AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan

1961ஆம் ஆண்டு நாகர்கோயிலில் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். மறைந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் தான் தமிழிசை சௌந்தரராஜன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த அவருக்கு, சிறுவயதில் இருந்தே அரசியலிலும், தமிழ் மொழி மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது தந்தை காங்கிரஸ் கட்சியின் தீவிர கொள்கைவாதியாக இருந்தாலும், அதற்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவில் தன்னை இணைந்து கொண்டு, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் தமிழிசை. 1999ஆம் ஆண்டு பாஜக உறுப்பினரான அவர், அடுத்த 15 ஆண்டுகளில் பாஜக மாநில தலைவரானார். பிரதமராக மோடி முதல்முறையாக 2014ஆம் ஆண்டு பதவியேற்றத்தில் முன்பாகவே, மாநில தலைவராக இவர் இருந்தார். 2019ஆம் ஆண்டு வரை பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தார். அதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு தெலங்கானாவின் ஆளுநராக பதவியேற்றார். மேலும், 2021ஆம் ஆண்டு புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியும் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது. இந்த இரண்டு உயர் பதவிகளை வகித்து வந்த தமிழிசை, ஒருமுறை கூட சட்டப்பேரவை, மக்களவை என போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலுக்காக தனது ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது, பாஜகவின் மூத்த தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் உள்ளார்.

Read More

தமிழக மக்களுக்கு தவெக அரசு கொடுத்த ஒரே பரிசு மின்வெட்டுதான்.. பொங்கிய தமிழிசை சௌந்தரராஜன்!

Tamilisai Soundararajan Criticizes Power Cut : தமிழக வெற்றி க் கழக ஆட்சியில் மின் வெட்டை மட்டும் பொது மக்களுக்கு அரசு அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தமிழிசை செளந்தர ராஜன் குற்றம் சாட்டினார் .

காங்கிரஸுக்கு முதுகில் குத்தும் குணம் உண்டு.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

சென்னை: சி.பி. ஆதித்தனாரின் 45-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதலாவதாக, மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்துள்ளனர். எனவே, அந்தத் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். மேலும், ஸ்டாலின் ஏன் அவ்வாறு கூறுகிறார் என்பதையும், அதற்கான காரணத்தையும் நாம் ஆராய வேண்டும். ஏனெனில், காங்கிரஸுடனான அனுபவம் அவருக்கு உண்டு. காங்கிரஸிற்குப் 'பின்னால் குத்தும்' (backstabbing) குணம் உள்ளது. அத்தகைய காங்கிரஸைத் தங்கள் ஆட்சியில் அவர்கள் இணைத்துக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் எவ்வாறு அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், நாம் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதனை உற்றுநோக்க வேண்டும். அதன்பின் அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!

Tamilisai Soundararajan:l தமிழகத்தில் வாக்களித்தவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில், ஓய்வின்றி ஆய்வு செய்ய வேண்டிய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஓய்வுக்காக சுற்றுலா சென்றுள்ளதாக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் விமர்சனம் செய்தார்.

ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக.. அண்ணாமலை அதிரடி.

Annamalai criticized MK Stalin : தமிழகத்தில் மு. க. ஸ்டாலினுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பிரசாரம் செய்ய வரவில்லை, அவர்கள் வந்தது தமிழகத்தில் பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என்று பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார் .

“தமிழக அரசின் கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்வு”.. வெள்ளை அறிக்கை கேட்கும் சரத்குமார்!!

Tamilnadu Assembly Election: கடன் சுமையை பாதியாக குறைத்திருக்கலாம். பல மாநிலங்களுக்கு செல்லும்போது, தமிழகத்தில் ஊழல் மிகுந்த ஆட்சி நடக்கிறது என கூறுகிறார்கள். தமிழகம் என்றாலே ஊழல் என்பதை மாற்ற வேண்டும். மத்திய அரசு 11 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழிசைக்கு ஆதரவாக பிரச்சாரம்.. களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஈரானில் துன்புற்றுக் கொண்டிருந்த நமது சகோதர சகோதரிகள், தங்கள் குடும்பத்தாரிடமும் தாய்மண்ணிற்கும் திரும்பும் ஒரு மகிழ்ச்சியான நாளாக இன்று அமைந்துள்ளது. நமது மீனவச் சகோதர சகோதரிகள் அனைவரையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். இது அவர்களுக்கு ஒரு கடினமான பயணமாக அமைந்தது; அவர்கள் ஆர்மீனியா மற்றும் பிற நாடுகளுக்குச் செல்ல 20 மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. அவர்களை ஆர்மீனியாவுக்கு அழைத்து வருவதற்காக, வெளியுறவுத் துறை அதிகாரிகள் இரவும் பகலும் அயராது உழைத்தனர். இன்று அவர்கள் ஆர்மீனியாவிலிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர். அவர்களைப் பெற்றுக்கொள்வதிலும், மீண்டும் தாயகத்திற்கு வரவேற்பதிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.” என்று தெரிவித்தார்.

பெண்கள் உயிரிழப்பில் அரசு அமைதி காப்பது ஏன்? தமிழிசை கேள்வி

Tamilisai Soundararajan Criticizes: உகாதி விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் விமர்சனம் முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டு எழுப்பினார். திமுக கூட்டணி மற்றும் மொழி விவகாரங்களில் கடுமையான விமர்சனம் செய்தார். பெண்கள் உயிரிழப்பு சம்பவங்களில் அரசியல் கட்சிகள் மௌனம் காக்கின்றன என விமர்சித்தார்.

திமுக கூட்டணியில் தோழமை கட்சிகள் நம்பிக்கை இழந்து வருகின்றன…தமிழிசை செளந்தர ராஜன் தாக்கு!

Tamilisai Soundararajan: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கும் வகிக்கும் கட்சிகள் நம்பிக்கை இழுந்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்தார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் .

பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய்.. தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!

பாஜக தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய வாகனப் பிரச்சாரத்துடன் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. 2026 தேர்தல்களுக்கான பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அமீஞ்சிக்கரையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் அறிக்கையை ஒரு கட்சி கதாநாயகன் என்கிறது. மற்றொரு கட்சி கதாநாயகி என்கிறது. ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை எல்லாவற்றுக்கும் தாயாக இருக்கும்” என்று தெரிவித்தார். 

சென்னையில் நடந்த ட்ரிபிள் மர்டர்.. சட்டம் ஒழுங்கு என்ன நிலையில் உள்ளது? அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்..

Chennai Murder: பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இது குறித்து பேசுகையில், மக்கள் அதிகமாகச் செல்லும் பகுதியில் இந்த கொலைகள் நடந்துள்ளது மிகவும் கவலைக்குரிய விஷயம் எனத் தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற மனநிலையையும் உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு திமுக நிகழ்ச்சி அல்ல – தமிழிசை குற்றச்சாட்டு

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பாஜக குறித்தும் பிரதமர் மோடியின் டெல்லி பொங்கல் குறித்தும் பேசினார். தலைநகரில் பொங்கல் கொண்டாடியதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார், மேலும் ஜல்லிக்கட்டு திமுகவின் நிகழ்ச்சி அல்ல என்றும், அது தமிழர்களின் விழா என்றும் குறிப்பிட்டார்

துப்புரவு பணியாளர்கள் செய்த பாவம் என்ன? திமுகவை கேள்விகேட்ட தமிழிசை

பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆளும் திமுக அரசை குற்றம் சாட்டினார். தேர்தல் கால ஸ்டண்டாகவே இந்த ஓய்வூதிய அறிவிப்பு என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அரசு ஊழியர்களுக்கு நல்லதுதான் ஆனாலும் துப்புரவு பணியாளர்கள் என்ன பாவம் செய்தார்களை அவர்களை திமுக அரசு நிராகரித்ததே என கேள்வி எழுப்பினார்

2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய் “போதையில்லா தமிழகம்”…பங்கமாய் கலாய்த்த தமிழிசை!

DMK Government Statement On Drug Free Tamil Nadu: திமுக அரசு தெரிவித்த போதையில்லா தமிழகம் என்ற வார்த்தையை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் 2025- ஆம் ஆண்டின் மிகப் பெரிய பொய் என்று கடுமையாக விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் ஒவ்வொருவரின் தலையில் ரூ.1.27 லட்சம் கடன்…தமிழிசை செளந்தரராஜன் கொந்தளிப்பு!

DMK Regime Everyone Has debt Rs 1.27 Lakh: திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஒவ்வொரு தமிழர்களின் தலையிலும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கடனும், ரூ.9 ஆயிரம் வட்டியும் உள்ளதாக பாஜக மூத்த தலைவரான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

நடிகர் ரோபோ சங்கர் மறைவு.. அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..

Robo Shankar Demise: நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமலை நோயால் பாதிகப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.