AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் வினாத்தாள் கசிவு.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடன் போராட்டக்குழு பிரதிநிதிகள் சந்திப்பு

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, சிஜேபி பிரதிநிதிகள் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்டதாகவும், அதில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அமைதியான முறையில் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெற்று, இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நீட் வினாத்தாள் கசிவு.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடன் போராட்டக்குழு பிரதிநிதிகள் சந்திப்பு
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடன் போராட்டக்குழு பிரதிநிதிகள்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jul 2026 19:45 PM IST

ஜூலை 20, 2026: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, நாட்டின் தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் நடைபெற்ற போராட்டம் பதற்றமான சூழலுக்கு வழிவகுத்தது. இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, சிஜேபி பிரதிநிதிகளான அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, சிஜேபி பிரதிநிதிகள் மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் அளித்தனர்.

மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று, தர்மேந்திர பிரதானை மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முதல் கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது கோரிக்கையாக, உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Also Read: இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்த திமுக.. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் இருக்கைகள் அதிரடி மாற்றம்!!

மேலும், தேர்வு அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மூன்றாவது கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தை கைவிடுங்கள் என கோரிக்கை:

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, சிஜேபி பிரதிநிதிகள் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்டதாகவும், அதில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அமைதியான முறையில் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெற்று, இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க:  முதல் முறையாக இந்தியாவில் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்.. யாரெல்லாம் இதனை செலுத்திக்கொள்ளலாம்? இது எப்படி செயல்படும்?

எனினும், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான தெளிவான உறுதியும் கிடைக்கவில்லை என சிஜேபி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிகேடுகளைத் தாண்ட முயன்ற போராட்டக்காரர்கள்:

ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறியபோது, அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி போலீசார் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, சில போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்ட முயன்றதால் போலீசார் அவர்களைத் தடுத்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில் சில போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லியில் உள்ள சில மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், மத்திய டெல்லி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Follow Us