AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல் காவிரி… அருவியில் குளிக்க 11-வது நாளாக தொடரும் தடை

Hogenakkal Cauvery Flow Rises: ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 50,000 கனஅடி நீர் வரத்து பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, ஐந்தருவி மற்றும் சின்ன பால்ஸ் உள்ளிட்ட அருவிகள் முழுமையாக மூழ்கியுள்ளன. பாதுகாப்பு கருதி குளிக்கும் மற்றும் பரிசல் சவாரிக்கு தடை தொடர்கிறது. பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல் காவிரி… அருவியில் குளிக்க 11-வது நாளாக தொடரும் தடை
ஒகேனக்கல் காவிரிImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Jul 2025 08:14 AM IST

தருமபுரி ஜூலை 05: ஒகேனக்கல் காவிரியில் (Okenakkal Cauvery) வினாடிக்கு 50,000 கனஅடி அளவுக்கு நீர்வரத்து பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, ஐந்தருவி மற்றும் சின்ன பால்ஸ் (Aintharuvi and Chinna Falls) உள்ளிட்ட அருவிகள் முழுமையாக மூழ்கியுள்ளன. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இத்தடை 11-வது நாளாக தொடர்ந்து அமலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் காவிரி கரையோரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தற்காலிகமாக ஒகேனக்கல் பயணத்தை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடரும் இடியுடன் கூடிய கனமழை

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் நீர்மட்டம் உயரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களால் உபரிநீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

தற்போதைய நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக, ஐந்தருவி மற்றும் சின்ன பால்ஸ் எனும் பிரபல அருவிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக, மாவட்ட நிர்வாகம் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடையை விதித்துள்ளது. இத்தடை 11-வது நாளாக தொடர்ந்து அமலில் உள்ளது.

11-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

மேலும், காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தும் வகையில் போலீசார், ஊர்காவல் படையினர், வருவாய் துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய நீர்வளத்துறையும் பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக, மாவட்ட நிர்வாகம் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடையை விதித்துள்ளது. இத்தடை 11-வது நாளாக தொடர்ந்து அமலில் உள்ளது.

முக்கிய அறிவிப்பு

மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில், சுற்றுலா பயணிகள் தற்காலிகமாக ஒகேனக்கல் பயணத்தை தவிர்க்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Follow Us