AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜை தகுதி நீக்கம் செய்ய அமமுக மனு! சபாநாயகரிடம் நேரில் வலியுறுத்தல்!

Mannargudi MLA S Kamaraj: மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கோரி, அமமுக பொருளாளர் கரிகாலன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் டி.டி.வி. தினகரனின் மனுவை நேரில் வழங்கியுள்ளார். தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் இ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜை தகுதி நீக்கம் செய்ய அமமுக மனு! சபாநாயகரிடம் நேரில் வலியுறுத்தல்!
எம்எல்ஏ காமராஜ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Jul 2026 13:07 PM IST

சென்னை, ஜூலை 24: அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினரான மன்னார்குடி எஸ். காமராஜை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி அமமுக தலைமை, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வழங்கிய கோரிக்கை மனுவை, அமமுக பொருளாளர் கரிகாலன் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்துச் சமர்ப்பித்தார்.

மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!

சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவு:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். காமராஜ், அமமுகவின் ஒரே பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து வந்தார். தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகராக ஆயிர விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் தேர்வு செய்யப்பட்டபோது, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசிய காமராஜ், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்குத் தனது முழு ஆதரவையும் பேரவையிலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

“முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் நீங்கள் கையெழுத்திட்ட 3 கோப்புகளும் மக்களுக்குப் பயனுள்ளவை. இளைஞர்களும் நாங்களும் உங்களை நம்புகிறோம். இந்த அரசு 5 ஆண்டுகள் தொடர எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. காமராஜ் பேசினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பும், தினகரனின் நீக்கமும்:

அமமுக தலைமை நடுநிலை மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சூழலில், கட்சியின் அதிகாரப்பூர்வக் கட்டுப்பாட்டையும் கொறடா உத்தரவையும் மீறி, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதன் தொடர்ச்சியாக, கட்சி எதிரிடை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, எம்.எல்.ஏ. காமராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக டி.டி.வி. தினகரன் உடனடியாக அறிவித்தார்.

‘கட்சி சாராத உறுப்பினர்’ அந்தஸ்து:

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும், பேரவையில் காமராஜ் ‘கட்சி சாராத சட்டமன்ற உறுப்பினராக’ தொடர்ந்து கூட்டத் தொடர்களில் பங்கேற்று வந்தார். இருப்பினும், “ஒரு கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற உறுப்பினர், கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்படுவதோ அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு அளிப்பதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி (கட்சித் தாவல் தடைச் சட்டம் – Anti-Defection Law) குற்றமாகும்” என்பதைச் சுட்டிக்காட்டி, அவரை முழுமையாக எம்.எல்.ஏ. பதவியிலிருந்தே தகுதி நீக்கம் செய்ய அமமுக தற்பொழுது முடிவெடுத்துள்ளது.

சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள், கட்சிச் சின்னத்தில் வெற்றி: அமமுகவின் அங்கீகாரம் மற்றும் சின்னம் மூலமே காமராஜ் வெற்றி பெற்றார்.

கொறடா உத்தரவு மீறல்:

நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் முடிவுக்கும் தலைமைக்கும் எதிராகத் தன்னிச்சையாகச் செயல்பட்டார். xசட்டப்பிரிவு 10 (அட்டவணை): கட்சித் தாவல் தடைச் சட்ட விதிகளின்படி, உறுப்பினர் தகுதியைத் தக்கவைத்துக்கொள்ள அவருக்கு எந்தச் சட்டப்பூர்வ உரிமையும் இல்லை.

சபாநாயகர் எடுக்கும் முடிவு:

அமமுக சார்பில் அளிக்கப்பட்ட மனுவைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், இது தொடர்பாகச் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, எம்.எல்.ஏ. காமராஜுக்கு விளக்கக் கடிதம் அனுப்ப வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!

காமராஜ் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையிலும், சட்டமன்ற அவைக் குறிப்புகள் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்புப் பதிவுகளின் அடிப்படையிலும் சபாநாயகர் இறுதி முடிவை அறிவிப்பார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Follow Us