
Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan
1961ஆம் ஆண்டு நாகர்கோயிலில் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். மறைந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் தான் தமிழிசை சௌந்தரராஜன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த அவருக்கு, சிறுவயதில் இருந்தே அரசியலிலும், தமிழ் மொழி மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது தந்தை காங்கிரஸ் கட்சியின் தீவிர கொள்கைவாதியாக இருந்தாலும், அதற்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவில் தன்னை இணைந்து கொண்டு, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் தமிழிசை. 1999ஆம் ஆண்டு பாஜக உறுப்பினரான அவர், அடுத்த 15 ஆண்டுகளில் பாஜக மாநில தலைவரானார். பிரதமராக மோடி முதல்முறையாக 2014ஆம் ஆண்டு பதவியேற்றத்தில் முன்பாகவே, மாநில தலைவராக இவர் இருந்தார். 2019ஆம் ஆண்டு வரை பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தார். அதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு தெலங்கானாவின் ஆளுநராக பதவியேற்றார். மேலும், 2021ஆம் ஆண்டு புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியும் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது. இந்த இரண்டு உயர் பதவிகளை வகித்து வந்த தமிழிசை, ஒருமுறை கூட சட்டப்பேரவை, மக்களவை என போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலுக்காக தனது ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது, பாஜகவின் மூத்த தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் உள்ளார்.
பாஜக மேலிடம் அழைப்பு.. திடீர் டெல்லி விசிட்.. காரணத்தை சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்!
Tamilisai Soundararajan Delhi Visit : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென 2025 ஜூன் 28ஆம் தேதியான இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் பேரின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Jun 28, 2025
- 14:47 pm