AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் செல்வோரா நீங்கள்..? வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

Coonoor-Mettupalayam Road: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி தோன்றுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. பலாப்பழ சீசனால் யானைகள் சாலையை கடந்து வாகனங்களை துரத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மாமரம் பகுதியில் குட்டியுடன் நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் செல்வோரா நீங்கள்..? வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
காட்டு யானைகள்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Jul 2025 09:30 AM IST

நீலகிரி ஜூலை 05: நீலகிரி மாவட்டம் (Ooty) கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் (Kotagiri-Mettupalayam road) காட்டு யானைகள் (Wild elephants) அடிக்கடி தோன்றி வருகின்றன. பலாப்பழங்கள் பழுத்திருப்பதால், சமவெளி பகுதிகளிலிருந்து யானைகள் இப்பகுதிக்கு வருகின்றன. யானைகள் சாலையை கடந்து வாகனங்களை துரத்தும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. மாமரம் பகுதியில் குட்டியுடன் நான்கு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானைகளின் நடமாட்டம் குறித்த முன்னறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.

குஞ்சப்பனை பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடக்கம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை ஒட்டியுள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு கூட்டம், கூட்டமாக வருகை தருகின்றன. குறிப்பாக, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்போது யானைகள் சுற்றித் திரிந்து வருவதால் அந்த வழியாக செல்வோர் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் முகாம்

மாறி மாறி பயணம் செய்யும் யானைகள், வாகனங்களை துரத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மாமரம் பகுதியில் குட்டியுடன் உள்ள நான்கு யானைகள் அந்தச் சாலைக்கு அருகில் முகாமிட்டு இருப்பது பதிவாகியுள்ளது. இதனையடுத்து, வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த சாலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். பாதுகாப்பு கருதி வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்

பலாப்பழங்களை தேடி வந்த காட்டு யானைகள், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையை அடிக்கடி கடந்து வருகின்றன. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்லும் போது அதிக கவனத்துடன் பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், விலங்குகளின் அசைவுகளை முன்னிட்டு, வாகனங்களை மெதுவாகவும், கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு காரணமாக தேவையில்லாத சத்தங்கள், ஹாரன் போன்றவற்றை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலை

கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே உள்ள சாலை (மாநில நெடுஞ்சாலை எண் 15) நீலகிரி மாவட்டத்தில் அமைந்த முக்கிய மலை சாலை ஆகும். இந்த சாலை சுமார் 31.4 கிலோமீட்டர் தூரம் கொண்டது. வேகமான பயணத்தில் சுமார் 30 நிமிடங்களில் பயணிக்க முடியும். மண் சரிவுகளைத் தடுக்கும் நோக்கில், குஞ்சப்பனை-கோத்தகிரி சாலையில் “soil nailing” தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சாலையில் பயணம் செய்வது இயற்கை நிழல்களில் இயங்குவது போன்ற அனுபவத்தை தருகிறது. கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் இதில் அடங்கும்.

Follow Us