Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

The Journey Of Dragon: இணையத்தில் வைரலாகும் ட்ராகன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

The Journey Of Dragon Movie: இந்த 2025-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்களின் பட்டியளில் முன்னிலை வகிப்பது டிராகன் படம். இளைஞர்களை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை அனைத்துப் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

The Journey Of Dragon: இணையத்தில் வைரலாகும் ட்ராகன் படக்குழு வெளியிட்ட வீடியோ!
ட்ராகன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2025 17:11 PM

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Director Ashwath Marimuthu) கோலிவுட் சினிமாவில் இரண்டாவதாக இயக்கியப் படம் ட்ராகன். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் அனுபமா பரமேசுவரன், கயடு லோகர், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ட்ராகன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்கள் கடந்ததை படக்குழு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தி கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியின் படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் என படக்குழுவினர் பங்கேற்றனர்.

படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ட்ராகன் படத்தின் காதல், சிரிப்பு மற்றும் அராஜகம் நிறைந்த பயணம் இங்கே என்று அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தின் கதை என்ன?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பள்ளியில் படிக்கும் போது நன்கு படிக்கக்கூடிய மாணவனாக இருக்கிறார். ஆனால் பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்தப் பெண் பள்ளியில் படிக்காமல் மோசமான பழக்கம் உடைய பையனை காட்டி இவனைதான் எனக்கு பிடிக்கும். இப்படி இருக்க பையனா காதலித்து திருத்துவதுதான் எனக்கு பிடிக்கும் என்று கூறுகிறார்.

இதனால் கடுப்பான பிரதீப் கல்லூரி செல்லும் போது முற்றிலும் வேறாக படிக்காமல் பல அரியர்கள் வைத்து ஊதாரியாக இருக்கிறார். அப்போது அனுபமாவை காதலித்து வருகிறார். கல்லூரி முடிந்தும் நண்பர்களிடம் காசு வாங்கி ஊர் சுற்றி வருகிறார். வேலைக்கு எதுவும் செல்லவில்லை என்று அனுபமா பிரதீப்பை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொள்கிறார்.

இதனால் கடுப்பான பிரதீப் அனுபமாவின் கணவர் வாங்கும் சம்பளத்தை விட ஒரு ரூபாயாவது அதிகமாக வாங்க வேண்டும் என்று நினைத்து அரியர்களை முடிக்காமல் பொய்யான டிகிரி சர்டிஃபிகேட் மூலம் வேலைக்கு சேர்ந்து பெரிய பணக்கார வீட்டு பெண்ணான கயடு லோகரை திருமணம் செய்யும் வரை செல்கிறார். ஒரு கட்டத்தில் உண்மைகளை எல்லாம் கூறி மனம் மாறுகிறார். அதன்பிறகு என்ன நடந்தது அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதுதான் படத்தின் கதை.