Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அவர பாத்தா நிஜமாவே ரௌடியோனு தோனும்… இயக்குநர் நெல்சனின் கலகல பேச்சு!

Director Nelson Dilipkumar: தமிழ் சினிமாவில் டார்க் காமெடியை மையமாக வைத்து பலப் படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் முன்னதாக பிரபல நடிகர் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவர பாத்தா நிஜமாவே ரௌடியோனு தோனும்… இயக்குநர் நெல்சனின் கலகல பேச்சு!
நெல்சன் திலீப்குமார்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2025 19:27 PM

கோலிவுட் சினிமாவில் 2018-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் (Director Nelson Dilipkumar). இவர் முன்னதாக சின்னத்திரையில் நிகழ்சிகளை இயக்கி வந்தார். பின்பு 2018-ம் ஆண்டு நடிகர்கள் நயன்தாரா மற்றும் யோகி பாபு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். டார்க் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இதுவும் டார்க் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் விஜயை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கினார். இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி தோல்வியை சந்திக்காமல் தப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

நடிகர் ஜாக்கி ஷெராஃப் குறித்து கலகலப்பாக பேசிய நெல்சன் திலீப்குமார்:

நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கிய படம் ஜெயிலர். இந்தப் படக் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் பான் இந்திய நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார்,ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து இருந்தனர்.

இதுகுறித்து முன்னதாக விழா ஒன்றில் பேசிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எனக்கு நடிகர் ஜாக்கி ஷெராஃபை பார்க்கும் போது இவர் நிஜமாவே ரௌடியானு தோனும். ஏன்னா அவர் அப்படிதான் இருப்பார். ஜெயிலர் படத்திற்கு கதை சொல்லவேண்டும் என்று சொன்னபோது ஃபார்ம் ஹவுஸ் வரச்சொன்னார்.

ஏன் ஃபார்ம் ஹவுஸ் வரச்சொல்றாரு. கதை பிடிக்கலனா கட்டி வச்சு அடிப்பாறோனு நினச்சேன். ஆனா போனதும் அவரோட எண்ட்ரியே பயங்கரமா இருந்துச்சு. நான் போய் பாக்குறேன் அப்படியே ஸ்விம் பன்னிட்டு எழுந்து வரார். வந்து கதையெல்லம் பெருசா கேக்கல அவரு. ரஜினி சார் படம்னா நான் கண்டிப்பா நடிக்கிறேன்னு சொல்லிட்டாரு என்று கலகலப்பாக நெல்சன் பேசியுள்ளார்.