AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதலி பிறந்தநாள் பார்ட்டியில் போதை.. பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சென்னையில் அதிர்ச்சி!!

Nepal youth arrested in Chennai: சென்னையில் காதலியின் பிறந்தநாள் விழாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்த நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபரைச் சூளைமேடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலி பிறந்தநாள் பார்ட்டியில் போதை.. பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சென்னையில் அதிர்ச்சி!!
மாதிரிப் புகைப்படம
Sathis S
Sathis S | Published: 22 Jul 2026 10:32 AM IST

சென்னை, ஜூலை 22: சென்னையை அடுத்த சூளைமேடு பகுதியில், மதுபோதையில் பக்கத்து வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிற்குப் பாலியல் தொந்தரவு அளித்த நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சூளைமேடு காவல் துறையினர், அவரைச் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: சென்னையில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆசை வார்த்தை.. ரூ.63 லட்சத்தை சுருட்டிய மோசடி ஆசாமிகள் கைது!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த விபரீதம்:

இமயமலை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர் கேசவன் (29). இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் தங்கி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி இரவு தனது காதலியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகக் கேசவன் சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் நள்ளிரவு வரை கேசவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகத் தெரிகிறது.

அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்:

தொடர்ந்து மறுநாள் காலை (ஜூலை 21) அதிகளவில் மதுபோதையிலும், கடும் தூக்கக் கலக்கத்திலும் இருந்த கேசவன் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். பின்னர் மீண்டும் காதலியின் வீட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக, போதை தலைக்கேறிய நிலையில் அருகிலிருந்த பக்கத்து வீட்டிற்குள் தவறுதலாக நுழைந்துள்ளார்.

அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 48 வயதுடைய பெண்ணிற்கு கேசவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அலறல் சத்தமிட்டுள்ளார்.

பொதுமக்கள் தர்ம அடி – சிறையில் அடைப்பு:

பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பகுதி வாசகர்கள், நிலைமையைப் புரிந்து கொண்டு கேசவனை உடனடியாகப் மடக்கிப் பிடித்தனர். அவருக்குத் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், உடனடியாகச் சூளைமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க: திருப்பூரில் சோகம்… லாரி மோதி தம்பதி துடிதுடித்து உயிரிழப்பு.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சூளைமேடு காவல் துறையினர், நேபாள வாலிபர் கேசவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us