
Tourism
இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் மரபுகளுடன் கூடிய கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது. இத்தகைய இந்திய நிலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பல இயற்கை சுற்றுலா தலங்கள் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயற்கையாக அமைந்த பல சுற்றுலா தலங்கள் இன்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 1 கோடி சர்வதேச சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. உலக சுற்றுலா அமைப்பின் மதிப்பீட்டின்படி, கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 கோடியை தாண்டுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறையில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும். உள்நாட்டு பயணத்தை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகத்தால் கடந்த 2023ம் ஆண்டு ‘விசிட் இந்தியா இயர்’ என அறிவிக்கப்பட்டது. உலக பொருளாதார மன்றத்தின் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024ல் இந்தியாவின் தரவரிசை 39 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா துறை 7% பங்களிப்பை தருகிறது. நாம் இந்த தொகுப்பில் உள்ளூர், வெளிமாநிலங்களில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றி காணலாம்.
கொல்லி மலைக்கு ரூ.450க்கு ஒருநாள் சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம்… விவரம் உள்ளே..!
Kolli Hills Tour Package: கொல்லி மலையில் ஒரு நாள் சுற்றுலாவுக்கு ரூ.450-க்கு ஒரு சிறப்பு பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் அடங்கும். அறப்பளீஸ்வரர் கோவில், நம்ம அருவி போன்ற முக்கிய இடங்களைப் பார்வையிடலாம். பட்ஜெட் பயணிகளுக்கு இது மிகவும் சிறந்த வாய்ப்பு.
- Sivasankari Bose
- Updated on: May 12, 2025
- 18:46 pm
கோடை விடுமுறையில் தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலாத் தலங்கள்
Tamilnadu Toursit Place: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுக்க மக்கள் தயாராகி வருகின்றனர். பயண முகவர்கள் கோடை காலத்தில் தமிழ்நாட்டில் அதிகம் விரும்பப்படும் மற்றும் பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலா இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த பட்டியலில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்கள் முதல் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் வரை பலவும் இடம்பெற்றுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: May 10, 2025
- 14:10 pm
கண்கொள்ளாக் காட்சி: தென்காசிக்கு அருகே இப்படி ஒரு இடமா?
Palaruvi Waterfalls: கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலருவி நீர்வீழ்ச்சி, "பால் ஆறு" என அழைக்கப்படும் அழகிய இயற்கை அதிசயம். சுமார் 300 அடி உயரத்திலிருந்து கொட்டும் வெள்ளை நீர், அடர்ந்த வனப்பகுதியின் அழகை மேலும் அலங்கரிக்கிறது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்திலிருந்து எளிதாகச் செல்லலாம். குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம். ஆண்டு முழுவதும் மிதமான காலநிலை.
- Sivasankari Bose
- Updated on: May 6, 2025
- 11:43 am