Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Rohit Sharma

Rohit Sharma

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 30 ஏப்ரல் 1987 அன்று நாக்பூரில் பிறந்தார். ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, தற்போது இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். சமீபத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆஃப் ஸ்பின்னராக தொடங்கினார் என்பது மிக சிலருக்கே தெரியும். ஆனால், பயிற்சியாளர் தினேஷ் லாட் ரோஹித் சர்மாவின் பேட்டிங் திறமையை அறிந்ததும், அவரை நேரடியாக 8வது இடத்தில் இருந்து ஓப்பன் செய்ய வைத்தார். இதன் காரணமாக, பள்ளிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமான ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தினார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி டி20 போட்டியிலும் ரோஹித் சர்மா அறிமுகமானார். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ரித்திகா சஜ்தேவை ரோஹித் சர்மா திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது சமைரா சர்மா என்ற பெண் மகள் உள்ளார்

Read More

Rohit, Kohli Test Retirement: பிசிசிஐ அரசியல் காரணமாக கோலி, ரோஹித் ஓய்வா..? முன்னாள் இந்திய வீரர் குற்றச்சாட்டு!

Karsan Ghavri Shocking BCCI Allegations: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் இந்திய வீரர் கர்சன் கவ்ரி, இது பிசிசிஐயின் உள் அரசியலின் விளைவு எனவும், இருவரும் தங்கள் விருப்பப்படி ஓய்வு பெறவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Kohli, Rohit’s ODI Future Uncertain: உள்நாட்டு தொடரின் சிக்கலில் கோலி, ரோஹித்.. கட்டாயப்படுத்தும் பிசிசிஐ.. விரைவில் ஓய்வா..?

Kohli and Rohit Face Domestic Cricket Requirement: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 உலகக் கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினால், உள்நாட்டு போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என இந்திய தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

India Australia ODI series 2025: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் கோலி, ரோஹித் ஓய்வா..? பிசிசிஐ முடிவு இதுதான்!

Virat Kohli and Rohit Sharma Future: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். 2025 அக்டோபர் மாத ஆஸ்திரேலிய ஒருநாள் சுற்றுப்பயணம் அவர்களின் கடைசி சுற்றுப்பயணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

2027 Odi World Cup: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவது உறுதி.. சூப்பர் அப்டேட் கொடுத்த பிசிசிஐ..!

Rohit Sharma, Kohli in 2027 World Cup: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 2027 உலகக்கோப்பையில் அவர்களின் இடம் குறித்து சந்தேகம் எழுந்தது. ஆனால், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, இருவரும் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

India Bangladesh Tour Postponed: அதிரடியாக ரத்து செய்யப்பட்ட இந்தியா – வங்கதேச தொடர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன காரணம்..?

India Bangladesh Cricket Tour: இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருந்தது. ஆனால், பிசிசிஐ திடீரென இந்த சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்துள்ளது. இந்தியா-வங்கதேச இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதற்கு இரு அணிகளின் நெருக்கடியான போட்டி அட்டவணையே காரணம் என கூறப்படுகிறது.

India Bangladesh Tour: கோலி-ரோஹித் களமிறங்குவதில் தாமதம்! தள்ளி போகிறதா இந்தியா – வங்கதேச தொடர்..?

Rohit Sharma, Virat Kohli ODI Return: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் இந்திய அணிக்குத் திரும்புதல் வங்கதேச சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதால் தள்ளிப்போயுள்ளது. இந்திய அரசின் அனுமதி தாமதத்தால் சுற்றுப்பயணம் தள்ளிப்போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இருவரும் 2025 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தான் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 ஒருநாள் உலகக் கோப்பையை நோக்கமாகக் கொண்டு இருவரும் தற்போது ஓய்வெடுத்து வருகின்றனர்.

கடந்த 2024ம் ஆண்டு இதே நாளில் கலக்கிய இந்திய அணி.. 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தல்!

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியான இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 13 ஆண்டுகால ஐசிசி கோப்பை வறட்சியை 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது. முன்னதாக, இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு எம்.எஸ். தோனி தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு, விராட் அல்லது ரோஹித் தலைமையில் இந்திய அணி எந்த ஐ.சி.சி கோப்பையையும் வென்றதில்லை. இதன் பிறகு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை வென்றது. இந்திய அணிக்காக ஐ.சி.சி கோப்பையை வென்ற நான்காவது கேப்டன் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார்

On This Day in 2024: ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாள்! 2024 டி20 உலகக் கோப்பையை தூக்கிய ரோஹித் சர்மா படை!

India's T20 World Cup 2024 Victory: கடந்த 2024 ஆண்டு ஜூன் 29ம் தேதி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2024 T20 உலகக் கோப்பையை வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றி இந்திய அணிக்கு கிடைத்தது. குரூப் ஸ்டேஜ் முதல் இறுதிப் போட்டி வரை அணியின் அசத்தலான வெற்றிப் பயணம், ரோஹித் சர்மாவின் தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகும். இந்த வெற்றியால் இந்திய அணியின் 11 ஆண்டுகால ஐசிசி பட்ட வறட்சி முடிவுக்கு வந்தது.

Rohit Sharma: சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவு.. சிறப்பு புகைப்படத்தை பகிர்ந்த ரோஹித் சர்மா!

Rohit Sharma 18 Years International Cricket: ரோஹித் சர்மா 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்களிப்பளித்துள்ளார். 2007ல் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் தொடங்கிய அவரது பயணம், இன்று 2 ஐசிசி கோப்பைகளையும், டெஸ்ட், டி20 ஓய்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. அவர் இன்ஸ்டாகிராமில் தனது முதல் டெஸ்ட் ஹெல்மெட்டின் படத்தை பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளார்.

Shubman Gill: ரோஹித் களத்தில் அசிங்கமாக திட்டினாலும்.. ஹிட் மேன் கேப்டன்சி குறித்து கில் ஓபன் டாக்!

ENG vs IND Test Series 2025: இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் தலைமையின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ரோஹித் சர்மாவின் தெளிவான திட்டமிடல் மற்றும் விராட் கோலியின் துல்லியமான போட்டித் திட்டமிடலை அவர் பாராட்டினார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணி முயற்சிக்கும் நிலையில், கிலின் தலைமையின் கீழ் அணியின் வெற்றிக்குரிய பயணம் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

Rohit Sharma’s ODI Future: இந்திய ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் யார்..? பரிசீலிக்கும் பிசிசிஐ.. ரோஹித் விரைவில் ஓய்வா?

2027 ODI World Cup: ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 ஓய்வுக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. பிசிசிஐ சுப்மன் கில்லை டெஸ்ட் கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவை டி20 கேப்டனாகவும் நியமித்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

Cricket retirements 2025: 35 நாட்களுக்குள்! 5 தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Top 5 Cricketers Retire in 35 Days: கடந்த 35 நாட்களில் உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சி! ரோஹித் சர்மா, விராட் கோலி, நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசன், க்ளென் மேக்ஸ்வெல் போன்ற 5 முன்னணி வீரர்கள் வெவ்வேறு வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். ரோஹித், கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும், பூரன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தனர்.

Rohit Sharma: உங்களை எப்படி அவுட் செய்வது..? ரோஹித்திடம் ஜாலியாக கேட்ட சிறுவன்.. ஹிட் மேன் சுவாரஸ்ய பதில்!

IPL 2025 Qualifier 2: ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஒரு இளம் ரசிகர் ரோஹித் சர்மாவை எப்படி அவுட் செய்வது எனக் கேட்டதற்கு, அவர் "அது சாத்தியமில்லை" என வேடிக்கையாக பதிலளித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ரோஹித் சர்மா டி20யில் 550 சிக்ஸர்களை அடிக்க இன்னும் 3 சிக்ஸர்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. ரோஹித்திடம் இருந்து கம்பீருக்கு பறந்த வேண்டுகோள்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னர், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியாளர் கௌதம் கம்பீரீடம் தனிப்பட்ட கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள் நிலையில் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட திலீப் மீண்டும் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Rohit Sharma: மும்பை ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா பெயர்.. குடும்பமே கண்கலங்கிய தருணம்..!

Mumbai Wankhede Stadium: வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பெயரிடப்பட்ட ஸ்டாண்ட் 2025 மே 16 அன்று திறக்கப்பட்டது. ரோஹித் சர்மா தனது பெற்றோர், மனைவி ரித்திகா ஆகியோருடன் மேடை ஏறி, ஸ்டாண்ட் திறப்பு விழாவில் பங்கேற்றார். ஸ்டாண்ட் திறக்கப்பட்டபோது ரோஹித் சர்மாவின் பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டனர். இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோஹித் சர்மா தனது குடும்பத்தினருக்கு நன்றியும், தனது கிரிக்கெட் பயணத்தின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.