AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டைவிட்டு புறப்படும் முன் ஏன் தெய்வ வழிபாடு முக்கியம்…

Kolaru Pathigam: தினமும் பல காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். பயணம் எதுவாக இருந்தாலும் அது பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்காக பழமையான சமய வழக்கங்களில் பெரியோர் பல வழிகாட்டுதல்களை கூறியுள்ளனர். ஒருவர் மேற்கொள்ளும் செயல் தடையின்றி நிறைவேற சூழ்நிலை, சந்தர்ப்பம் மற்றும் தெய்வ அருள் அவசியம் என மத நம்பிக்கைகளில் கூறப்படுகிறது.

வீட்டைவிட்டு புறப்படும் முன் ஏன் தெய்வ வழிபாடு முக்கியம்…
தெய்வ வழிபாடு Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Mar 2026 22:58 PM IST

தினமும் பல காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். பயணம் எதுவாக இருந்தாலும் அது பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்காக பழமையான சமய வழக்கங்களில் பெரியோர் பல வழிகாட்டுதல்களை கூறியுள்ளனர். அதில் முக்கியமாக குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட்டு புறப்பட வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. ஒருவர் மேற்கொள்ளும் செயல் தடையின்றி நிறைவேற சூழ்நிலை, சந்தர்ப்பம் மற்றும் தெய்வ அருள் அவசியம் என மத நம்பிக்கைகளில் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களின் அருளின் அவசியம்

மனிதர்களின் வாழ்க்கையில் நவக்கிரகங்களின் தாக்கம் இருப்பதாக பலர் நம்புகின்றனர். கிரகங்களின் நிலைமைகள் வாழ்க்கையில் நல்லதையும் கெட்டதையும் அளிக்கக்கூடும் என ஜோதிட மரபுகள் விளக்குகின்றன. ஆனால் கிரகங்களைப் பற்றி கேள்விப்படும் போது பலருக்கும் பயம் ஏற்படுகிறது என்பது கவனிக்கப்படுகிறது. இந்த பயத்தை போக்குவதற்காகவே திருஞானசம்பந்தர் பாடியதாகக் கூறப்படும் கோளறு பதிகம் முக்கியத்துவம் பெறுகிறது. எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் அனைத்து கிரகங்களும் நன்மை தராது என்பதால், ஏற்படும் துன்பங்களை நீக்கும் ஆன்மிக மருந்தாக கோளறு பதிகம் கருதப்படுகிறது.

மதுரையில் சமண சமய ஆதிக்கம் இருந்த காலப்பின்னணி

மதுரையில் சமண சமயம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அந்நேரத்தில் மன்னர் கூன்பாண்டியன் சமண சமயத்தை பின்பற்றி வந்தார். இதனால் சைவ சமயம் குறைந்து வருவதாக கவலைப்பட்ட மகாராணி மங்கையர்க்கரசி, மீண்டும் சைவ சமயம் வளர என்ன செய்யலாம் என சிந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது திருஞானசம்பந்தர் பற்றிய தகவலை அறிந்த மகாராணி, அவரை மதுரைக்கு வரவழைக்க முடிவு செய்தார். அமைச்சர் குலச்சிறையாரிடம் உடனடியாக சம்பந்தரை மதுரைக்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பை வழங்கியதாக வரலாறு கூறுகிறது.

மதுரைக்கு செல்ல முன் பாடப்பட்ட கோளறு பதிகம்

அந்த நேரத்தில் திருஞானசம்பந்தர் வேதாரண்யம் மறைநாதசுவாமி கோயிலில் திருநாவுக்கரசருடன் தங்கி இருந்தார். மங்கையர்க்கரசியாரின் அழைப்பை ஏற்ற சம்பந்தர் மதுரைக்கு செல்லத் தயாரானார். பயணத்திற்கு முன் திருநாவுக்கரசரிடம் தங்களின் ஆசீர்வாதத்தை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது நாளும் கோளும் சரியில்லை என திருநாவுக்கரசர் கூறியதாக புராணம் குறிப்பிடுகிறது. அதற்கு பதிலளித்த சம்பந்தர், சிவனை வழிபடும் பக்தர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் பயம் இருக்கக் கூடாது என கூறியதாகவும், நவக்கிரகங்களின் நாயகனாக விளங்கும் சிவபெருமான் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையுடன் பதிகம் பாடியதாகவும் கூறப்படுகிறது. இதுவே பின்னர் கோளறு பதிகம் என அழைக்கப்படுகிறது.

11 பாடல்களால் ஆன ஆன்மிகப் பதிகம்

“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி” என்று தொடங்கும் இந்த பதிகத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சிவபெருமானின் அருளால் நவக்கிரகங்களின் தீய விளைவுகள் கூட பக்தர்களுக்கு நன்மையாக மாறும் எனக் கூறப்படுகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி உள்ளிட்ட கிரகங்களும், ராகு-கேது ஆகியவற்றும் சிவபக்தர்களுக்கு தீங்கு செய்யாது என்ற கருத்து இந்த பாடல்களில் வலியுறுத்தப்படுகிறது.

மதுரையில் சமணர்களுடன் நடைபெற்ற விவாதங்கள்

பின்னர் மதுரைக்கு சென்ற திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல்வாதம் மற்றும் புனல்வாதம் போன்ற விவாதங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த விவாதங்களில் அவர் வெற்றி பெற்றதாகவும் புராணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்போது வெப்புநோயால் பாதிக்கப்பட்டிருந்த மன்னரை குணப்படுத்தியதோடு, அவரது கூன் முதுகையும் நிமிர்த்தியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் கூன்பாண்டியன் “நின்ற சீர் நெடுமாறன்” என அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இன்றும் பாராயணம் செய்யப்படும் கோளறு பதிகம்

திருஞானசம்பந்தரின் இந்த நிகழ்வுக்குப் பிறகு மதுரையில் மீண்டும் சைவ சமயம் வளர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. அதன் நினைவாக கோளறு பதிகம் இன்று வரை பலர் பாராயணம் செய்து வருகின்றனர். தினசரி பூஜை செய்யும் போது அல்லது வீட்டை விட்டு வெளியே புறப்படும் முன் இந்த பதிகத்தை படிப்பது நல்லது என பக்தர்கள் நம்புகின்றனர். முழு பதிகத்தை படிக்க முடியாதவர்கள் இதன் முதல் பாடலை மட்டுமே பாடினாலும் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது.

Follow Us