AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dhoni CSK Stake: 25 சதவீத பங்குகளை கேட்டாரா தோனி..? அதிரடி விளக்கத்தை கொடுத்த சிஎஸ்கே!

Chennai Super Kings - MS Dhoni: சிஎஸ்கே பங்குகள் வெளிச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. அவை, தனியார் சந்தைக்கு அப்பாற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே கிடைக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில், தோனியிடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பங்குகள் இருப்பதாகத் தெரிகிறது.

Dhoni CSK Stake: 25 சதவீத பங்குகளை கேட்டாரா தோனி..? அதிரடி விளக்கத்தை கொடுத்த சிஎஸ்கே!
எம்.எஸ்.தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்Image Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Sep 2026 20:14 PM IST

ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் பெரும் பங்குரிமை கோரியதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தோனி ஆரம்பத்தில் அணியில் 25 சதவீதப் பங்குரிமையைக் கோரியதாகவும், பின்னர் அது 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டதாகவும், நிர்வாகம் 5.5 சதவீதத்தை வழங்க முன்வந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து சிஎஸ்கே நிர்வாகம் பதிலளித்துள்ளது. இந்தச் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று அது மறுத்துள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களில் பரவி வந்த சர்ச்சைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ALSO READ: பயிற்சி முகாமில் தீவிரம் காட்டிய தோனி.. சிஎஸ்கே வீரர் கொடுத்த சூப்பர் அப்டேட்!

சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன..?

தோனி – சிஎஸ்கே கிடையிலான பங்குகள் தொடர்பாக சிஎஸ்கே-வின் அதிகாரி ஒருவர், “எம்.எஸ். தோனி (MS Dhoni) எங்களிடம் எந்தப் பங்குரிமையையும் பற்றிக் குறிப்பிட்டதே இல்லை. இந்த விவகாரம் குறித்து எங்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. இதுபற்றி சிஎஸ்கே உரிமையாளர் என். சீனிவாசனிடம் தோனி பேசியதாகக் கூட எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை,” என்று  கூறினார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பங்குகள்..

சிஎஸ்கே பங்குகள் வெளிச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. அவை, தனியார் சந்தைக்கு அப்பாற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே கிடைக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில், தோனியிடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பங்குகள் இருப்பதாகத் தெரிகிறது. தற்போது, சிஎஸ்கே அணியின் 30 கோடிக்கும் மேற்பட்ட பங்குகள் பொதுமக்களின் கைகளில் உள்ளன. இது மொத்த பங்கு மூலதனத்தில் சுமார் 40 சதவீதமாகும். முன்னாள் பிசிசிஐ தலைவர் என். சீனிவாசனின் குடும்பம் 55 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுப்பாட்டுப் பங்குகளைக் கொண்டுள்ளது. ஐபிஎல் அணிகளின் தற்போதைய சந்தை மதிப்பின்படி, தோனி வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு சுமார் 2.6 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை உள்ளது. தோனியின் மொத்த நிகர மதிப்பு சுமார் ரூ. 1200 கோடியாகும்.

ALSO READ: தடுமாறும் சிஎஸ்கே.. சஞ்சு சாம்சனை கேப்டனாக்குங்கள்! முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!

இது உண்மையல்ல..

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ,”சமீபத்தில், ஆர்சிபியின் மதிப்பு சுமார் 1.8 பில்லியன் டாலர் என்று செய்திகள் வந்தன. சென்னை சூப்பர் கிங்ஸும் அந்த அளவிலான ஒரு ஃபிரான்சைஸ் ஆகும். ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றது மட்டுமல்லாமல், அது இந்தியாவிற்கு வெளியே பல அணிகளையும் நடத்துகிறது. சிஎஸ்கே ஒரு மறுக்க முடியாத பிராண்ட். சுமார் 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஃபிரான்சைஸில் 25 சதவீத பங்கு என்பது 400 மில்லியன் டாலர் ஆகும். இவ்வளவு பெரிய தொகையை யாரும் யாருக்கும் இலவசமாகக் கொடுக்க மாட்டார்கள். ஒரு ஐபிஎல் அணியில் யாரும் ஒரு சதவீதப் பங்கை சும்மா கொடுத்துவிட மாட்டார்கள். தோனி பங்கு கேட்டார் என்ற பிரச்சாரம் உண்மையல்ல. இது திட்டமிட்டு பரப்பப்பட்ட கதை என்று” கூறினார்.

Follow Us