AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..”பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்!”.. கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்!!

MK Stalin Condemns: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையானது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..”பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்!”.. கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்!!
முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 05 Sep 2026 11:59 AM IST

சென்னை, செப்.05: திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைக்குத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இச்சோதனை முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும் சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்லும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கேரளாவில் நடந்த கோர விபத்து – அப்பளம் போல் நொறுங்கிய கார்.. தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழப்பு..

அரசியல் திசைதிருப்பல் நடவடிக்கை:

கே.என்.நேரு மீதான சோதனையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலிலும், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், அரசியல் காரணங்களுக்காக மட்டுமே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் இல்லத்தில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சி அமைப்பதற்காக மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டப்பேரவை வளாகத்திலேயே அவர்களைத் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டதையும், குதிரைப் பேரங்களில் ஈடுபட்டதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்றும், அதுகுறித்த புகார்களில் முதற்கட்ட தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத் துறை, தற்போது மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப இத்தகைய சோதனைகளைக் கையில் எடுத்துள்ளது என்றும் சாடியுள்ளார்.

சட்டப் போராட்டத்திற்கான திமுகவின் ஆயத்தம்:

மாநில அரசியலில் நிலவும் புதிய கூட்டணிக் கட்டமைப்புகள், அரசியல் நகர்வுகள் மற்றும் மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை வேறு திசைக்குத் திருப்புவதற்காகவே இத்தகைய சட்ட நடவடிக்கைகளை ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளதாகத் திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மற்றும் சென்னையில் உள்ள நேருவின் ஆதரவாளர்களும் திமுக தொண்டர்களும் அவரது இல்லங்களின் முன்பு திரண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். முந்தைய காலங்களிலும் இத்தகைய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளை எதிர்கொண்டு சட்டப் போராட்டங்கள் மூலம் மீண்டு வந்திருப்பதாகக் சுட்டிக்காட்டும் திமுக தலைமை, இந்த வழக்கையும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக முறியடிப்போம் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இதையும் படிக்க: கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. சென்னை, திருச்சியில் 10 இடங்களில் தீவிர ஆய்வு!

சட்டத்தின் வழியில் எதிர்கொண்டு வெல்வோம்:

தமிழக அரசின் இப்போக்கை “ரீல்ஸ் அரசு” என விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை மறைக்கவும், அரசியல் ரீதியாகப் பலிவாங்கவுமே இத்தகைய ரெய்டுகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். “கே.என்.நேருவுக்கும் திமுகவிற்கும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகள் புதியவை அல்ல. இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்; சட்டத்தின் வழியில் நின்று அனைத்துப் புகார்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்” எனத் தனது பதிவில் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Follow Us