AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மே 10-க்குள் புதிய அரசு அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்?.. என்ன நடக்கும்?

தந்துள்ள தகவல்களின்படி, வரும் 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்கவில்லை என்றால், தமிழகத்தில் பின்வரும் சூழல்கள் உருவாக வாய்ப்புள்ளது. யாரும் பதவியேற்காத பட்சத்தில், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும், குதிரை பேரம் நடப்பதாகவும் குறிப்பிட்டு, அரசியலமைப்புச் சட்டம் Article 356-ஐ அமல்படுத்த ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை கடிதம் எழுதுவார்.

மே 10-க்குள் புதிய அரசு அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்?.. என்ன நடக்கும்?
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 May 2026 15:06 PM IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வரும் நிலையில், சட்டப்பூர்வமான காலக்கெடு நெருங்கி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 10-ஆம் தேதியுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. இந்தநிலையில், புதிய அரசு அமைவதில் நீடிக்கும் சிக்கல்கள் காரணமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்தன. இதனால், தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. விஜய் ஆட்சி அமைப்பாரா மாட்டாரா? அவருக்கு தேவையான ஆதரவு கிடைக்குமா? என இன்று காலை முதல் தமிழகமே முடிவை அறிய காத்திருக்கிறது.

இதையும் படிக்க : “தவெக வெளியிட்ட வீடியோ போலியானது”.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்”.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

மே 10க்குள் பதவியேற்காவிட்டால் என்ன நடக்கும்?

தந்துள்ள தகவல்களின்படி, வரும் 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்கவில்லை என்றால், தமிழகத்தில் பின்வரும் சூழல்கள் உருவாக வாய்ப்புள்ளது. யாரும் பதவியேற்காத பட்சத்தில், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும், குதிரை பேரம் நடப்பதாகவும் குறிப்பிட்டு, அரசியலமைப்புச் சட்டம் Article 356-ஐ அமல்படுத்த ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை கடிதம் எழுதுவார். தமிழக சட்டமன்றம் செயல்படாது; தமிழகத்திற்கான சட்டங்களை நாடாளுமன்றமே இயற்றும் நிலை உருவாகும். 6 மாதத்திற்கு ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆட்சியைப் புதுப்பித்துக்கொண்டே செல்லலாம்; அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை தேர்தல் நடத்தாமல் குடியரசுத் தலைவர் ஆட்சியில் தமிழகம் இருக்க நேரிடும். இதன் மூலம் தமிழகம் முழுமையாக டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பில்லை:

அதேசமயம், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பில்லை என சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, மாநிலத்தில் நிலையான ஆட்சி அமையுமா என்பதை ஆராய்வது ஆளுநரின் கடமையாகும். ஆட்சி அமைப்பதற்கான உரிய அவகாசத்தை வழங்கிய பிறகும், எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மட்டுமே ஜனாதிபதி ஆட்சியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதுவரை தற்போதைய காபந்து அரசே தொடர்ந்து செயல்படும்.

விஜய்யும் 118 என்ற மேஜிக் நம்பரும்:

விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை வென்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்டன. காங்கிரஸ் (5 இடங்கள்) மற்றும் இடதுசாரிகள் (4 இடங்கள்) ஆதரவு அளித்த நிலையில் தவெக-வின் பலம் 117-ஐ எட்டியது. 2 இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), கடந்த 3 நாட்களாக தனது இறுதி முடிவை அறிவிக்காமல் இழுபறி நிலையை நீடிக்கச் செய்துள்ளது.

இதையும் படிக்க : தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்

இதுநடந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி தான்:

ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வெறும் வாய்மொழி ஆதரவை ஏற்க மறுத்து, 118 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்திட்ட கடிதத்தைக் கோரியுள்ளார். விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்து கிடைத்தால் மட்டுமே விஜய்யால் ஆட்சி அமைக்க முடியும். இன்று (மே 9) மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளார். ஒருவேளை விசிக ஆதரவு அளிக்காவிட்டால், தமிழகம் தேர்தலைச் சந்திக்காமல் நேரடியாகக் குடியரசுத் தலைவர் ஆட்சிக் குடைக்குள் செல்லும் அபாயம் உள்ளது.

Follow Us