AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Tourism

Tourism

இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் மரபுகளுடன் கூடிய கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது. இத்தகைய இந்திய நிலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பல இயற்கை சுற்றுலா தலங்கள் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயற்கையாக அமைந்த பல சுற்றுலா தலங்கள் இன்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 1 கோடி சர்வதேச சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. உலக சுற்றுலா அமைப்பின் மதிப்பீட்டின்படி, கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 கோடியை தாண்டுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறையில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும். உள்நாட்டு பயணத்தை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகத்தால் கடந்த 2023ம் ஆண்டு ‘விசிட் இந்தியா இயர்’ என அறிவிக்கப்பட்டது. உலக பொருளாதார மன்றத்தின் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024ல் இந்தியாவின் தரவரிசை 39 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா துறை 7% பங்களிப்பை தருகிறது. நாம் இந்த தொகுப்பில் உள்ளூர், வெளிமாநிலங்களில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றி காணலாம்.

Read More

இந்தியாவில் இப்படி ஒரு அழகு இருக்கா? 2026ல் டிரெண்டாகும் இடங்கள்

India Architectural Wonders: இந்தியாவின் பழமையான கட்டிட அதிசயங்கள் உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. ராப்டென்சே, சம்பானேர், முருட் ஜஞ்சிரா மற்றும் ஷாலிமார் பாக் போன்ற இடங்கள் வரலாற்று சிறப்பை வெளிப்படுத்துகின்றன. தனுஷ்கோடி போன்ற இடங்கள் இயற்கை மற்றும் வரலாற்றின் இணைப்பாக திகழ்கின்றன.

இந்தியாவின் பழமையான அரண்மனை எங்கே இருக்கிறது?

Indias Oldest Palace: பத்மநாபபுரம் அரண்மனை இந்தியாவின் பழமையான அரண்மனை என கருதப்படுகிறது. இது 16ஆம் நூற்றாண்டில் திராவண்கூர் அரசர்களால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்தாலும் கேரள அரசு பராமரிக்கிறது. மர கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் இதன் சிறப்பு. அரசர் மன்றம் மற்றும் நடன அரங்கம் முக்கிய பகுதிகள். சுற்றுலா பயணிகள் பார்வையிட திறந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரை செல்ல சிறந்த காலம்.

மலையோர மாளிகையில் ஒரு சொர்க்கம்: உதய்பூரின் புதிய அதிசயம் Fairmont!”

Fairmont Udaipur Palace: அரவள்ளி மலைகளில் இயற்கையை பாதுகாத்து கட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய அரண்மனை தோற்றத்துடன் நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. உள்துறை அலங்காரத்தில் ராஜஸ்தானி கலை மற்றும் கைவினை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு பொருளும் தனித்துவமான கதையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தை வடிவங்கள் இயற்கை தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

மாறிவரும் சுற்றுலா முறை: இந்தியர்களின் புதிய பயண ட்ரெண்ட் என்ன?

Solo Travel vs Family Vacationஇந்தியர்களின் பயணக் கலாச்சாரம் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. வெறும் இடங்களைப் பார்ப்பதோடு நின்றுவிடாமல், பயணத்தைத் திட்டமிடும் முறையிலேயே மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். குடும்பச் சுற்றுலாக்கள் இப்போதும் முதலிடத்தில் இருந்தாலும், நண்பர்களுடனும் தனியாகவும் பயணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

பாஸ்போர்ட் இல்லாமலேயே ஐரோப்பா செல்ல ஆசையா? இதோ இந்தியாவில் இருக்கும் இடங்கள்!

Europe-like Places: இந்தியாவில் இருந்தபடியே ஐரோப்பா போன்ற அனுபவத்தை பெற முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக, சமீபத்தில் வெளியான தகவல்கள் சில ஆச்சர்யமான சுற்றுலா இடங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. வெளிநாட்டு செலவுகளும், விசா சிக்கல்களும் இல்லாமல், இந்தியாவின் சில பகுதிகள் இயற்கை அழகிலும் கட்டிடக் கலைப்பாணியிலும் ஐரோப்பிய தோற்றத்தை தருகின்றன.

மலைகளின் இளவரசியில் அதிரடி மாற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட நிர்வாகம்!

New Ticket System Issues: கொடைக்கானலில் புதிய கட்டண முறையால் நெரிசல் அதிகரித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தனித்தனியாக கட்டணம் வசூலிக்க கோரிக்கை வைத்தனர். இதனால் ஏற்பட்ட சிக்கலை சமாளிக்க இரண்டு நாட்களுக்கு இலவச அனுமதி அறிவிக்கப்பட்டது. பயணிகள் சிரமம் குறைய புதிய மாற்று ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

சில்லென்ற நீர்வீழ்ச்சி.. சிலிர்க்க வைக்கும் பரிசல் பயணம்: ஒகேனக்கல் சுற்றுலா செல்லத் தயாரா?

Hogenakkal Falls: இந்தியாவின் நயாகரா எனப்படும் ஒகேனக்கல் செல்ல தற்போது சிறந்த பருவம் தொடங்கியுள்ளது. இங்குள்ள பரிசல் பயணம் மற்றும் சுவையான மீன் உணவுகள் பயணிகளுக்குச் சிறந்த அனுபவத்தைத் தருகின்றன. குடும்பத்தினருடன் வார விடுமுறையைக் கழிக்க ஒகேனக்கல் ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும்.

கோவை டூ காஷ்மீர்: மிகக்குறைந்த விலையில் IRCTC-யின் ‘ஜில்’ என ஒரு விமான சுற்றுலா!

IRCTC Kashmir Tour: கோவையிலிருந்து காஷ்மீர் செல்லத் துடிக்கும் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி! இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) கோடை காலத்தை முன்னிட்டு மிகக் குறைந்த செலவில் ஒரு அட்டகாசமான விமான சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

நீச்சல் தெரியாதவர்களுக்கும் சொர்க்கமாகும் மாலத்தீவு… ஏன் தெரியுமா?

Memorable Maldives Vacation: மாலத்தீவில் நீச்சல் தெரியாதவர்கள் கண்ணாடி தரை கொண்ட படகுகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் கடலடி அதிசயங்களை நனையாமல் ரசிக்கலாம்; கரையில் இருந்தபடியே ஆழமற்ற நீரில் வண்ண மீன்களைக் காண்பதுடன், கடலுக்கு அடியில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சுவையான உணவுகளை உண்டு மகிழலாம்.

சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் சங்கமிக்கும் மாலை.. கன்னியாகுமரியில் நாளை நிகழும் அபூர்வ காட்சி.. மிஸ் பண்ணிடாதீங்க!

Kanyakumari Sun Set And Moon Rise: கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகி, சந்திரன் உதயமாகும் அரிய காட்சி நாளை நிகழ உள்ளது. இதனை காண்பதற்காக, ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

நீலகிரிக்கு சுற்றுலா போறீங்களா? இந்த ரூட்ல போக முடியாது.. போலீசாரின் புதிய டிராப்பிக் ரூல்ஸ் இதோ!

Nilgiris Traffic Changes : நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மே 1- ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

ஏழைகளின் ஊட்டி: பட்ஜெட் பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் ஏற்காடு!

Yercaud: தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு, "ஏழைகளின் ஊட்டி" என்று அழைக்கப்படுவதோடு மிகக் குறைந்த செலவில் இயற்கை எழிலை ரசிக்க ஏற்ற இடமாகத் திகழ்கிறது. இங்குள்ள எமரால்டு ஏரி மற்றும் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி ஆகியவை பயணிகளுக்குப் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தைத் தருவதுடன், லேடிஸ் சீட் போன்ற இடங்களிலிருந்து சேலம் நகரின் அழகை ரசிக்க முடியும்.

வாட்டி வதைக்கும் கோடை வெயில்.. 50 அடி உயரத்தில் இருந்து விழும் அதிசய அருவி.. படகு சவாரியுடன் பக்காவான இடம்!

Thirparappu Waterfalls: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திற்பரப்பு சுற்றுலா தலம் மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு, 50 அடி உயரத்தில் இருந்து விழும் அருவி, படகு சவாரி, பழைமையான சிவன் கோயில், சிறுவர்களுக்கான நீச்சல் குளம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

வானுயர வளர்ந்திருக்கும் மரங்கள்.. தவழ்ந்திருக்கும் கொடிகள்.. ஆனந்தமான பரிசல் பயணம்.. ஈரோடு அருகே சூப்பர் ஸ்பாட்!

Kodiveri Dam Tourist Spot: தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒன்டே ட்ரிப்புக்கு ஏற்ற இடமாகவும், குறைந்த பட்ஜெட்டில் சென்று வரக்கூடிய இடமாகவும் விளங்கி வருகிறது கொடிவேரி அணைக்கட்டு பகுதி.

மக்களே கோடை விழாவுக்கு தயாரா.. கண்களை கட்டி இழுக்கும் வண்ண மலர்கள்.. விரைவில் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி!

Ooty Botanical Garden Flower Exhibition : ஊட்டியில் கோடை விழாவில் மலர்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்கள் அலங்கரித்து வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .