AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Tamil Nadu Temples

Tamil Nadu Temples

இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

 

Read More

மீனாட்சி சித்திரை திருவிழா 2026 ஆண்டுக்கான தேதி அறிவிப்பு

Madurai Chithirai Festival 2026: மதுரை சித்திரைத் திருவிழா 2026 ஏப்ரல் 19 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா நடைபெறும். 2026 ஏப்ரல் 30 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுடன் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

பக்தர்கள் திரளும் பழனி: பங்குனி உத்திர திருவிழா தேதி அறிவிப்பு!

Palani temple festival: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 2026 மார்ச் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 2026 மார்ச் 31-ந்தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 1-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. 2026 ஏப்ரல் 4-ந்தேதி கொடி இறக்குதலுடன் 10 நாள் திருவிழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராம நவமி திருவிழாவின் முக்கியத்துவம் மற்றும் ராம நாமத்தின் அர்த்தம்…

Rama Navami: ராம நவமி ஸ்ரீ ராமர் பிறந்த நாளாக இந்துக்கள் கொண்டாடும் முக்கிய திருநாள். இந்த நாளில் வழிபாடு, ராமாயணம் பாராயணம் மற்றும் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. ராம நாமம் ஆன்மிக அமைதியை அளிக்கும் என்று மத மரபுகளில் கூறப்படுகிறது. இந்த நாளில் நோன்பு இருந்து ராமரை தியானிப்பதும் பக்தர்களிடையே காணப்படுகிறது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடக்கும் ஒடுக்கு பூஜை… சிறப்பு என்ன?

Mandakkadu Bhagavathi Amman Temple: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் பல்வேறு சமுதாயங்களின் சார்பில் சந்தனகுடம் மற்றும் காவடி பவனி நடைபெற்றது. 2026 மார்ச் 10 நாளை நடைபெறும் ஒடுக்கு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

கோவை: வெள்ளியங்கிரியில் தொடரும் உயிரிழப்புகள்.. காரணம் என்ன?

Devotee Dies in Velliangiri Hills: கோவை அருகே வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்கு சென்ற பக்தர் ஹரிதாஸ், மலையிறங்கும் போது திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இரண்டு நாட்களில் இரண்டாவது பக்தர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட திருவிழா எப்போது தொடக்கம்..?

Tiruvarur Thyagaraja Temple Azhi Ther Festival: திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத் திருவிழா 2026 மார்ச் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 2026 மார்ச் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. வேத மந்திரங்கள் மற்றும் மங்கள இசையுடன் 54 அடி உயரக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சனி பகவானை எப்படி வழிபட்டால் நன்மை கிடைக்கும்..?

Worshipping Lord Shani: சனி பகவான் நீதியுடன் பலன்களை வழங்கும் நவக்கிரகங்களில் முக்கியமானவர். சனிக்கிழமை சனி வழிபாடு செய்தால் தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. சனி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிப்பதும் சிறந்த பலனை தரும் என கூறப்படுகிறது.

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Sani Peyarchi Festival 2026: திருநள்ளாற்றில் 2026 மார்ச் 6 அன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்..

Thirunallar Sani Peyarchi: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: திரளும் பக்தர்கள்..

Festival at Thirunallar Dharbaranyeswarar Temple: காரைக்கால் திருநள்ளாறில் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயரும் உலகப் புகழ்பெற்ற சனிப்பெயர்ச்சி விழா நாளை (மார்ச் 06, 2026) காலை 8.24 மணிக்கு மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

தடைகளை நீக்கி வெற்றி தரும் கணபதி ஹோமம்

Ganapati Homam: கணபதி ஹோமம் தடைகளை நீக்கும் என நம்பிக்கை நிலவுகிறது. சுபகாரியங்களில் இதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆன்மிக மரபில் கணபதி வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. அமாவாசை நாட்களிலும் ஹோமம் நடத்தப்படுகிறது. அதிகாலை ஹோமம் சிறப்பு பலன் தரும் என கூறப்படுகிறது.

தீர்த்தத்தின் அதிசயம்: சடங்குகளில் தண்ணீரின் முக்கியத்துவம் என்ன?

Water Rituals and Their Scientific Significance: தண்ணீர் ஆன்மிக வழிபாடுகளில் முக்கிய இடம் பெறுகிறது. சிவன் கோயில்களில் அபிஷேகம் முக்கிய சடங்காகும். தண்ணீரின் ஒலி மனஅழுத்தத்தை குறைக்கிறது. அதிக தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை மேம்படுத்துகிறது. நாட்டுப்புறங்களில் தீர்த்தம் மருத்துவ நம்பிக்கையுடன் உள்ளது. சமூக உறவுகளை இணைக்கும் சின்னமாக தண்ணீர் விளங்குகிறது.

பஞ்ச சபைகளில் நடராஜர் திருநடனத்தின் ஆன்மிக மகிமைகள்..!

Dance of Lord Nataraja: நடராஜர் ஐந்து சபைகளில் திருநடனம் புரிகிறார். பிரம்மம் முதல் ஆனந்தம் வரை பல தாண்டவங்கள் தரிசிக்கலாம். ஐந்தொழில்களை எடுத்துரைக்கும் தத்துவ வடிவம் நடராஜர். சிதம்பர ரகசியம் ஆன்மீக மர்மமாக விளங்குகிறது. ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் முக்கிய விழாக்கள். மொத்தம் 108 சிவதாண்டவங்கள் புகழ்பெற்றவை.

மஞ்சள் மழையில் நனையும் சிவன்: எங்கே இருக்கிறது இந்த கோயில்?

The Golden Temple of Jejuri: மகாராஷ்டிராவின் ஜெஜூரியில் வீற்றிருக்கும் கண்டோபா சுவாமி, அசுரர்களை அழிக்க அவதரித்த சிவனின் 'மார்த்தாண்ட பைரவர்' அம்சமாகவும், பழங்குடி மக்களின் குலதெய்வமாகவும் போற்றப்படுகிறார். மராட்டிய கட்டடக்கலை பாணியில் கோட்டை போல் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறையில் சிவன், முருகன் மற்றும் சூரியன் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.

திருப்புகழ் புத்தகத்தை வீட்டில் வைத்திருப்பதே பாதுகாப்பா..எப்படி?

Tiruppugazh at Home: திருப்புகழ் புத்தகம் வீட்டில் வைத்திருப்பது தவறு அல்ல; அது முருகனின் நாமங்களால் நிறைந்த ஆன்மீக பொக்கிஷம் என விளக்கப்படுகிறது. பூஜை அறை அல்லது உயரமான தூய்மையான இடத்தில், மதிப்புடன் வைப்பதே சரியான முறை என்று கூறப்படுகிறது. திருப்புகழை படித்து, கேட்டு, அதன் அர்த்தத்தை உணரும்போது தான் மன அமைதியும் நல்ல சிந்தனையும் கிடைக்கும்.