AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Tourism

Tourism

இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் மரபுகளுடன் கூடிய கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது. இத்தகைய இந்திய நிலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பல இயற்கை சுற்றுலா தலங்கள் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயற்கையாக அமைந்த பல சுற்றுலா தலங்கள் இன்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 1 கோடி சர்வதேச சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. உலக சுற்றுலா அமைப்பின் மதிப்பீட்டின்படி, கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 கோடியை தாண்டுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறையில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும். உள்நாட்டு பயணத்தை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகத்தால் கடந்த 2023ம் ஆண்டு ‘விசிட் இந்தியா இயர்’ என அறிவிக்கப்பட்டது. உலக பொருளாதார மன்றத்தின் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024ல் இந்தியாவின் தரவரிசை 39 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா துறை 7% பங்களிப்பை தருகிறது. நாம் இந்த தொகுப்பில் உள்ளூர், வெளிமாநிலங்களில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றி காணலாம்.

Read More

வளைந்து நெளிந்து செல்லும் வண்டியில்… இந்தியாவின் அழகிய டாய் ரயில் பயணங்கள்!

Historic Toy Train: யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற டார்ஜிலிங் இமாலயன் இரயில்வே பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் பனிமூட்டமான கஞ்சன்ஜங்கா மலையின் அழகிய காட்சிகளை பயணிகளுக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயில் ஆசியாவின் மிகச் செங்குத்தான பாதையில் அடர்ந்த காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் வழியே நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

குற்றாலம் – மேலகரம் சாலையில் திடீர் கடைகளால் போக்குவரத்து நெரிசல்

Sudden Shops on Courtallam Road: மேலகரம் முதல் குற்றாலம் மற்றும் நன்னகரம் வரையிலான பிரதான சாலையின் இருபுறங்களிலும் திடீர் கடைகள் முளைத்துள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் தங்களது வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்துவதால், பாதசாரிகளும் மற்ற வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அருவிகளில் ஆர்ப்பரிக்கும் காட்டாற்று வெள்ளம்: பிரபல அருவிகளில் குளிக்க தொடரும் தடை

South Tamil Nadu Waterfalls: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மிக பலத்த தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் முக்கிய நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக குற்றாலம், மணிமுத்தாறு மற்றும் திற்பரப்பு ஆகிய முக்கிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தற்காலிகத் தடை விதித்துள்ளன.

பறவைகளை நெருக்கமாக பார்க்க ஆசையா? திருச்சியில் புதிய ஸ்பெஷல் ஸ்பாட்!

Trichy Bird Park: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள பறவை பூங்கா, சுற்றுலா மற்றும் இயற்கை விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய மற்றும் வண்ணமயமான பறவைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. ₹200 டிக்கெட் கட்டணத்தில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் இயற்கையை நெருக்கமாக அனுபவிக்கும் புதிய சுற்றுலா மையமாக இது மாறியுள்ளது.

சீசன் ஆரம்பம்.. ஆனால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.. என்ன காரணம்!

Ban On Bathing Courtallam : தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் குளிப்பதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

குற்றாலம்: அருவியில் குளிக்க வந்தவர்களுக்கு ஷாக்… தொடரும் தடை!

Courtallam Season: குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு காரணமாக குளிக்க தடை தொடர்கிறது. இதனால் குடும்பங்களுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். நிலைமை சீரான பிறகு குளிக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதமான காலநிலையால் களைகட்டும் குற்றாலம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

Courtallam Tourism: குற்றாலத்தில் வெயிலும் சாரல் மழையும் கலந்து வீசுவதால் ஒட்டுமொத்தப் பகுதியிலும் மிகவும் இதமான காலநிலை நிலவி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளது. வெள்ள அபாயம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ராஜபாளையம் முதல் ஜெர்மன் ஷெப்பர்ட் வரை… கொடையில் இன்று நாய் கண்காட்சி; அனுமதி முற்றிலும் இலவசம்!

Kodaikanal Flower Show: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று (மே 29, 2026) மலர் கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாகப் பிரம்மாண்ட நாய் கண்காட்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது. இக்கண்காட்சியைக் காண இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் கட்டணமில்லா இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கண்ணை பறிக்கும் கனிகளின் சங்கமம்.. குன்னூரில் நாளை தொடங்குகிறது பழக்கண்காட்சி.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

Coonoor Sims Park Fruit Exhibition: நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை பல்வேறு வகையான பழ கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியானது வருகிற மே 30- ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. கொடைக்கானலில் இந்த இடங்களை ஃப்ரீயா சுற்றி பார்க்கலாம்.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

Kodaikanal 4 Tourist Spots Visited For Free: கொடைக்கானலில் இந்த 4 சுற்றுலா இடங்களை வருகிற மே 31- ஆம் தேதி வரை கட்டணம் இன்றி இலவசமாக சுற்று பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஏற்காட்டில் களை கட்டும் கோடை விழா.. மலர் கண்காட்சி – நாய் கண்காட்சி ஸ்பெஷல்.. அதிகளவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!

Yercaud Summer Festival : சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடை விழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்கு, பல்வேறு வண்ண மலர்கள் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மின்மினி தீவாய் மாறிய ஏழைகளின் ஊட்டி.. ஏற்காட்டில் கோடை விழா கோலாகல தொடக்கம்!

Yercaud Summer Festival: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான வண்ண விளக்குகள், மலர்கள் ஆகியவை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. 7 நாள்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

செட்டிநாடு: அரண்மனை வீடுகளும் அசத்தும் கார சுவைகளும்!

Chettinad: செட்டிநாடு பிரம்மாண்ட மாளிகைகள் மற்றும் காரசாரமான உணவுகளுக்காக புகழ்பெற்றது. நாகரத்தார் பாரம்பரியம் இப்பகுதியின் கட்டிட வடிவமைப்பில் பிரதிபலிக்கிறது. செட்டிநாட்டு சமையல் மசாலா சுவையால் தனித்துவம் பெற்றுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாரம்பரிய மண்ணாக இது விளங்குகிறது. பழமையும் கலாச்சாரமும் இணைந்த இடமாக செட்டிநாடு அறியப்படுகிறது.

குயிலில் இருந்து மயில் வரை… கோடையில் காண வேண்டிய 7 பறவைகள்!

7 Bird Species: இந்தியாவில் கோடைக்காலத்தில் குயில், கிளி, மயில் உள்ளிட்ட பல வண்ணமயமான பறவைகளை எளிதாகக் காண முடியும். தோட்டங்கள், பூங்காக்கள், மரங்கள் நிறைந்த பகுதிகளில் இவை அதிகமாகத் தென்படும். சில பறவைகள் இனப்பெருக்க காலத்தால் சுறுசுறுப்பாக இயங்க, சில பறவைகள் மலர்கள் மற்றும் பூச்சிகளை உணவாகத் தேடி சுற்றும்.

தாய்லாந்து போறீங்களா? இந்த 6 தப்பு பண்ணுனா உங்க பணம் காலி..

First-Time in Thailand: தாய்லாந்து நாட்டின் கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து, கோவில்களுக்குச் செல்லும்போது முறையான ஆடைகளை அணிவதோடு புத்தர் சிலைகளையும் துறவிகளையும் கண்ணியமாக நடத்த வேண்டும். காலநிலைக்கு ஏற்ப ஆடைகளைத் தேர்வு செய்து, விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும் மையங்களில் பணப்பரிமாற்றம் செய்வதன் மூலம் தேவையற்ற நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.