Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இயக்குநர் ராமின் பறந்து போ படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ் – படக்குழு வெளியிட்ட அப்டேட்

Paranthu Po Movie: இயக்குநர் ராம் இயக்கத்தில்தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பறந்து போ. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ் குறித்த விவரங்களை படக்குழு தற்போது தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ராமின் பறந்து போ படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ் – படக்குழு வெளியிட்ட அப்டேட்
பறந்து போImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2025 15:49 PM

தமிழ் சினிமாவில் மனித உணர்வுகளையும், உறவுகளையும் மையமாக வைத்து இயக்குநர்களில் ஒருவர் ராம் (Director Raam). இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் தற்போதும் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சிவாவை வைத்து தற்போது இயக்குநர் ராம் இயக்கியுள்ள படம் பறந்து போ. அப்பா மற்றும் மகன் இருவருக்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பறந்து போ படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் கிரேஸ் ஆண்டனி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், தியா, ஜெஸ்ஸி குக்கு, பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்ற நிலையில் தற்போது படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழை வழங்கியுள்ளது. அதன்படி படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது. இதுகுறித்து படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பறந்து போ படக்குழு வெளியிட்ட தணிக்கை சான்றிதழ்:

இயக்குநர் ராமின் பறந்து போ படத்தைப் பாராட்டும் பிரபலங்கள்:

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் பறந்து போ படத்தின் சிறப்பு வெளியீட்டில் படத்தைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து படத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்தப் படம் குறித்து இயக்குநர் ராம் பேசுகையில் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.

மேலும் படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாத சிறுவனும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் தந்தையும் ஒரு ரோட் ட்ரிப் செல்கிறார்கள். அப்போது அவர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றன்.