மனைவியின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்த கணவரின் செயல், இறுதியில் போலீஸ் நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில், குமார் பாஸ்கர் வர்மா மேம்பாலத்தில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, கௌதம் பருவா என்பவர், தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் மேம்பாலத்தின் நடுவே பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளார்.