Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓடிடியில் மாஸ் காட்டும் லெவன் படத்தின் விமர்சனம் இதோ!

Eleven Movie: தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகி கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான படம் லெவன். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது. திரையரங்கை விட ஓடிடியில் வெளியான பிறகு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் மாஸ் காட்டும் லெவன் படத்தின் விமர்சனம் இதோ!
லெவன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2025 18:18 PM

இயக்குநர் லோகேஷ் அஜீஷ் (Lokkesh Ajls) எழுதி இயக்கிய படம் லெவன். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா (Naveen Chandra) நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் திலீபன், சஷாங், அபிராமி, ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவி வர்மா, அர்ஜய் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை அஜ்மல் கான், ரேயா ஹரி மற்றும் பிரபு சாலமன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து இருந்தார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

திரையரங்குகளில் படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தைப் பெறவில்லை. ஆனால் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் ஓடிடியில் வெளியான பிறகு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கியது. பொதுவாக ஒரு சைக்கோ கொலை தொடர்பான கதை என்றால் அந்த கொலைகாரனை திட்டியே மக்கள் பேசுவார்கள்.

லெவன் படத்தைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கார்த்திக் சுப்பராஜ்:

ஆனால் இந்தப் படத்தில் மாறாக அந்த கொலைகாரனுக்கு ஆதரவாக மக்கள் தொடர்ந்து பேசி வருகின்ற்னர். அப்படி மக்கள் பேசக் காரணம் படத்தின் டயலாக் மற்றும் திரைக்கதை தான். கொலை செய்வது சட்டப்படி தவறுதான் என்றாலும் நியாம் என்பது அனைவருக்கும் சமம் என்பதை இந்தப் படம் காட்டியிருக்கும்.

லெவன் படத்தின் கதை என்ன?

தொடர்ந்து மர்மமான முறையில் சென்னைக்கு வெளியே கருகிய நிலையில் பிணங்கள் கிடைக்கின்றது. ஆனால் அந்த பிணங்கள் இருக்கும் இடத்தில் போலீஸிற்கு எந்த தடயமும் குற்றவாளி குறித்து கிடைக்கவில்லை. இதனால் போலீஸ் திணரிக்கொண்டிருக்கும் சூழலில் அந்த வழக்கை விசாரித்த அதிகாரி விபத்து ஏற்பட்டு கோமாவிற்கு செல்கிறார்.

இதனைத் தொடர்ந்து நாயகன் நவீன் சந்திராவிடம் அந்த வழக்கை விசாரிக்கக் கூறி உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த வழக்கை விசாரிக்கும் நவீன் சந்திரா தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையைக் கண்டுபிடிக்கிறார். அவர்கள் அனைவரும் ஒரே பள்ளில் ஒரே வகுப்பில் படித்த இரட்டையர்கள்.

ட்வின் பர்ட்ஸ் என்ற அந்தப் பள்ளியில் இரட்டை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். அதனாலே அந்தப் பள்ளி மிகவும் பிரபலமானதாக இருந்தது. இந்த நிலையில் ஒரே வகுப்பில் படித்த இரட்டை மாணவர்களில் ஒருவர் தொடர்ந்து கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பதே படத்தின் க்ளைமேக்ஸ். இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.