Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க தடை

Kutraalam Falls Floods: தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி ஆகியவற்றில் நீச்சல் தடை செய்யப்பட்டுள்ளது. மழை தொடர்வதால் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க தடை
Bathing Prohibited In All WaterfallsImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 16 Jun 2025 10:32 AM

தென்காசி ஜூன் 16: தென்காசி மாவட்டத்தில் (Tenkasi) மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் (In the Western Ghats mountains) தொடர்ச்சியாக பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு (Flooding at Courtala Falls) ஏற்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி (Main waterfall, Five waterfalls, Old Courtallam, Little waterfall) ஆகிய இடங்களில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மழை குறைந்த பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு 2025 ஜூன் 15 ஆம் தேதி நேற்று காலை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி பெற்றனர். ஆனால் நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியுள்ளது.

இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் பல சுற்றுலா பயணிகள் குளிக்க வந்தும் தடை காரணமாக ஏமாற்றமடைந்தனர். புலி அருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக மற்ற அருவிகளில் தடை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மற்றும் அதன் சுற்றியுள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை மற்றும் காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

அருவிகளில் தண்ணீர் சவுக்கென கொட்டும் நிலை காணப்படுகிறது. இதையடுத்து 2025 ஜூன் 15 நேற்று இரவு பெய்த மழையால் நீர் வரத்து மேலும் அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியுள்ளது. இதற்கிடையில், வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்திருந்ததால் நேற்று மாலை சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் பெய்த மழையால் நிலைமை மோசமாகியுள்ளது.

அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை

புலி அருவிக்கு மட்டும் அனுமதி

குற்றாலத்தில் ஸீஸன் நடந்து வருவதால் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க மாறி மாறி தடை விதித்து வருவதால் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி புலி அருவியைத் தவிர மற்ற அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்தால் அருவிகளில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

16 வயது சிறுவன் கடத்தல் விவகாரம்.. ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது..!
16 வயது சிறுவன் கடத்தல் விவகாரம்.. ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது..!...
ராசி மாறும் செவ்வாய் மற்றும் சனி... 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை
ராசி மாறும் செவ்வாய் மற்றும் சனி... 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை...
பெண் பயணியை கன்னத்தில் அறைந்த Rapido ஓட்டுநர் - வைரல்!
பெண் பயணியை கன்னத்தில் அறைந்த Rapido ஓட்டுநர் - வைரல்!...
நடிகை சோனியா அகர்வால் குறித்து ரவி கிருஷ்ணா ஓபன் டாக்
நடிகை சோனியா அகர்வால் குறித்து ரவி கிருஷ்ணா ஓபன் டாக்...
உடலில் கப தோஷம் ஏன் அதிகரிக்கிறது? குறைக்க பதஞ்சலி தரும் டிப்ஸ்!
உடலில் கப தோஷம் ஏன் அதிகரிக்கிறது? குறைக்க பதஞ்சலி தரும் டிப்ஸ்!...
அமித்ஷாவின் கருத்தே கூட்டணி நிலைப்பாடு - தமிழிசை சௌந்தரராஜன்
அமித்ஷாவின் கருத்தே கூட்டணி நிலைப்பாடு - தமிழிசை சௌந்தரராஜன்...
வெற்றிமாறன் - சிலம்பரசனின்? ஷூட்டிங் போட்டோ லீக்கானது!
வெற்றிமாறன் - சிலம்பரசனின்? ஷூட்டிங் போட்டோ லீக்கானது!...
கண்ணப்பா படக்குழுவைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
கண்ணப்பா படக்குழுவைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!...
ஹோம் லோன் வாங்க சிறந்தது எது? அரசு வங்கியா? தனியார் வங்கியா?
ஹோம் லோன் வாங்க சிறந்தது எது? அரசு வங்கியா? தனியார் வங்கியா?...
ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்...
ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்......
தெலுங்கு சினிமா குறித்து மனம் நெகிழ்ந்து பேசிய துல்கர் சல்மான்!
தெலுங்கு சினிமா குறித்து மனம் நெகிழ்ந்து பேசிய துல்கர் சல்மான்!...