AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Tamil Nadu Temples

Tamil Nadu Temples

இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

 

Read More

புதுப்பொலிவுடன் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது ஸ்ரீரங்கம் கிழக்குக் கோபுரம்!

Srirangam Temple's Eastern Gopuram: மூடப்பட்டிருந்த கிழக்குக் கோபுர வாயில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இந்நிகழ்வில் பங்கேற்று கோபுர வாயிலைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் மற்றும் கோவில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வாழ்நாள் முழுவதும் நிம்மதி வேண்டுமா? திருக்கடையூர் தரிசனத்தின் சிறப்பு!

Thirukkadaiyur Temple: ஆயுள் வளம், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் வேண்டி பக்தர்கள் அதிகம் தரிசிக்கும் புனிதத் தலமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் விளங்குகிறது. மார்க்கண்டேயரை மரணத்திலிருந்து காப்பாற்றிய சிவபெருமானின் அருளால், இந்தத் தலம் நீண்ட ஆயுள் அருளும் இடமாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

பழனி நில முறைகேடு வழக்கு.. இடைக்கால ஜாமீன் திடீர் ரத்து.. சார்- பதிவாளர் அதிரடி கைது..!

Palani Sub Registrar Arrested : பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி நிலம் முறைகேடு வழக்கில் பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது.

கோபுரக் கலசத்தின் பின்னணியில் இத்தனை அறிவியலா?

Temple Gopura Kalasam: கோவில் கோபுர உச்சியில் உள்ள கலசங்கள் வெறும் ஆன்மிகச் சின்னங்கள் மட்டுமின்றி, மனிதர்களைப் பாதுகாக்கும் இயற்கை இடிதாங்கிகளாகவும் தொலைநோக்கு விதை வங்கிகளாகவும் செயல்படுகின்றன. கலசத்தில் நிரப்பப்படும் வரகு தானியங்கள் மின்னலின் மின்சாரத்தைக் கடத்தாமல் அதன் வீரியத்தைக் கட்டுப்படுத்தி, ஊரையும் மக்களையும் ஆபத்திலிருந்து பாதுகாக்கின்றன.

பழனி முருகன் கோயில் நில மோசடி.. மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணை நிலை அறிக்கை தாக்கல்!

Palani Land Irregularities CBCID Investigation: பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நிலை அறிக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழு விவரத்தை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு… முக்கிய நபர் அதிரடி கைது!

Meenakshi Amman Temple Land Irregularity : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 60 கோடி நிலம் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்டதாக பெங்களூரில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கெனவே, ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பழனி நில முறைகேடு வழக்கு.. நிரந்தர சார்பதிவாளர்- உதவி அலுவலர் சஸ்பெண்ட்!

Palani Sub Registrar Suspended: பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கில் நிரந்தர சார் பதிவாளர் மற்றும் உதவி அலுவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, மற்றொரு சார் பதிவாளர், மாவட்ட பதிவாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.

ஆடி அமாவாசை திருவிழா: பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்குப் போறீங்களா?

Sorimuthu Ayyanar Temple: பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தாமிரபரணி ஆறு மற்றும் வனச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன நேரத்தில் மாற்றமா? உண்மை இதோ!

Tiruchendur Temple Darshan: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் நேரங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் என்றும் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு.. ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழு அமைப்பு!

Palani Land Irregularities Committee Formed: பழனி தண்டாயுதபாணி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்- பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை பத்திரப்பதிவு துறை அமைத்து உள்ளது.

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடல்… இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு.. மக்கள் பெரும் கொண்டாட்டம்!

Vallalar International Centre Plan Dropped : கடலூர் மாவட்டத்தில் வடலூரில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை கைவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் இடுக்கு பிள்ளையாரை வழிபட தவறக்கூடாது ஏன்?

Idukku Pillayar Temple: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயில், குறுகிய குகை போன்ற அமைப்பைக் கொண்ட மிகச் சிறப்பு வாய்ந்த வழிபாட்டுத் தலமாகும். இடைக்காட்டு சித்தர் பதித்த யந்திரங்களின் சக்தியால், பக்தர்கள் இக்குறுகிய வழியில் ஊர்ந்து சென்று வழிபாடு செய்யும் அபூர்வ நிகழ்வு இங்கு நடைபெறுகிறது.

கோல முருகனை வழிபட்டால் ஆண்டியாகிவிடுவோமா? இதுதான் உண்மை!

Kola Murugan: கோல முருகனை வழிபட்டால் குடும்ப வாழ்க்கையை விட்டு ஆண்டி ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கை சிலரிடையே உள்ளது. ஆனால் ஆன்மிக விளக்கங்களின்படி, அது உலக வாழ்க்கையை துறப்பதை அல்ல; ஆசை, அகங்காரம் போன்றவற்றை விட்டொழிக்கும் உயர்ந்த மனநிலையை குறிக்கிறது. அச்சமின்றி பக்தியுடன் வழிபடுவதுதான் இந்த வழிபாட்டின் உண்மையான நோக்கமாகும்.

இடுக்கு பிள்ளையாரை தரிசிக்க புதிய கட்டுப்பாடுகள்: யாருக்கெல்லாம் தடை? முழு விவரம்!

Idukku Pillayar Temple: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பிரசித்தி பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலில் பாறை இடுக்கைக் கடக்கும்போது பக்தர் ஒருவர் உயிரிழந்ததும், மற்றொரு பெண் சிக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடல் பருமன் உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் இதய நோய் அல்லது மூச்சுத்திணறல் கோளாறு உள்ளவர்கள் அந்தத் துவாரத்தின் வழியாகச் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ. 60 கோடி அறக்கட்டளை சொத்து முறைகேடு.. 19 பேர் மீது வழக்கு பதிவு!

Meenakshi Amman Temple Trust Properties Case : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளை சொத்து ரூ. 60 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் உள்ளிட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.