Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Tourism

Tourism

இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் மரபுகளுடன் கூடிய கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது. இத்தகைய இந்திய நிலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பல இயற்கை சுற்றுலா தலங்கள் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயற்கையாக அமைந்த பல சுற்றுலா தலங்கள் இன்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 1 கோடி சர்வதேச சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. உலக சுற்றுலா அமைப்பின் மதிப்பீட்டின்படி, கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 கோடியை தாண்டுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறையில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும். உள்நாட்டு பயணத்தை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகத்தால் கடந்த 2023ம் ஆண்டு ‘விசிட் இந்தியா இயர்’ என அறிவிக்கப்பட்டது. உலக பொருளாதார மன்றத்தின் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024ல் இந்தியாவின் தரவரிசை 39 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா துறை 7% பங்களிப்பை தருகிறது. நாம் இந்த தொகுப்பில் உள்ளூர், வெளிமாநிலங்களில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றி காணலாம்.

Read More

வட இந்தியாவில் கண்டறிய வேண்டிய 10 அழகான மலைவாசஸ்தலங்கள்.. என்னென்ன?

10 Stunning North India Hill Stations: வட இந்தியாவின் அழகிய மலைவாசஸ்தலங்கள் பற்றிய இந்தக் கட்டுரை, சிம்லா, மணாலி, லே போன்ற புகழ்பெற்ற இடங்களையும், குஃப்ரி, டல்ஹவுசி போன்ற அமைதியான இடங்களையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு இடத்தின் தனித்துவ அம்சங்கள், சுற்றுலா ஈர்ப்புகள் மற்றும் சாகசச் செயல்பாடுகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் கடலில் இறங்க, குளிக்க இருந்த தடை நீக்கமா? வெளியான அறிவிப்பு

Kanyakumari Sea Ban Lifted: கடந்த நாட்களில் கன்னியாகுமரியில் கடுமையான கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு கடலில் இறங்கத் தடை விதிக்கப்பட்டது. தற்போது கடல் அலைகள் சமநிலை அடைந்துள்ளதால், தடை நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இத்தனையா? கலாச்சார, ஆன்மீக, இயற்கை அழகின் சங்கமம்..!

Tamil Nadu Tourism: தமிழ்நாடு, அதன் செழிப்பான கலாச்சாரம், ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றால் பிரபலமானது. சென்னை, மதுரை, காஞ்சிபுரம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்தக் கட்டுரை, தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துகிறது.

மேகாலயாவில் கண்டறிய வேண்டிய 10 அழகான சுற்றுலாத் தலங்கள்.. லிஸ்ட் இதோ..!

Explore Meghalaya: மேகாலயாவின் அழகிய இயற்கை எழிலை அனுபவிக்க 10 அற்புதமான இடங்களை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. உமியம் ஏரி, யானை நீர்வீழ்ச்சி, மாவ்லிங்னாங் கிராமம், தாக்கி ஆறு, நொஹ்காலிகாய் நீர்வீழ்ச்சி, கிராங் சூரி நீர்வீழ்ச்சி மற்றும் போலீஸ் பஜார் ஆகியவை இதில் அடங்கும். ஒவ்வொரு இடத்தின் தனித்துவமான அம்சங்கள் மற்றும் சுற்றுலா அனுபவங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பிரம்மாண்டமாக வருகிறது வொண்டர்லா தீம் பார்க்…

Wonderla Chennai: சென்னை புறநகரில் ரூ.510 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய வொண்டர்லா தீம் பார்க், மோனோரயில், பிரம்மாண்ட ராட்சத சக்கரம் உள்ளிட்ட உலகத் தரமான சவாரிகளை வழங்க உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டரும் இங்கு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும்.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க தடை

Kutraalam Falls Floods: தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி ஆகியவற்றில் நீச்சல் தடை செய்யப்பட்டுள்ளது. மழை தொடர்வதால் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி: ஆர்ப்பரிக்கும் கடல் அலை… தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு

Kanyakumari Sea Warning: கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் அதிகரித்து வரும் கடல் சீற்றத்தால், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஊட்டி மலை ரயிலின் 125 ஆண்டுகளான வரலாற்றுப் பயணம் – ஒரு பாரம்பரியப் பயணக் கதை!

Ooty Hill Train: நீலகிரி மலை ரயில் தனது 125வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1899 ஜூன் 15 அன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே தொடங்கிய இந்த ரயில், 'ரேக் பினியன்' தொழில்நுட்பத்தால் தனித்துவமானது. சுவிட்சர்லாந்து நீராவி என்ஜின்களைப் பயன்படுத்தி, 2005ல் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆடி மாத ஆன்மிகப் பயணம் – இலவசமா? யார் விண்ணப்பிக்கலாம்? அமைச்சர் சேகா்பாபு சொன்ன தகவல்

Free Spiritual Tour: தமிழ்நாட்டில் ஆடி மாதத்தை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு 60–70 வயதுக்குட்பட்ட ஹிந்து மதத்தவருக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் உள்ளோர் 2025 ஜூலை 11க்குள் விண்ணப்பிக்கலாம். பயணங்கள் 2025 ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 15 வரை ஐந்து நாள்களாக நடைபெறும்.

சென்னை அருகே ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற அமைதியான இடங்கள்..!

Best Day Trips from Chennai: சென்னை நகரின் பரபரப்பில் இருந்து ஒரு நாள் விடுமுறை தேடுபவர்களுக்கு, நாகரி, நாகலாபுரம், மாமண்டூர், கஞ்சனகிரி போன்ற அருகிலுள்ள மலைப் பகுதிகள் சிறந்த தேர்வாகும். இவை மலையேற்றம், நீர்வீழ்ச்சிகள், பறவைகள் பார்வை மற்றும் அமைதியான சூழல் ஆகியவற்றை வழங்குகின்றன.

கொடைக்கானலில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்ன இடம் அது?

Hidden Gems Near Kodaikanal: கொடைக்கானலுக்கு அருகில் அமைந்துள்ள பூம்பாறை மற்றும் சிறுமலை ஆகிய இடங்கள், இயற்கை அழகால் சிறந்து விளங்குகின்றன. பூம்பாறையில் பழங்கால முருகன் கோவில் மற்றும் மண் வீடுகள் காணப்படுகின்றன. சிறுமலை, 'குட்டி கொடைக்கானல்' என அழைக்கப்பட்டு, அமைதியான சூழலையும், பல்லுயிர் பெருக்கத்தையும் கொண்டுள்ளது.

புதுச்சேரி முருகப்பாக்கம் அலையாத்தி காடுகள்: ஒரு குளுமையான படகுப்பயணம்..!

Explore Murugapakkam Mangroves: புதுச்சேரியில் உள்ள முருகப்பாக்கம் அலையாத்தி காடுகள் கோடைக்காலத்தில் குளிர்ச்சியான அமைதியான இடமாகும். படகுச் சவாரி மூலம் அலையாத்தி மரங்களின் அழகை ரசிக்கலாம். இது பறவைகள் சரணாலயமாகவும், புகைப்பட ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாகவும் உள்ளது. இயற்கை சீற்றங்களில் இருந்து கடலோரங்களை பாதுகாக்கும் அலையாத்தி மரங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகின்றன.

தமிழக சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல்: 22 சுற்றுலா தலங்களில் ஒலி வழிகாட்டுதல் வசதி!

Audio Tours of Tamil Nadu: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC), மாநிலத்தின் 22 முக்கிய சுற்றுலாத் தளங்களில் புதிய ஒலி வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டம், பார்வையாளர்களுக்கு இடங்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் முக்கியத்துவம் பற்றிய ஆழமான புரிதலை வழங்கும்.

தமிழகத்தின் அமைதியான சுற்றுலா தலங்கள் என்னென்ன..?

Find Inner Peace: தமிழகத்தின் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் மன அமைதியைத் தேடிப் பயணம் செய்ய விரும்புவோருக்கு, கொடைக்கானல், ஏற்காடு, வால்பாறை, குற்றாலம், பிச்சாவரம், மகாபலிபுரம் மற்றும் ஊட்டி போன்ற 8 அற்புதமான இடங்கள் உள்ளன. இயற்கையின் அழகை ரசித்து, மனதிற்கு நிம்மதியைப் பெற இவை சிறந்த தேர்வாகும்.

கேரளாவின் செந்தூருணி காட்டில் ஒரு சாகச மலையேற்ற அனுபவத்திற்கு நீங்கள் தயாரா?

Thenmala Eco-Tourism: தென்மலை, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் சூழல் சுற்றுலாத் தலம். செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தில் மலையேற்றம், படகு சவாரி, பாறை ஏறுதல் போன்ற பல்வேறு சாகசங்கள் காத்திருக்கின்றன. பசுமையான வனங்கள், அமைதியான சூழல், அழகிய நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அன்னை அளித்த அற்புதங்களை அனுபவிக்கலாம்.