இந்த இடங்களில் எத்தனை பேருக்கு இடமளிக்க முடியும் என்பதற்கான கணக்கீடு உள்ளதா என்றும் நீதிமன்றம் கேட்டது. ஒவ்வொரு துறையின் பரப்பளவிற்கு ஏற்ப பக்தர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும். அவசரமாக வருபவர்களை எல்லாம் அனுமதிப்பது தவறான அணுகுமுறை. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். மண்டல மகரவிளக்கு சீசன் ஒரு திருவிழா நடத்துவது போல இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

Follow Us