AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“முதல்வர் சொன்னாலும் அனுமதி கிடையாது!”.. திமுக-வுக்கு வாய்ப்பளிக்க சபாநாயகர் மறுப்பு.. பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு!

Tamilnadu Assembly Drama: "முதலமைச்சர் அனுமதிக்கச் சொன்னாலும், கூச்சல் போட்ட எதிர்க்கட்சிக்குப் பேச அனுமதி அளிக்க முடியாது" எனச் சபாநாயகர் கறாராக மறுத்துவிட்டார். முதலமைச்சர் உரைக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்த திமுகவின் போக்கைக் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குப் பேச வாய்ப்பளிக்கச் சபாநாயகர் மறுத்ததால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

“முதல்வர் சொன்னாலும் அனுமதி கிடையாது!”.. திமுக-வுக்கு வாய்ப்பளிக்க சபாநாயகர் மறுப்பு.. பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு!
திமுக அவையில் அமளி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Sep 2026 12:08 PM IST

சென்னை, செப்டம்பர் 07: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் உரையாற்றி முடித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினருக்குப் பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது தொடர்பாகப் பேரவையில் கடும் விவாதம் எழுந்தது. காலையிலிருந்தே முதலமைச்சரின் உரைக்கு தடையாகவும், பேரவை விதிகளுக்கு மாறாகவும் கூச்சலிட்டு இடையூறு விளைவித்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவை முன்னவர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இருப்பினும், “எதிர்க்கட்சியினர் பேச அனுமதி கொடுங்கள்” என முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்ட போதிலும், அவையின் மாண்பை மீறிய எதிர்க்கட்சிக்கு இப்போது பேச அனுமதி வழங்க முடியாது எனச் சபாநாயகர் அறுதியிட்டு மறுத்துவிட்டார்.

இதையும் படிக்க: “வாங்கி பழகிய கை.. பேசி பழகிய பை!”.. பேரவையில் சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தோண்டித் துருவிய முதலமைச்சர் விஜய்!

அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவு:

முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டு பேச்சுக்கு, பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் அவையில் தர்ணாவில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து குந்தகம் விளைவித்து வரும் திமுக உறுப்பினர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவை முன்னவர் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “விதிகளுக்கு முரணாகச் செயல்படும் உறுப்பினர்கள் தானாகவே அவையிலிருந்து வெளியேறினால் அதை வரவேற்கிறேன். இல்லையெனில், அவையின் மாண்பைக் காக்கும் பொருட்டு அவை காவலர்கள் இவர்களை வெளியேற்ற வேண்டும்” என உத்தரவிட்டார். சபாநாயகர் பீடத்தின் முன்பாகத் திரண்ட உறுப்பினர்களை அகற்ற அவை காவலர்கள் உட்சென்றதால், சட்டப்பேரவை வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

சபாநாயகரின் கறார் நிலைப்பாடு:

பேரவையில் நிலவிய சூழல் குறித்துப் பேசிய சபாநாயகர், “முதலமைச்சர் பேசும்போது ஒரு நிமிடமாவது அமைதியாக இருந்து உரையைச் செவிமடுத்திருந்தால், நிச்சயமாக எதிர்க்கட்சியினருக்குப் பேச அனுமதி அளித்திருப்பேன். ஆனால், முதலமைச்சர் உரை தொடங்கியதிலிருந்தே பேனர்களையும் போஸ்டர்களையும் காட்டி கூச்சல் குழப்பம் விளைவிப்பதிலும், உரையை மக்களிடம் சேரவிடாமல் தடுப்பதிலுமே கவனம் செலுத்தினீர்கள். இத்தகைய நிர்பந்தங்களுக்கும் கூச்சல்களுக்கும் பணிந்து என்னால் அனுமதி வழங்க முடியாது” எனக் கண்டிப்புடன் தெரிவித்தார்.

இதையும் படிக்க: “எலும்பை உடைப்பாராம்!.. ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடுகிறது”.. பேரவையில் முதல்வர் விஜய் ஆவேச உரை!!

முதலமைச்சரின் கோரிக்கையும் மறுப்பு:

எதிர்க்கட்சியினர் பேசட்டும் என முதலமைச்சர் பரிந்துரைத்ததைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், “முதலமைச்சர் தனது பெருந்தன்மையான ஆலோசனையை வழங்கியுள்ளார்; அதை நான் மதிக்கிறேன். இருப்பினும், பேரவையின் அமைதியையும் விதிகளையும் காக்க வேண்டியது என் கடமை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு நான் அனுமதி அளிக்கப்போவதில்லை” என்று கூறித் தனது இறுதியான முடிவை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்தபடியாக வனத்துறை மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகளைச் சபாநாயகர் தொடரச் செய்தார். இதைத்தொடர்ந்து, திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Follow Us