Suriya : ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளில் வெளியான ‘சூர்யா45’ பட டைட்டில்!
Suriya45 Movie Title Release : இயக்குநர், நடிகர் என தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவரின் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ள படம்தான் சூர்யா45. இன்று 2025, ஜூன் 20ம் தேதியில் ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் (Suriya) அதிரடி திரைப்படமாக உருவாகிவருவதுதான் சூர்யா45 (Suriya45). இந்த திரைப்படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman), வீட்டுல விசேஷம் (veetla vishesham) போன்ற திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் 3வது திரைப்படமாக உருவாகிவருவது சூர்யா45. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அதிரடி நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இந்த ஜோடி ஆறு படத்திற்குப் பின் சுமார் 20 வருடங்களுக்குப் பின் இப்படத்தில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கோவை பொள்ளாச்சியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது.
இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், இறுதிக்கட்ட வேலையில் படம் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று 2025, ஜூன் 20ம் தேதியில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சூர்யா45 படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்குப் படக்குழு “கருப்பு” (Karuppu) என்ற டைட்டிலை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான இந்த டைட்டிலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




சூர்யா45 படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழுவின் பதிவு :
With pride and Excitement, we present the title of #Suriya45: ‘KARUPPU’. A name that embodies the soul of our story, shaped by heart, spirit, and purpose. #கருப்பு #Karuppu💥
Wishing a very Happy Birthday to our director @RJ_Balaji 💐@Suriya_offl @trishtrashers #Indrans… pic.twitter.com/xW3DD94Wfs
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 20, 2025
நடிகர் சூர்யாவின் இந்த படத்திற்குப் படக்குழு கருப்பு என்ற டைட்டிலை வைத்திருக்கிறது. இந்த டைட்டிலை பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், அந்த டைட்டிலையே படக்குழு வைத்துள்ளது. இந்த படமானது கிராமத்துக் கதைக்களத்துடன் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில்தான் அவர் இரண்டாவதாக ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இப்படமானது சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கருப்பு படத்தின் கதைக்களம் என்ன?
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் 3வதாக உருவாகியிருக்கும் இந்த கருப்பு படத்தின் ஆரம்ப அறிவிப்பிலிருந்தே படத்தின் போஸ்டரில் குதிரை மற்றும் அரிவாள் போன்ற பொருட்கள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் ஆரம்பத்தில் இப்படமானது தெய்வ கதை சார்ந்த படமாக இருக்கும் என ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர். பின் இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் போஸ்டரிலும் வெள்ளைக் குதிரை இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் சூர்யா மற்றும் திரிஷா என இருவரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகர்கள் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் மற்றும் அனகா மாயா ரவி என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த கூறப்படும் நிலையில், அதைப் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2025, தீபாவளி பண்டிகையோடு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதைப் பற்றிய தகவல்கள் குறித்துப் படக்குழு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டைட்டிலை தொடர்ந்து டீசர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகவும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.