AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இது என்ன புதுசா? கை முழுவதும் மல்லிகைப்பூ.. வித்தியாசமாக வாக்கு செலுத்திய திமுக பிடிஆர்.. ஏன் தெரியுமா?

PTR Palanivel Thiaga Rajan: மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன், கையில் மதுரையின் அடையாளமான மல்லிகைப்பூவை அணிந்து வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். தேர்தல் களம் ஒரு அரசியல் நிகழ்வாக இல்லாமல், பிரிந்திருந்த உறவினர்கள் மீண்டும் இணையும் ஒரு மகிழ்ச்சியான குடும்ப விழா போன்ற சூழலில் இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது என்ன புதுசா? கை முழுவதும் மல்லிகைப்பூ.. வித்தியாசமாக வாக்கு செலுத்திய திமுக பிடிஆர்.. ஏன் தெரியுமா?
அமைச்சர் பிடிஆர்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 Apr 2026 14:02 PM IST

தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாநகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வழக்கமாக மிகவும் மிடுக்காகவும், புள்ளிவிவரங்களுடன் பேசக்கூடிய பிடிஆர், இன்று கைகளில் மல்லிகைப்பூ அணிந்தபடி வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மதுரையின் பாரம்பரியமான மல்லிகைப்பூவை கையில் ஏந்தியபடி, ஒரு சாதாரண குடிமகனாக வரிசையில் நின்று அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

மக்களின் எழுச்சியும் குடும்ப விழா போன்ற கொண்டாட்டமும்

வாக்கு செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர், கடந்த 20 முதல் 25 நாட்களாகத் தான் மதுரையில் முகாமிட்டு மக்களின் மனநிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்தார். களத்தில் உள்ள சூழல் குறித்துப் பேசிய அவர், “தற்போது நிலவும் சூழல் வெறும் தேர்தல் பிரச்சாரம் போலத் தெரியவில்லை; மாறாக இது ஒரு மிகப்பெரிய குடும்ப விழா போல உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் ஒன்று கூடும் ஒரு மறுசந்திப்பு (Reunion) போல மக்கள் எங்களை உற்சாகமாக வரவேற்கிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தொகுதி மக்களின் அமோக ஆதரவும் வெற்றிக் கணிப்பும்

மதுரை மண்ணின் மைந்தராக, மக்களின் உணர்வுகளை நன்கு அறிந்த அவர், “மக்களிடம் காணப்படும் இந்த மகிழ்ச்சியும், வரவேற்பும் ஒரு தொற்றும் வியாதி போல (Infectious) ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவி வருகிறது. இவ்வளவு நேர்மறையான மற்றும் உற்சாகமான சூழலை நான் இதுவரை கண்டதில்லை” என்றார். இந்த உற்சாகம் தேர்தலின் முடிவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகப் பிரதிபலிக்கும் என்பதில் தமக்கு எள்ளளவும் ஐயமில்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

Also Read: Tamil Nadu Election 2026 LIVE: தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வேகமாக நடக்கும் வாக்குப்பதிவு

ஜனநாயகக் கடமையும் மல்லிகைப் பூவின் பின்னணியும்

அமைச்சர் பிடிஆர் கையில் மல்லிகைப் பூவுடன் வந்து வாக்கு செலுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை என்றாலே மல்லிகைப் பூதான் நினைவுக்கு வரும் என்ற நிலையில், மண்ணின் மணத்தோடு அவர் தேர்தலை அணுகுவது மதுரைக் காரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் காட்டிய எளிமை மற்றும் தன்னம்பிக்கை, இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக, “இந்தத் தேர்தலின் முடிவுகள் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும், உற்சாகமூட்டுவதாகவும் அமையும்” என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

Follow Us