Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருக்காது… அக்டோபரில் தொடங்குகிறது த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு!

Drishyam 3 Movie: நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் த்ரிஷ்யம். இந்தப் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தின் இரண்டு பாகங்கள் முன்னதாக வெளியாகியுள்ள நிலையில் தற்போது 3-வது பாகத்திற்கான படப்பிடிப்பு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருக்காது… அக்டோபரில் தொடங்குகிறது த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு!
மோகன்லால்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2025 17:10 PM

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக தன்னை 50  வருடங்களுக்கு மேலாக தன்னை நிலை நிறுத்தி வைத்துள்ளவர் நடிகர் மோகன்லால் (Mohanlal). இவர் நாயகனாக நடித்து முன்னதாக வெளியான த்ரிஷம் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது, இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக இரண்டு பாகங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் 3-வது பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் மோகன்லால் த்ரிஷ்யம் 3 குறித்து வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் மோகன்லால் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருக்காது என்றும் அக்டோபர் 2025-ம் ஆண்டு முதல் கேமராக்கள் ஜார்ஜ் குட்டியை நோக்கி திரும்ப உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் த்ரிஷ்யம் படத்தின் 3-வது பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு முதல் தொடங்க உள்ளது என்பதை தெளிவுப் படுத்தியுள்ளனர். மேலும், அடுத்த ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

த்ரிஷ்யம் 3 குறித்து நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மோகன்லால் நடிப்பில் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படம்:

இயக்குநர் ஜீத்து ஜோசஃப் எழுதி இயக்கிய படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்க நடிகை மீனா அவருக்கு ஜோடியா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், கலாபவன் ஷாஜோன், ரோஷன் பஷீர் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. எதிர்பாராத விதமாக மோகன்லாலின் மூத்த மகள் தன்னை தவறாக வீடியோ எடுத்து மிரட்டிய நபரை கொலை செய்துவிடுகிறார். அந்த கொலையை மறைக்க குடும்பமாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

முதல் பாடக் 2013-ம்  ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்தனர். தொடர்ந்து மலையாளத்தில் இரண்டாம் பாகமும் வெளியானது. அதுவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற இந்தி சினிமாவில் மட்டும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் தமிழில் இந்தப் படம் ரீமேக் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.