Ind vs Zim : 18 பந்துகளில் அரைசதம் – வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அதிரடியாக விளையாடிய அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் பதிவு செய்த அதிவேக அரைசதம் என்ற சாதனையை அவர் படைத்து அசத்தினார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அதிரடியாக விளையாடிய அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் பதிவு செய்த அதிவேக அரைசதம் என்ற சாதனையை அவர் படைத்து அசத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் அரை சதம் அடித்த மிக இளம் வயது வீரராக வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 15 வயதே ஆன வைபவ் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே வைபவ் ஆட்டமிழந்தார். ரிச்சர்ட் ங்கார்வா பந்துவீச்சில் பென் கர்ரன் அவரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். 15 வயது 118 நாட்கள் என்ற வயதில் வைபவ் இந்த அரை சதத்தை அடித்தார்.
இதையும் படிக்க : காமன்வெல்த் விளையாட்டு : தங்கப் பதக்கத்தில் எவ்வளவு தங்கம் இருக்கும்?




இதன் மூலம் நேபாள வீரர் குசல் மல்லாவின் சாதனையை வைபவ் முறியடித்தார். குசல் 15 வயது 340 நாட்கள் என்ற வயதில் அரை சதம் அடித்திருந்தார். பிப்ரவரி 8, 2020 அன்று அமெரிக்காவுக்கு எதிராக அவர் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையை வைபவ் தற்போது முறியடித்துள்ளார்.
இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் அரை சதம் அடித்த மிக இளம் வயது இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். 16 வயது 213 நாட்கள் என்ற வயதில் சச்சின் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். கடந்த 1989 ஆம் ஆண்டு பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அரை சதம் அடித்திருந்தார். சச்சினின் அந்தச் சாதனையை வைபவ் முறியடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிக்க : முதலில் சோகம்.. பிறகு வேகம்.. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா ஜொலித்த கதை!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. அவர் முதலில் 2வது டி20 போட்டியில் விளையாடினார். அப்போட்டியில் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 3வது டி20 போட்டியில் 5 பந்துகளில் 13 ரன்களும், நான்காவது போட்டியில் 10 பந்துகளில் 15 ரன்களும் அவர் எடுத்தார்.
அவரது அதிரடி காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது. மீதமுள்ள 2 போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.