நாளை தவெகவில் இணைகிறேன்… சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அறிவிப்பு
சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் ஜூலை 2, 2026 நாளை தவெகவில் இணையவுள்ளதாக அறிவித்திருக்கிறார். என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர்வதை பகிர்வதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, ஜூலை 1 : சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் ஜூலை 2, 2026 நாளை தவெகவில் இணையவுள்ளதாக அறிவித்திருக்கிறார். என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர்வதை பகிர்வதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணையும் விழா மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் ஜூலை 02, ஜூலை, 2026 காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தகவல் அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைவதாக அறிவிப்பு
முன்னதாக அதிமுகவில் இருந்து விலகியது குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், துகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட அத்தனை நெருக்கடி நேரங்களிலும் பொதுச் செயலாளர் பழனிசாமி பின்னால் உறுதியாக நின்றேன்.கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் என் மீது 43 பொய் வழக்குகள் போடப் பட்டன. இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்கு பரிசாக கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : நாளை தவெகவில் இணைகிறேன், புதிய உத்வேகத்துடன்… – சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு




இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும், ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ, இன்று அதே தீய சக்திகளுடன் கைகோத்து, அவர்கள் தயவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகள் தீய சக்தி திமுகவுடன் எப்படி கைகோக்க முடியும்?
பொதுச்செயலாளர் பழனிசாமி முன்மொழிந்த அந்த சமரச முடிவுக்குத் தான் எதிராக நின்றோமே தவிர, அவரது தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. பழனிசாமியைத் தான் இந்த இயக்கத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக நாங்கள் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம் ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாக மதித்து, அவர் எடுத்த அந்த தன்னிச்சையான முடிவுதான் இன்று இந்த இயக்கத்தை அழிவிலும், வேதனையிலும் நிறுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தை ஜூலை 1, 2026 இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் இருவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கிய பின்பும் இபிஎஸ் மீது உள்ள அதிருப்தியால் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.