AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெற்ற தாய் பற்றி பேசும் உரிமை யாருக்கும் கிடையாது.. வழக்கு பதிவு செய்தது சரிதான் – பிரேமலதா விஜயகாந்த்

வார்த்தைகள் என்றைக்கும் மாறாது; வரலாறும் மாறாது. சிம்பிளாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போய்விடுவேன். ஆனால், யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக என்னுடைய வார்த்தைகளைப் பார்த்துப் பயன்படுத்துகிறேன். முதலமைச்சரின் லண்டன் பயணத்தில் நீங்கள் என்னவெல்லாம் பார்த்தீர்களோ, நானும் அதையெல்லாம் பார்த்தேன்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பெற்ற தாய் பற்றி பேசும் உரிமை யாருக்கும் கிடையாது.. வழக்கு பதிவு செய்தது சரிதான் – பிரேமலதா விஜயகாந்த்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Sep 2026 19:44 PM IST

செப்டம்பர் 16, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் மிசா சட்டம் குறித்து பேசியதை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேபோல், ஆபாசமாக பேசியதுடன், முதலமைச்சர் விஜயகாந்தை ஒருமையிலும் பேசியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வழக்கு பதிவு செய்தது சரிதான் – பிரேமலதா:

இந்தச் சூழலில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது சரியான ஒன்றுதான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் 22ஆம் ஆண்டு கட்சித் தொடக்க நாளை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சிக் கொடியை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மேலும் படிக்க: “8 மணி நேர சோதனை!”… நடந்தது என்ன? வெளியே வந்தவுடன் அன்பில் மகேஷ் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

அப்போது பேசிய அவர், “ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்தது சரியானதுதான். அமைச்சர் நிர்மல் குமாரின் அம்மா என்ன செய்தார்கள்? எதற்கு அம்மாவைப் பற்றி பேச வேண்டும்? அடுத்தவர்களின் முதுகைச் சொரியும் முன் உங்கள் முதுகைப் பாருங்கள்.

பெற்ற தாய் பற்றி பேசும் உரிமை யாருக்கும் கிடையாது:

பெற்ற தாய் குறித்து பொதுவெளியில் பேசும் உரிமை யாருக்கும் இங்கு கிடையாது. பேசிய அவரையும் பெற்றெடுத்தது ஒரு தாய்தான். அதற்கு எனது கடுமையான கண்டனங்கள். மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக வாய்க்கு வந்தபடி என்னென்னவோ பேசக்கூடாது. அவர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்தது சரியான முடிவுதான்.

மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா.. ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னாதானம்..

வார்த்தைகள் என்றைக்கும் மாறாது; வரலாறும் மாறாது. சிம்பிளாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போய்விடுவேன். ஆனால், யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக என்னுடைய வார்த்தைகளைப் பார்த்துப் பயன்படுத்துகிறேன். முதலமைச்சரின் லண்டன் பயணத்தில் நீங்கள் என்னவெல்லாம் பார்த்தீர்களோ, நானும் அதையெல்லாம் பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us