AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கூட்டணி பற்றிப் பேச செல்வப்பெருந்தகை யார்?”.. பொங்கிய பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி.. வெடித்தது புது சர்ச்சை!!

Praveen Chakravarty Slams Selvaperunthagai: "ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் கூட்டணி எதற்கு?" எனக் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, "கூட்டணி பற்றிப் பேச அவர் யார்?" என மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி காட்டமாகப் பதிலளித்துள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் பலமாக உள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“கூட்டணி பற்றிப் பேச செல்வப்பெருந்தகை யார்?”.. பொங்கிய பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி.. வெடித்தது புது சர்ச்சை!!
பிரவீன் சக்கரவர்த்தி, செல்வப்பெருந்தகை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Sep 2026 15:45 PM IST

சென்னை, செப்டம்பர் 16: தமிழ்நாடு அரசியலில் தேசியக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி நிலவரங்கள் மற்றும் தலைமை குறித்த விவாதங்கள் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்து வருகின்றன. இச்சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மூத்த தலைவருமான செல்வப்பெருந்தகை அண்மையில் எழுப்பிய கருத்து ஒன்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தேவையில்லை; அப்படி ஏற்காவிட்டால் கூட்டணி எதற்கு?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் இந்த அதிரடிக் கருத்து தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகியுமான பிரவீன் சக்கரவர்த்தி மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இதையும் படிக்க: 29 மா.செக்கள் ஆப்சென்ட்.. தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

செல்வப்பெருந்தகைக்குக் காட்டமான பதிலடி:

செய்தியாளர்களைச் சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தியிடம், செல்வப்பெருந்தகையின் கூட்டணி தொடர்பான கருத்து குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “கூட்டணி முடிவுகள் குறித்தோ அல்லது கட்சியின் கொள்கை நிலப்பாடுகள் குறித்தோ பேசுவதற்குச் செல்வப்பெருந்தகை யார்?” எனக் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பினார். கடந்த காலத்தில் அவர் என்ன பதவியில் இருந்தார் என்பது முக்கியமல்ல என்றும், தற்போது இதுபோன்ற தேவையற்ற கருத்துக்களைத் தெரிவிப்பது முற்றிலும் அவசியமற்றது என்றும் விமர்சித்தார். கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவுகளைத் தலைமையே தீர்மானிக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவரது பதில் அமைந்திருந்தது.

தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது:

தொடர்ந்து கூட்டணி நிலவரம் குறித்துப் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாகவும் கட்டுக்கோப்பாகவும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். “சமீபத்தில் கூடத் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நானும் நேரில் கலந்துகொண்டேன். முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் மிகவும் சுமுகமாகவும் மகிழ்ச்சியாகவும் விவாதித்தனர். தொடக்கத்தில் கூட்டணி எவ்வளவு உறுதியாக இருந்ததோ, அதே அளவு பலத்துடன் இப்போதும் நீடிக்கிறது. இதில் எந்தவிதக் குழப்பமும் அல்லது விரிசலும் இல்லை” என்று அவர் அறுதியிட்டுக் கூறினார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா? அடுத்தடுத்து தாக்கலாகும் தேர்தல் தடை மனுக்கள்.. பின்னணி என்ன!

டெல்லி பயணம் மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு:

மேலும், தாம் டெல்லியிலிருந்து தான் நேரடியாகத் தமிழ்நாடு திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட பிரவீன் சக்கரவர்த்தி, நேற்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து விரிவாக ஆலோசித்ததாகத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்குள்ளோ அல்லது கூட்டணிக் கட்சிகளுடனோ எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதையும் மறைமுகமாக உணர்த்தியுள்ளார். பிரவீண் சக்கரவர்த்தியின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழ்நாடு காங்கிரஸ் உட்கட்சி விவாதத்தை மீண்டும் சூடேற்றியுள்ளது.

Follow Us