AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: தடுமாறும் சிஎஸ்கே.. சஞ்சு சாம்சனை கேப்டனாக்குங்கள்! முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!

CSK Captain: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனின் சாதனைகளைக் கருத்தில் கொண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை கேப்டனாக நியமிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழ்நாட்டின் ஜாம்பவான் வீரருமான சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

IPL 2027: தடுமாறும் சிஎஸ்கே.. சஞ்சு சாம்சனை கேப்டனாக்குங்கள்! முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!
சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Sep 2026 18:06 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (Chennai Super Kings) ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் ஆனதிலிருந்து,  தொடர்ந்து 3 சீசன்களாக லீக் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் 5 பட்டங்களை வென்று, மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே திகழ்ந்துள்ளது. ஆனால், கடந்த 3 ஆண்டுகள் சென்னை அணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 2026 ஐபிஎல் பதிப்பில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடின் ஆட்டமும் மோசமாக இருந்ததால், அது பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. தற்போது, ​​ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், ஐபிஎல் 2027-ல் சஞ்சு சாம்சனுக்கு (Sanju Samson) கேப்டன் பதவி வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ: சிஎஸ்கே அணியின் வழிகாட்டியாக எம்.எஸ்.தோனி.. பயிற்சியாளராக இவரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனின் சாதனைகளைக் கருத்தில் கொண்டு, சிஎஸ்கே அவரை கேப்டனாக நியமிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழ்நாட்டின் ஜாம்பவான் வீரருமான சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்த 2026ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன், பின்னர் முதல் முறையாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி, அந்த சீசனில் அந்த அணியின் முன்னணி ரன் குவிப்பாளராகவும் திகழ்ந்தார்.

சடகோபன் ரமேஷ் கருத்து:

இதுகுறித்து சடகோபன் ரமேஷ் தனது யூடியூப் சேனலில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவிக்கு பலரை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. மேலும், கேப்டன் மாற்றம் தேவையா என்பதும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அணியின் சிறந்த வீரரான சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட வேண்டும். சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் 66 போட்டிகளுக்குத் தலைமை தாங்கி, அவற்றில் 33 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றி சதவீதம் 50 ஆகும். அவரது தலைமையின் கீழ், ராஜஸ்தான் அணி ஒருமுறை இறுதிப் போட்டிக்கும், ஒருமுறை பிளேஆஃப் சுற்றுக்கும் முன்னேறியது. நிச்சயமாக, அந்த அணி நிர்வாகம் வேறு பல விஷயங்களையும் மாற்ற வேண்டியிருக்கும். கேப்டனை மட்டும் மாற்றுவதால் கோப்பையை வென்றுவிட முடியாது. ஆனால், ஒரு கேப்டனை மாற்ற வேண்டும் என்றால், சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலிக்கப்பட வேண்டும்,” என்றார்.

ALSO READ: அதில் தோனிக்கு விருப்பமில்லை…. பத்ரிநாத் பரபரப்பு தகவல்

தொடர்ந்து பேசிய அவர், ”ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினால், அவர் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படுவார். இதன் பொருள், அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது ஒரு கடுமையான முடிவாக இருக்காது. அது அவருக்கும் அணிக்கும் நல்லதாக இருக்கும். இதனால் கெய்க்வாட் பயனடைவார். இது அவருக்கு மட்டுமல்ல. மாபெரும் சச்சின் டெண்டுல்கரின் செயல்பாடு கூட கேப்டன் பதவியால் பாதிக்கப்பட்டது. தீவிரமான குணம் கொண்டவர்கள் பேட்டிங் செய்யும்போது கேப்டன் பதவியின் அழுத்தங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வது கடினம்” என்று தெரிவித்தார்.

Follow Us