IND vs ENG: சச்சின்- டிராவிட்டின் மாபெரும் சாதனை முறியடிப்பு.. முதலிடத்தில் முத்திரை பதித்த ரோஹித் – கோலி!
IND vs ENG 3rd ODI: ஒருநாள் கிரிக்கெட்டில், விராட் கோலி 14,867 ரன்களும், ரோஹித் சர்மா 11,757 ரன்களும் எடுத்து, இந்தியாவின் 2வது மற்றும் 3வது அதிக ரன் குவித்தவர்களாக உள்ளனர். இந்த ஜோடி இணைந்து இந்தியாவுக்காக 2 சாம்பியன்ஸ் டிராபியையும் 1 டி20 உலகக் கோப்பையையும் வென்று தந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி, இன்று அதாவது 2026 ஜூலை 19ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியதன் மூலம் வரலாறு படைத்தனர். ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி ஜோடி, இணைந்து 400 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்காக இணைந்து அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய சாதனையை இந்த ஜோடி ஏற்கனவே தன்வசம் வைத்துள்ளது. இந்தச் சாதனையின் மூலம், இணைந்து 391 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி 2வது இடத்தில் உள்ளது.
ALSO READ: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்பு.. முன்னாள் வீரரை அழைத்த பிசிசிஐ.. காரணம் இதுதான்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றாக இணைந்து விளையாடிய வீரர்கள் யார்?
இலங்கையின் குமார் சங்கக்காரவும் மஹேல ஜெயவர்தனேவும் உலக கிரிக்கெட்டில் இணைந்து 550 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர். இந்த ஜோடிக்கு பிறகு, திலகரத்ன தில்ஷான் மற்றும் மஹேல ஜெயவர்தனே 426 போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர். ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இணைந்து 400 போட்டிகளில் விளையாடி, உலக கிரிக்கெட்டின் இந்த சிறப்புப் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் இந்த 2 ஜாம்பவான்களும் தங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஏறக்குறைய ஒரே நேரத்தில் தொடங்கினர்.




இரு வீரர்களின் அறிமுகம் எப்போது..?
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளனர். ரோஹித் சர்மா 2007ம் ஆண்டிலும், விராட் கோலி 2008ம் ஆண்டிலும் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கினர். இந்த இரு வீரர்களும் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய பேட்டிங் வரிசையின் தூண்களாக இருந்து வருகின்றனர். இந்த 2 அனுபவ வீரர்களும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில், விராட் கோலி 14,867 ரன்களும், ரோஹித் சர்மா 11,757 ரன்களும் எடுத்து, இந்தியாவின் 2வது மற்றும் 3வது அதிக ரன் குவித்தவர்களாக உள்ளனர். இந்த ஜோடி இணைந்து இந்தியாவுக்காக 2 சாம்பியன்ஸ் டிராபியையும் 1 டி20 உலகக் கோப்பையையும் வென்று தந்துள்ளனர்.
ALSO READ: தொடர்ச்சியாக 20 டாட் பந்துகள்.. புது சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா..!
3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டியில், இந்திய அணி தனது ஆடும் லெவனில் 3 முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக, கே.எல். ராகுல், பிரின்ஸ் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளனர். அதேநேரத்தில், சிவம் துபே ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.