AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாம்புக்கடி உயிரிழப்புகள்.. 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அதிர்ச்சித் தகவல்!!

Snake Bite Fatalities in Tamil Nadu: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 56,664 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு, 100 பேர் உயிரிழந்துள்ளதாக பொதுச்சுகாதாரத் துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 80% பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். போதிய முதலுதவி விழிப்புணர்வு இன்மையும், மருத்துவமனை செல்பவர்களுக்கு ஏற்படும் காலதாமதமுமே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாம்புக்கடி உயிரிழப்புகள்.. 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அதிர்ச்சித் தகவல்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 04 Sep 2026 06:41 AM IST

செப்டம்பர், 03: தமிழ்நாட்டில் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள், மாநிலத்தின் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பில் இருக்கும் பெரும் குறைபாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பொதுச்சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம் நடத்திய விரிவான ஆய்வின் மூலம், பாம்புக்கடியால் நிகழும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெரும்பாலும் கிராமப்புறங்களிலேயே அதிகமாக மையம் கொண்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கை மற்றும் விவசாயப் பணிகளின் போது நிகழும் இத்தகைய சம்பவங்கள், சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் பெரும் சோகத்தில் முடிகின்றன.

இதையும் படிக்க : அடுத்த 4 நாட்களுக்கும் 4 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் எச்சரிக்கை

56,664 பாம்புக்கடி சம்பவங்கள்:

இந்த ஆய்வறிக்கையின் தரவுகளின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 56,664 பாம்புக்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் துரதிர்ஷ்டவசமாக 100 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆண்களாக இருந்தபோதிலும், உயிரிழந்தவர்களில் 46 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உயிரிழந்தவர்களில் 80 சதவீதத்தினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தொழிலும் வாழ்வாதாரமும் சார்ந்த நிலையில் பார்க்கும்போது, உயிரிழந்தவர்களில் 50 சதவீதத்தினர் விவசாயிகள் என்றும், 37.5 சதவீதத்தினர் தினக்கூலி தொழிலாளர்கள் என்றும் இந்த ஆய்வின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

12 மாவட்டங்களில் பாதிப்பு தீவிரம்:

மாநில அளவில் மாவட்ட வாரியாக ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட 12 மாவட்டங்களில் பாம்புக்கடி பாதிப்புகள் மிக தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் தலா 2,000-க்கும் மேற்பட்ட பாம்புக்கடி பாதிப்புகள் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முதன்மையான காரணமாக மருத்துவமனைக்குச் சென்று சேர்வதில் ஏற்படும் காலதாமதத்தையே நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதையும் படிக்க : தமிழக காவல் துறை ரூ.212 கோடியில் நவீன மயமாக்குதல்.. ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள்.. முதல்வர் விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்!

விஷமுறிவு மருந்துகள் இருப்பு இல்லை:

பாம்பு கடித்தவர்களில் 62.5 சதவீதத்தினர் மட்டுமே சம்பவம் நடந்த 30 நிமிடங்களுக்குள் மருத்துவமனையைச் சென்றடைகின்றனர். அதேவேளையில், 22.5 சதவீதத்தினர் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. இதுமட்டுமின்றி, சுமார் 20 சதவீத அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடிக்கான அவசியமான விஷமுறிவு மருந்துகள் இருப்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனுடன் கடிபட்ட இடத்தில் கயிறு கட்டுவது, மூலிகை சிகிச்சை பெறுவது போன்ற தவறான முதலுதவி முறைகளை மேற்கொள்வதும் நோயாளிகளின் நிலையை தீவிரமாக்கி மரணத்திற்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Follow Us