Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
MS Dhoni

MS Dhoni

கேப்டன் கூல் என்ற பெயரில் உலகப்புகழ் பெற்ற எம்.எஸ்.தோனி, உலகம் முழுவதும் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன். இவரின் தலைமையின்கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. உலக கிரிக்கெட்டின் சிறந்த பினிஷர்களில் ஒருவராக தோனி கருதப்படுகிறார். எம்.எஸ்.தோனி கடந்த 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பீகாரில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். தோனியின் தந்தையின் பெயர் பான் சிங் மற்றும் தாயின் பெயர் தேவகி ஆகும். உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள லாம்கடா தொகுதியில்தான் தோனியின் பூர்வீக கிராமம் உள்ளது. தோனிக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் அதிகம். பள்ளி பருவத்தில் இருந்தே தோனி பேட்மிண்டன், கால்பந்து, கிரிக்கெட் என பல விளையாட்டுகளில் பங்கேற்று சிறந்து விளங்கினார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தபோது, 2004ம் ஆண்டு தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி எம்.எஸ்.தோனி தனது பள்ளி தோழியான சாக்ஷி சிங் ராவத்தை மணந்தார். இவர்களுக்கு தற்போது ஜீவா என்ற மகளும் உள்ளார்

Read More

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு…. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

Dhoni defamation case : கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேடு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஐபிஎல் சூதாட்டம்… தோனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு

MS Dhoni : ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக முன்னாள் காவல் அதிகாரி மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

MS Dhoni: புது ஸ்டேடியத்தில் பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தோனி.. ரசிகர்கள் செய்த ஆரவாரம்!

Madurai New International Cricket Stadium: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து வேலம்மாள் கல்வி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம், சுமார் ரூபாய் 325 கோடி செலவில் கட்டப்பட்ட ஒரு அதிநவீன வசதி ஆகும். தற்போது, இந்த ஸ்டேடியத்தில் 7,200 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதை 20,000 இருக்கைகளாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

MS Dhoni Madurai Visit: புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழா.. மதுரை மகனாக வரும் எம்.எஸ்.தோனி..!

MS Dhoni Inaugurate Cricket Stadium in Madurai: மகேந்திர சிங் தோனி மதியம் 1.25 மணிக்கு வேலம்மாள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி முதல் 4 மணிக்குள் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட்டு, தோனி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma: விருது விழாவில் தோனியை போல் மிமிக்ரி.. குலுங்கி குலுங்கி சிரித்த ரோஹித் சர்மா.. ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!

Rohit Sharma Enjoying MS Dhoni's Mimicry: CEAT விருது நிகழ்ச்சிக்கு ரோஹித் சர்மா வந்தார். இந்த முறை ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் சில சிறப்பு விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தோனியின் குரல் அவரது காதுகளில் வந்தவுடன், ரோஹித் சர்மா சிரிக்கத் தொடங்கினார்.

Suryakumar Yadav: என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிஸ் செய்தது இதைதான்.. சூர்யகுமார் யாதவ் வருத்தம்..!

Indian Cricket Team: உலகின் மிகவும் திறமையான டி20 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் கருதப்படுகிறார். ஐபிஎல்லை பல முறை வென்றது முதல் கேப்டனாக ஆசிய கோப்பையை வென்றது வரை, சூர்யகுமார் யாதவ் ஒரு கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

தோனியுடன் நட்பு.. இர்ஃபான் பதானின் மாறுபட்ட பேச்சால் குழப்பம்!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், முன்னாள் கேப்டன் தோனி குறித்து வெளியிட்ட முரண்பட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில் தோனி தன்னை அணியில் இருந்து நீக்கினார் எனக் கூறிய பதான், வேறு ஒரு வீடியோவில் தோனியுடனான நட்பைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

MS Dhoni: தோனிக்கு கோபம் வந்தா என்ன நடக்கும் தெரியுமா? – மறக்க முடியாத சம்பவம்!

2013 சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போது, தோனியின் கோபத்தை சந்தித்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, அந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு ஓவரில் தோனி ஈஸ்வர் பாண்டேவை அழைத்த போது, மோஹித் தவறுதலாக ஓடி வந்து பந்து வீசத் தொடங்கியதால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

MS Dhoni: இந்திய அணியில் இந்த பழக்கம் இருந்தால் மட்டுமே இடமா..? தோனி குறித்து இர்ஃபான் பதான் குற்றச்சாட்டு!

Irfan Pathan Blasts Dhoni: இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவுக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். 2008 ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு தனது செயல்பாட்டைப் பற்றி தோனியிடம் கேட்டபோது, திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும், இதனால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

MS Dhoni Indian Coach: ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு தோனி இந்திய அணி பயிற்சியாளரா? வைரலாகும் தகவல்!

MS Dhoni Coaching Career: எம்.எஸ். தோனி ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி பயிற்சியாளராவாரா என்ற கேள்விக்கு, முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பதில் அளித்துள்ளார். தோனிக்கு பயிற்சியில் ஆர்வமில்லை என்றும், பயிற்சியின் சிரமங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Rayudu on Dhoni’s Anger: என் கோபத்தை இதனுடன் ஒப்பிட்ட தோனி.. அம்பதி ராயுடு சொன்ன ரகசியம்!

MS Dhoni's Temper: அம்பதி ராயுடு, ஜியோஹாட்ஸ்டாரின் 'சீக்கி சிங்கிள்ஸ்' நிகழ்ச்சியில், தோனியின் கோபத்தை "தகரக் கூரை போல விரைவாக வெப்பமடையும்" என்று விவரித்தார். தோனி அவரிடம் பந்து வைட்/நோ-பால் ஆனால் கோபப்பட வேண்டாம் எனவும் சொல்வார் என்றும், ஆனால் அவர் களத்திலேயே கோபப்பட்ட சம்பவங்களையும் ராயுடு பகிர்ந்து கொண்டார்.

MS Dhoni’s IPL 2026 Future: ஐபிஎல்லில் விளையாடுவேனா..? டிசம்பர் மாதத்திற்குள் முடிவு.. எம்.எஸ்.தோனி சொன்ன எதிர்கால திட்டம்!

MS Dhoni's IPL Return: ஐபிஎல் 2026ல் எம்.எஸ். தோனி விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் நீடிக்கிறது. தனது முழங்கால் காயத்தின் காரணமாக டிசம்பர் வரை முடிவெடுக்க தாமதப்படுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தனது மருத்துவ ஆலோசனையைப் பெற்ற பின்னரே தனது முடிவை அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

MS Dhoni: விராட் கோலி இப்படி பட்டவர்தான்.. பொதுவெளியில் போட்டுடைத்த எம்.எஸ்.தோனி..!

MS Dhoni on Virat Kohli: சமீபத்திய நிகழ்வில், எம்.எஸ். தோனி விராட் கோலியின் பல்துறைத் திறமைகளைப் பாராட்டினார். ஒரு சிறந்த பாடகர், நடனக் கலைஞர், மிமிக்ரி கலைஞர் மற்றும் மிகவும் பொழுதுபோக்கு நபர் என விராட்டை தோனி விவரித்தார். இந்தப் பாராட்டு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

MS Dhoni: சிஎஸ்கே அணியில் இனி பேட்டிங் பிரச்சனை இருக்காது… அடித்து சொல்லும் எம்.எஸ்.தோனி..!

MS Dhoni on Gaikwad's IPL 2026 Return: 2026 IPL சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணையப் போவதாக எம்.எஸ். தோனி உறுதிப்படுத்தியுள்ளார். காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாட முடியாமல் போன ருதுராஜின் வருகை, CSK பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் என்று தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தில் பிறந்த நாள்.. கட் பனியனுடன் கேக் கட் செய்த தோனி..!

ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்ற உலகின் ஒரே கேப்டனான தோனி, தனது 44வது பிறந்தநாளை ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் (JSCA) தனது அணி வீரர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி கேக் வெட்டி கொண்டாடினார். அதன் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.