AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி.. சென்னையில் வெடித்தது தொடர் போராட்டம்.. எழும்பூரில் மாணவர் அமைப்பினர் குண்டுக்கட்டாகக் கைது!!

Chennai Students protest: டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து, சென்னை எழும்பூரில் டார்ச் லைட் பேரணி நடத்திச் சாலையில் திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட SFI மற்றும் DYFI அமைப்பைச் சேர்ந்த மாணவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி.. சென்னையில் வெடித்தது தொடர் போராட்டம்.. எழும்பூரில் மாணவர் அமைப்பினர் குண்டுக்கட்டாகக் கைது!!
திடீர் காத்திருப்புப் போராட்டம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Jul 2026 06:50 AM IST

சென்னை, ஜூலை 22: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடூரத் தடியடியைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் சென்னையிலும் மாணவர் அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை எழும்பூர் பகுதியில் திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) அமைப்பைச் சேர்ந்த மாணவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

மேலும் படிக்க: ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி அதிரடி கைது! டெல்லியில் பெரும் பரபரப்பு!

திடீர் காத்திருப்புப் போராட்டம்:

டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (மற்றும் பிற அமைப்புகள்) சார்ந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னையில் எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதரவுப் போராட்டங்கள் வெடித்துள்ளன. எழும்பூர் சித்ரா தியேட்டர் அருகே தொடங்கிய இந்த ‘டார்ச் லைட் பேரணி’ முக்கிய வீதிகள் வழியாகச் சென்று எல்.ஜி. ரவுண்டானா பகுதியை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை உரக்க எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு:

பேரணியின் முடிவில், எல்.ஜி. ரவுண்டானா பகுதியில் மாணவர்கள் திடீரெனச் சாலையில் அமர்ந்து ‘காத்திருப்புப் போராட்டத்தில்’ ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளில் கடுமையான போக்குவரத்துச் நெரிசல் ஏற்பட்டது.

மாணவர்கள் குண்டுக்கட்டாகக் கைது:

சாலையில் அமர்ந்து தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் பலமுறை அறிவுறுத்தினர். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துத் தொடர் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர், SFI மற்றும் DYFI மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலாரையும் வலுக்கட்டாயமாகக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனங்களில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபம்/சமுதாயக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – கடுமையான எச்சரிக்கை கொடுத்த பிரதமர் மோடி

மெரினாவில் தீவிர கண்காணிப்பு:

டெல்லி சம்பவத்தின் எதிரொலியாகச் சென்னையில் அடுத்தடுத்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், மெரினா கடற்கரை பகுதியிலும் மாணவர்கள் திரண்டு விடக் கூடாது என்பதற்காக, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us