AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதி விபத்து.. பைக் ஓட்டி வந்த இளைஞர் துடிதுடித்து பலி.. பரபரப்பு!!

Minister Jagadeeswari's Car Accident: சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்தக் கார் மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு என்ற 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதி விபத்து.. பைக் ஓட்டி வந்த இளைஞர் துடிதுடித்து பலி.. பரபரப்பு!!
அமைச்சர் ஜெகதீஸ்வரி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Sep 2026 09:10 AM IST

சென்னை, செப்டம்பர் 07: தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக விருதுநகரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் சந்திப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரச் சாலை விபத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த விருதுநகர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஜெகதீஸ்வரியின் சொந்தக் கார் மோதியதில் இந்த சோகமான விபத்து அரங்கேறியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்து குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: “விஜயகாந்த் என்ற வைரத்தை இழந்தோம்!”.. மேடையில் உடைந்த விஜய பிரபாகரன்!!

சட்டப்பேரவை பயணத்தின் போது நிகழ்ந்த விபத்து:

விருதுநகர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, இன்று காலை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகத் தனது தொகுதியிலிருந்து சென்னை நோக்கி வாகனப் பேரணியாக வந்துகொண்டிருந்தார். அமைச்சர் அரசு வாகனத்திலும், அவருக்குப் பின்னால் காவல்துறை எஸ்கார்ட் வாகனமும் வந்து கொண்டிருந்தன. அரசு வாகனத் தொடர் வரிசையைத் தொடர்ந்து அமைச்சரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மாருதி எர்டிகா என்ற சொந்தக் காரை ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். காட்டாங்குளத்தூர் சந்திப்புப் பகுதியைக் கடக்க முயன்றபோது, அமைச்சரின் சொந்தக் கார் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாக ‘ஹோண்டா டியோ’ இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இறையன்பு (26) என்ற இளைஞரின் மீது பலமாக மோதியது.

இளைஞர் பலி மற்றும் காவல்துறையின் விசாரணை:

காரின் அதிவேக மோதலால் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இறையன்பு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்தவுடன் அப்பகுதியில் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துத் தகவலறிந்த மறைமலைநகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்துக்குக் காரணமான அமைச்சரின் சொந்த காரைப் பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டிவந்த ஓட்டுநரைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காட்டாங்குளத்தூர் சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, விபத்து எவ்வாறு நேரிட்டது என்பது குறித்துப் போக்குவரத்துப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க: “கோடி கோடியா பணமும்.. அமைச்சர் பதவியும் தந்தாங்க!”.. பரபரப்பை கிளப்பிய IUML எம்.எல்.ஏ-வின் பேச்சு!!

நிலவிய பரபரப்பும் உறவினர்களின் சோகமும்:

விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலை சந்திப்புப் பகுதியில் உடனே பொதுமக்கள் திரண்டதால் சில நிமிடங்கள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மறைமலைநகர் காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்து, இறையன்புவின் உடலைச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரும் உறவினர்களும் கவலையிலும் அதிர்ச்சியிலும் கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது. காரை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் கார் அதிவேகமாக இயக்கப்பட்டுள்ளதா அல்லது கவனக் குறைவாக ஓட்டப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow Us