Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Tourism

Tourism

இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் மரபுகளுடன் கூடிய கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது. இத்தகைய இந்திய நிலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பல இயற்கை சுற்றுலா தலங்கள் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயற்கையாக அமைந்த பல சுற்றுலா தலங்கள் இன்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 1 கோடி சர்வதேச சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. உலக சுற்றுலா அமைப்பின் மதிப்பீட்டின்படி, கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 கோடியை தாண்டுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறையில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும். உள்நாட்டு பயணத்தை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகத்தால் கடந்த 2023ம் ஆண்டு ‘விசிட் இந்தியா இயர்’ என அறிவிக்கப்பட்டது. உலக பொருளாதார மன்றத்தின் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024ல் இந்தியாவின் தரவரிசை 39 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா துறை 7% பங்களிப்பை தருகிறது. நாம் இந்த தொகுப்பில் உள்ளூர், வெளிமாநிலங்களில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றி காணலாம்.

Read More

புனித ஸ்தலங்களுக்கு போறீங்களா? தமிழக அரசு ரூ.10000 அறிவிப்பு…

Tamil Nadu announces: தமிழ்நாடு அரசு, 120 சிறுபான்மையினருக்கான புனித பயண நிதி உதவியாக 12 ரூபாய் இலட்சம் வழங்குகிறது. பயணிக்க விரும்புபவர்கள் www.bcmbcmw.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ECS மூலம் நேரடி பணமாற்றம் செய்யப்பட்டு பயணிகள் பயனடைவார்கள். பயணத்திற்கான முக்கிய தலங்கள் இந்தியா மற்றும் நேபாளம், பாகிஸ்தானில் உள்ளன.

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: ஊட்டியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் மூடல்!

Heavy Rain Closes Major Tourist Spots: நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நிலச்சரிவு, வெள்ளம், மரங்கள் விழுதல் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் பெறுகின்றன. முதன்மை இடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் தங்களது திட்டங்களை ஒத்திவைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோவளம் பகுதியில் குவிந்த பூநாரைகள்: சென்னை பறவை ஆர்வலர்களுக்கு ஓர் அரிய விருந்து!

Flamingos Flock to Kovalam Estuary: சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் பூநாரைகள் அதிகமாக காணப்படுவது வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. உணவின் கிடைப்பும், அமைதியான சூழலும் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இது கோவளத்தின் பல்லுயிர் பெருக்கத்திற்கு நல்ல அறிகுறியாகும்.

உலகின் பழமையான நாடு எது? – இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா அல்ல… ஆச்சரியப்படுத்தும் புதிய நாடு எது?

World's Oldest Country: உலகின் பழமையான நாடு எது என்பது பலரது கேள்வி. பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில், ஈரான் கி.மு. 3200 முதல் தொடர்ச்சியான அரசாங்கத்தைக் கொண்டிருப்பதாக World Population Review கூறுகிறது. எகிப்து, இந்தியா போன்ற பிற பழமையான நாடுகளுடன் ஈரானின் வரலாற்றையும், தொடர்ச்சியான தேசிய அடையாளத்தையும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

நீலகிரி: ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்- சுற்றுலாப்பயணிகள் அச்சம்.. வனத்துறையின் நடவடிக்கை என்ன?

Gudalur Wild Elephants: கூடலூர் மற்றும் முதுமலை கிராமங்களில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக ஊருக்குள் நுழைந்து பயிர்கள் மற்றும் வீடுகளில் சேதம் விளைவிக்கின்றன. பொதுமக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். வனத்துறையினர் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஷ்மீரின் வூலர் ஏரியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூத்த தாமரைகள்…

Wular Lake's Lotus Bloom: காஷ்மீரின் வூலர் ஏரியில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாமரை மலர்கள் மீண்டும் பூத்திருப்பது, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அழிந்ததாகக் கருதப்பட்ட தாமரைகள் மீண்டும் பூத்திருப்பது, ஏரியின் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மேம்பட்டு வருவதற்கான நம்பிக்கையான அறிகுறியாகும்.

குற்றால சாரல் திருவிழா… எப்போது தொடங்கும்.? வெளியான அறிவிப்பு

Charal Festival Opening Ceremony: குற்றால சாரல் திருவிழா 2025 ஜூலை 19 முதல் 27 வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. மலர்க் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் என தினந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் மறைந்திருக்கும் சுரங்கங்கள்..!

Secret Tunnels of Famous Landmarks: உலகின் பல புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள், அவற்றின் அழகிற்கு அடியில் ரகசிய சுரங்கப்பாதைகளைக் கொண்டுள்ளன. இவை அரசர்களின் தப்பிக்கும் வழிகள், பொருட்கடத்தல் பாதைகள் அல்லது ரகசிய சந்திப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். வெர்சாய் அரண்மனை, ரோமன் கொலோசியம், பிராம் கோட்டை போன்றவை இதற்குச் சான்று.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் செல்வோரா நீங்கள்..? வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

Coonoor-Mettupalayam Road: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி தோன்றுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. பலாப்பழ சீசனால் யானைகள் சாலையை கடந்து வாகனங்களை துரத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மாமரம் பகுதியில் குட்டியுடன் நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன.

ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல் காவிரி… அருவியில் குளிக்க 11-வது நாளாக தொடரும் தடை

Hogenakkal Cauvery Flow Rises: ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 50,000 கனஅடி நீர் வரத்து பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, ஐந்தருவி மற்றும் சின்ன பால்ஸ் உள்ளிட்ட அருவிகள் முழுமையாக மூழ்கியுள்ளன. பாதுகாப்பு கருதி குளிக்கும் மற்றும் பரிசல் சவாரிக்கு தடை தொடர்கிறது. பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்கூபா டைவிங் என்றால் என்ன? இந்தியாவில் எங்கெல்லாம் செய்யலாம்?

Best Scuba Diving Spots : ஸ்கூபா டைவிங் பலருக்கும் பிடித்த விஷயம். இந்தியாவில் ஸ்கூபா டைவிங் செய்ய சிறந்த இடங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். எந்தெந்த இடங்கள் பிரபலமான ஸ்கூபா டைவிங் இடங்களாக உள்ளன. அவற்றின் சிறப்புகள், சிறந்த நேரங்கள் மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் என்னவென்பதை பார்க்கலாம்

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு: ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து!

Rameswaram train cancel: சத்திரக்குடி பகுதியில் நடைப்பெறும் பராமரிப்பு பணிக்காக ராமேஸ்வரத்திற்கு பகல் நேர ரயில்கள் 2025 ஜூலை 1 முதல் ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வர–மதுரை மற்றும் ராமேஸ்வர–திருச்சி ரயில்கள் வார இறுதி மற்றும் ஆடி அமாவாசை தவிர மற்ற நாட்களில் இயங்காது. 2025 ஜூலை 4 முதல் வாரந்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஈரோடு: ரூ. 5 போதும்… நாள் முழுக்க கொடிவேரி அணையில் கொண்டாடலாம்…

Explore Kodiveri Dam: கோபி அருகிலுள்ள கொடிவேரி அணை, ஈரோட்டின் பிரபல சுற்றுலாத் தலமாக வளர்ந்து வருகிறது. ரூ.5 என்ற குறைந்த கட்டணத்தில், அழகிய அருவி, மணல் பரப்பு, சிறுவர் பூங்கா என பல்வேறு வசதிகளை அனுபவிக்கலாம். 2025 ஏப்ரல்-மே மாதங்களில் 3 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். குறைந்த செலவில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் இடம் இது.

கர்நாடகா: நந்தி மலைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை.. காரணம் என்ன?

Karnataka Bans Tourist Entry to Nandi Hills: கர்நாடகாவின் நந்தி மலைக்கு 2025 ஜூன் 30 முதல் ஜூலை 3 வரை சுற்றுலாப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 2-ஆம் தேதி அங்கு நடைபெறும் மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 அழகிய ரயில்வே பாலங்கள்..!

India's Top 5 Stunning Railway Bridges: இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்று. இந்தக் கட்டுரையில், பம்பன், செனாப், ஜார்ஜ், மண்டோவி, டிரம்பட் போன்ற 5 அற்புத ரயில் பாலங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அவை எங்கே அமைந்துள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.