
Covid 19
கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் கோவிட் -19 ஒரு தொற்று நோயாகும். இந்த வைரஸ் முதன்முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் கண்டறியப்பட்டது. சில மாதங்களில் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. உலக அளவில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். குறிப்பாக கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது அலையில் பலர் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்களை இழந்தனர். இந்த நிலையில் தற்போது கொரோனா உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தாக்குதலை ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து மற்றும் இந்தியா என பல்வேறு நாட்களில் கொரோனா பரவல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில், உலக சுகாராத நிறுவனமானது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கவலை தெரிவித்தது. உலக சுகாராத நிறுவனம் கொரோனாவின் பல புதிய வகைகள் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளது. இவற்றில், NB.1.8.1, JN.1 மற்றும் KP.2 போன்றவை ஓமிக்ரானின் துணை வகைகளாகும். NB.1.8.1 என்ற புதிய வகை கொரோனா சீனா, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் கொரோனா NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய இரண்டு துணை வகைகள் இந்தியா உட்பட பல நாடுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கொரோனா தொற்று விரைவாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொடர்பான தகவல்களை இங்கு காணலாம்.
உடலின் ஒளியால் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் கருவி – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
Scientists Create Light-Based Covid Tool : கொரோனா, எச்ஐவி போன்ற நோய்களை துல்லியமாக கண்டறியும் வகையில் லுகாஸ் எனும் புதிய கருவிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உடலில் வெளிப்படும் ஒளிகள் மூலம் நோய்களுக்கான அறிகுறிகளைக் கண்டறிந்து 25 நிமிடங்களில் துல்லியமாக முடிவுகளை வழங்கும்.
- Karthikeyan S
- Updated on: Jun 2, 2025
- 21:57 pm
மீண்டும் மீண்டுமா… 4,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. .. தமிழகத்தில் என்ன நிலை?
India Covid Cases : இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 4,000-ஐ நெருங்க உள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், கேரளாவில் அதிகபட்சமாக 1,435 ஆக பாதிப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Jun 2, 2025
- 13:24 pm
India COVID-19 Cases: கேரளாவில் கொடூர ஆட்டம்! இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. எகிறும் உயிரிழப்புகள்..!
Coronavirus Cases in India Explode: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,783 ஆக உயர்ந்துள்ளது. கேரளா (1400), மகாராஷ்டிரா (485), டெல்லி (436) ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்பு. கடந்த 9 நாட்களில் பாதிப்பு 14 மடங்கு அதிகரித்துள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். மிசோரத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. LF.7, XFG, JN.1, NB.1.8.1 என நான்கு புதிய வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
- Mukesh Kannan
- Updated on: Jun 1, 2025
- 21:01 pm
Covid 19 : இந்தியாவில் 3,395 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு.. பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!
3395 Covid Cases Filed in India | உலக அளவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் மாநில வாரியான கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: May 31, 2025
- 18:55 pm
தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஆபத்தா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
Tamil Nadu Covid Cases : இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோன வீரியம் இல்லாதது என்றும் கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிமணியன் தெரிவித்துள்ளார். மேலும், பொது இடங்களில் முகக் கவசம் அணிவந்து நல்லதே தவிர கட்டாயம் இல்லை
- Umabarkavi K
- Updated on: May 31, 2025
- 13:28 pm
வேகமெடுக்கும் கொரோனா.. 2,000-ஐ தாண்டிய பாதிப்புகள்.. தமிழகத்தில் நிலை என்ன?
India Covid Cases : நாட்டில் கொரோனா பாதிப்புகள் 2,000-ஐ தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 60 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: May 31, 2025
- 10:55 am
Face mask mandate Tamil Nadu: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மாஸ்க் அணிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!
Tamil Nadu Coronavirus: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவ உதவி நாடுமாறுவும், கை சுத்தம், சமூக இடைவெளி பராமரிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார வசதிகளில் போதுமான மருந்துகள் மற்றும் படுக்கைகள் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: May 31, 2025
- 09:09 am
COVID-19 Variant: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா.. இதுவரை 1,828 பாதிப்புகள் பதிவு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
India COVID-19: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. புதிய ஓமிக்ரான் துணை வகை NB.1.8.1 காரணமாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் 79 புதிய பாதிப்புகள், கேரளாவில் 727 பாதிப்புகள், குஜராத்தில் 6 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
- Mukesh Kannan
- Updated on: May 30, 2025
- 20:22 pm
கொரோனாவின் இந்த மோசமான அறிகுறிகள் தற்போது இல்லை – காரணம் என்ன?
Corona Symptoms : இந்தியாவில் கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில்ல கொரோனா இந்தியாவில் பரவத் துவங்கிய போது சுவை மற்றும் மணம் இழக்கும் அறிகுறிகளை பலரும் எதிர்கொண்டனர். இதற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: May 31, 2025
- 09:09 am