
Tamil Nadu Temples
இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
மகம் நட்சத்திரமா நீங்கள்.. இந்த கோயிலில் வழிபட்டால் பலன்கள் ஏராளம்!
Tamilnadu Temples: மகாலிங்கேஸ்வரர் கோயில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒடுக்கம் தவசி மேடையில் அமைந்துள்ளது. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது முக்கியமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது. பரத்வாஜ முனிவர் இங்கு தவம் செய்ததாகவும், ராமாயணத்துடன் இக்கோயிலின் தொடர்பு இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 16, 2025
- 12:04 pm
சென்னையில் ஒரு திருவண்ணாமலை.. இந்த அண்ணாமலையார் கோயில் தெரியுமா?
சென்னை யானைக்கவுனி அண்ணாமலையார் கோயில், 400 ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது. இக்கோயில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தரால் நிறுவப்பட்டது. இங்கு காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல தெய்வங்கள் காட்சியளிக்கின்றனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 14, 2025
- 12:13 pm
Mahalakshmi Temple: சகல செல்வங்களையும் அளிக்கும் இந்த மகாலட்சுமி கோயில் தெரியுமா?
மகாதானபுரத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி கோயில் குரும்ப நாயனார் வரலாறுடன் தொடர்புடையதாகும். இந்தக் கோயில், விஜயநகரப் பேரரசில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. அஷ்டலட்சுமிகளில் ஒருவளாக காட்சி தரும் மகாலட்சுமிக்கு, ஆடிப்பெருக்கு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் திருமணம், குழந்தைப்பேறு, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு வழிபாடு மேற்கொள்கின்றனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 13, 2025
- 12:41 pm
Saneeswaran Temple: சனி தோஷத்தால் அவதியா? – இந்த 21 அடி சனீஸ்வரர் கோயில் போங்க!
Tamilnadu Temples: விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு சனீஸ்வர பகவான் கோயில் மற்ற சனீஸ்வரன் கோயிலை விட வித்யாசமானது. இங்கு 21 அடி உயரத்தில் நின்றவாறு அவர் காட்சிக் கொடுக்கிறார். நாம் இந்த கோயில் அமைந்துள்ள இடம், உருவான வரலாறு உள்ளிட்ட தகவல்களைக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 12, 2025
- 13:03 pm
Kotagiri Murugan: பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்கும் வெற்றிவேல் முருகன் கோயில்!
Tamilnadu Temples: கோத்தகிரியில் அமைந்துள்ள பிரமாண்ட வெற்றிவேல் முருகன் கோயிலானது சுற்றுலாப் பயணிகள் இடையே மிக பிரபலமாக திகழ்கிறது. நாகமும் மயிலும் வழிபட்ட சுயம்பு மூர்த்தியாகக் கருதப்படும் இந்தக் கோயில், சக்திமலை என அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் பற்றிய பல்வேறு தகவல்களையும் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 11, 2025
- 11:10 am
திருவண்ணாமலை ஆன்மீகத் திருத்தலத்தில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி.!
Couple Eats Biryani Inside Temple: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ரமேஷ் மற்றும் அவரது மனைவி பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முட்டை மற்றும் இறைச்சியுடன் கூடிய உணவை கோவிலில் சாப்பிட்டதைக் கண்ட பக்தர்கள் தகவல் அளித்தனர். காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, உணவு எவ்வாறு கோவிலுக்குள் வந்தது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sivasankari Bose
- Updated on: Jun 10, 2025
- 07:10 am
தமிழ்நாட்டில் ஒரு கங்கை நதி.. இந்த கோயில் பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!
முறப்பநாடு கைலாசநாதர் கோயில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய தலங்களில் ஒன்று. அகத்திய முனிவரின் ஆலோசனையின்படி உருவான இந்தக் கோயில், குரு பகவானுக்குரிய தலமாகவும், தட்சிண கங்கை எனவும் போற்றப்படுகிறது. சோழ மன்னனின் மகளின் சாப விமோசனம், உரோமச முனிவரின் வழிபாடு போன்ற சிறப்பு வரலாறுகள் கொண்டது
- Petchi Avudaiappan
- Updated on: Jun 9, 2025
- 15:46 pm
Lord Murugan: குன்றத்தூர் முருகனுக்கு இப்படி ஒரு சிறப்பா? – நீங்களே பாருங்க!
Kundrathurur Murugan Temple: குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலாகும். கோயிலின் வரலாறு, தினசரி தரிசன நேரம், சிறப்புகள் மற்றும் விழாக்கள் பற்றிய தகவல்கள் பற்றி நாம் காணலாம். முருகனால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் மலை அடிவாரத்தில் உள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 8, 2025
- 12:43 pm
Murugan Temple: முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்.. சென்னையில் இந்த கோயில் தெரியுமா?
சிவபக்தரின் கனவில் காட்சி அளித்த முருகன், இங்குள்ள புற்றில் குடி கொண்டிருப்பதாக கூறினார். அந்த புற்றில் கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலை, இங்குள்ள கோவிலுக்கு அடிப்படையாக அமைந்தது. கோவிலின் தனித்துவமான அமைப்பு, வழிபாட்டு முறைகள் பற்றி நாம் காணலாம். இந்த கோயில் சென்னையின் மிக பிரபலமான முருகன் கோயில்களில் ஒன்றாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 7, 2025
- 18:30 pm
Lord Murugan: நான்கு முகங்கள் கொண்ட முருகன்.. இந்த கோயில் தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள சதுர்முக முருகன் கோயிலின் வரலாறு விசுவாமித்திரரின் தவத்தின் விளைவாக தோன்றியதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் மூலவராக வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார். கோயிலின் அமைப்பு, சிறப்பு வழிபாடுகள் மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் பற்றி காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 5, 2025
- 14:01 pm
புனர்பூசம் நட்சத்திரமா நீங்கள்.. இந்த கோயில் சென்றால் பலன்கள் ஏராளம்!
வாணியம்பாடி அருகே உள்ள அதிதீஸ்வரர் கோயில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பிரம்மா மற்றும் சரஸ்வதியின் சாப விமோசனம் இங்கு நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கோயிலில் அதிதீஸ்வரர் சுயம்புலிங்கமாகவும், பிரகன் நாயகி அம்பாள் தெற்கு நோக்கியும் காட்சி அளிக்கின்றனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 4, 2025
- 12:19 pm
Nava Kailasam Temples: சிவலிங்கத்தில் நாகர்.. இந்த ராகு ஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாய கோயில்களில் ஒன்றான கோத பரமேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு, சிறப்புகள் பற்றி காணலாம். உரோமச முனிவரின் சிவலிங்க பிரதிஷ்டை, அரசனின் சாபம் மற்றும் பசுக்கள் பால் சொறிந்த அதிசயம் போன்ற நிகழ்வுகள் இந்த கோயில் உருவாக காரணமாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 3, 2025
- 12:43 pm
Tirunelveli: திருநெல்வேலியின் “தென் திருப்பதி” .. இந்த கோயில் பற்றி தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயில், தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. வைப் ராஜ்ஜியக் காட்டில் பைலர் சீனிவாச பெருமாள் காட்சி அளித்ததால் உருவானதாக கோயிலின் வரலாறு உள்ளது. திருப்பதி கோயிலுடனான ஒற்றுமைகள் உள்ளதால் பக்தர்கள் தென் திருப்பதி என இதனை அழைக்கின்றனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 2, 2025
- 14:52 pm
திருவண்ணாமலையில் பரபரப்பு: அண்ணாமலையார் கோயிலில் ஆந்திரா – கர்நாடகா பக்தர்களிடையே மோதல்
Annamalaiar Temple Clash: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2025 ஜூன் 1 அன்று பக்தர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில பக்தர்கள் இடையே வரிசையில் முன்னுரிமைக்காக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Jun 2, 2025
- 09:58 am
தெய்வமாக மாறிய சிறுவர்கள் நட்ட கல்.. இந்த கோயில் தெரியுமா?
சிவகிரி அருகிலுள்ள தங்கமலை காளியம்மன் கோயில் சிறுவர்களால் உருவானதாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயிலின் தினசரி தரிசன நேரங்கள், சிறப்பு வழிபாட்டு நாட்கள், மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 31, 2025
- 11:37 am