Ahmedabad Elephant Abuse: அகமதாபாத்தில் அதிர்ச்சி! பெண் யானையை குச்சியால் கொடூரமாக தாக்கும் பாகன்.. வைரலான வீடியோவால் பரபரப்பு!
Gujarat elephant Attack: அகமதாபாத் அருகே, ஒரு ஆண் யானை பாகன் பெண் யானையை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. குஜராத் வனத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. யானை பாகன் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான யானை, ஜகந்நாத ரத யாத்திரையில் பங்கேற்றது எனத் தெரியவந்துள்ளது.

அகமதாபாத், ஜூன் 29: அகமதாபாத்தை (Ahmedabad) அடுத்த ஒரு பகுதியில் ஒரு பெண் யானையை ஒரு ஆண் பலமுறை தாக்கும் வீடியோ ஒன்று எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் வைரலானதை தொடர்ந்து குஜராத் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணையையும் குஜராத் வனத்துறை (Gujarat Forest Department) தொடங்கியுள்ளது. அந்த அதிர்ச்சிகர வீடியோவில், தாக்குதல் நடத்தும் நபர் பாதிக்கப்பட்ட யானையை (Elephant) கிட்டத்தட்ட 19 முறை குச்சியால் அடிக்கும் 43 வினாடி வீடியோ வேகமாக வைரலாக பரவியது. இது தொடர்பான வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, குச்சியால் விலங்கை அடித்ததாக வன அதிகாரிகள் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 2025 ஜூன் 27ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற 148வது ஜகன்னாத் ரத யாத்திரையின் போது, காடியாவில் உள்ள தேசாய் நி போலில் இருந்து பாபுலால் என்ற ஒற்றை ஆண் யானை, உரத்த டிஜே இசை பயந்து ஓடியது. அப்போது, பலரும் காயப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் உள்ள ஜகன்னாத் ரத யாத்திரையில் ஒரு யானை ஓடிய 2 நாட்களுக்கு பிறகு, மீண்டும் இதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.




வைரலான வீடியோ:
इतनी क्रूरता, गजराज को बांधकर मारा गया
ये वीडियो अहमदाबाद के जगन्नाथ मंदिर का बताया जा रहा है, रथयात्रा के हाथी पर ऐसी क्रूरता करनेवाले पर कार्रवाई होगी?!
pic.twitter.com/5KQwmpjLAU— Kamit Solanki (@KamitSolanki) June 28, 2025
வைரலான வீடியோவில் காயப்பட்ட யானையும் கடந்த 2025 ஜூன் 27 அன்று ரத யாத்திரை ஊர்வலத்தின் போது யானைகளுடன் இருந்ததாக கூறப்படுகிறது. யானை மீது தாக்குதல் நடந்தது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த 2025 ஜூன் 27ம் தேதி மாலையில் பரவ தொடங்கிய வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விசாரணையை தொடங்கியுள்ளோம். பெண் யானையை அடிப்பவர் ஒரு யானை பாகன் போல் தெரிகிறது. இருப்பினும், இதை நாங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளோம். யாத்திரையின்போது இந்த பெண் யானையும் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
வழக்குப்பதிவு:
வன அதிகாரிகள் அந்த யானை பாகன் மீது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் காரணாமாக, யானை பாகனுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.