Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்று முதல் மீண்டும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி.. எப்போது வரை?

Edappadi Palanisamy Campaign: எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை ஜூலை 24, 2025 ஆம் தேதி தொடங்கினார். மூன்று நாட்கள் ஓய்வெடுத்த நிலையில், இன்று அதாவது ஜூலை 29, 2025 தேதியான இன்று மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார்.

இன்று முதல் மீண்டும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி.. எப்போது வரை?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 29 Jul 2025 10:10 AM

சென்னை, ஜூலை 29, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக தரப்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். முதற்கட்ட பிரச்சார பயணம் என்பது 2025 ஜூலை 7ஆம் தேதி தொடங்கியது. அதேபோல் ஜூலை 21 2025 அன்று முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் என்பது ஜூலை 24 2025 அன்று தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தில் முதல் நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஜூலை 25 2025 அன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து உரையாற்றினார்.

பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி:


இதற்கிடையில் தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார். அப்பொழுது பிரதமர் மோடியை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டதாகவும், அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த பேசினார். இதில் மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடியை நேரில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாஜக – திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.. தவெக தலைவர் விஜய் கண்டனம்!

இன்று முதல் மீண்டும் சுற்றுப்பயணம்:

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதன் காரணமாக ஜூலை 26, 2025 அன்று மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் என்பது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ஜூலை 26, 2025 அன்று மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 29 2025 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Also Read: தீராத மோதல்.. அன்புமணியின் நடைப்பயணத்திற்கு எதிர்ப்பு.. மீண்டும் மனு அளித்த ராமதாஸ்..

இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓய்வெடுத்த பின்பு இன்று அதாவது ஜூலை 29, 2025 தேதியான இன்று மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் என்பது ஆகஸ்ட் 8, 2025 வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.