Tamil Nadu Temples
இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
நோய்கள் நீக்கும் கோவை மருதமலையில் அருள்புரியும் மருதாச்சலமூர்த்தி…
Marudamalai Murugan Temple: கோவை மருதமலையில் உள்ள மருதாச்சலமூர்த்தி முருகனை தரிசித்தால் நோய்கள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.837 படிகள் ஏறிச் செல்லும் இந்த மலைக்கோயில், பாம்பாட்டிச் சித்தர் வடித்த மூலஸ்தான சிலையால் சிறப்பு பெற்றது. அர்த்தஜாம பூஜை, மருது சுனை தீர்த்தம் மற்றும் ‘ஏழாம் படை வீடு’ எனும் பெருமை இத்தலத்தை தனித்துவப்படுத்துகின்றன.
- Sivasankari Bose
- Updated on: Mar 28, 2026
- 11:30 am IST
“வாழ்க வளமுடன்” வேதாத்திரி மகரிஷியின் நினைவு நாள் இன்று..!
Vethathiri Maharishi: தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் "வாழ்க வளமுடன்" என்ற தாரக மந்திரத்தின் மூலம் உலகிற்கு அமைதி மற்றும் வளத்தை போதித்தார். இவர் உருவாக்கிய 'மனவளக்கலை' பயிற்சிகள் இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான மன அழுத்த மேலாண்மைக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன.
- Sivasankari Bose
- Updated on: Mar 28, 2026
- 11:00 am IST
பாவ நிவர்த்தி தரும் ஸ்ரீராம நவமி – நங்கநல்லூரில் ஆன்மீக திருவிழா தொடக்கம்
Sri Rama Navami Celebrations: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா விமரிசையாக தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு இலட்சார்ச்சனை, யாகம், சீதாராம திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. விழாவின் நிறைவு நாளான மார்ச் 29ம் தேதி, சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் புறப்பாடு நடைபெறவுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Mar 27, 2026
- 11:30 am IST
பங்குனி உத்திர விழா… பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து!
Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 3 நாள்களுக்கு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், முக்கிய பிரமுகர் உள்ளிட்ட அனைவரும் ஒரே தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Mar 27, 2026
- 08:30 am IST
ராம நவமி தினத்தன்று வீட்டில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ?
Rama Navami: ராம நவமி தினத்தில் பெண்கள் சுத்தமாக இருந்து பூஜை செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அமைதி, பக்தி, நல்ல பழக்கங்கள் கடைபிடிப்பது அவசியம். தவறான செயல்களை தவிர்த்து குடும்ப நலத்தை மேம்படுத்த வேண்டும். ராம நவமி தினத்தில் செய்யப்படும் இந்த ஆன்மிக செயல்கள் மன அமைதியையும், குடும்ப நலத்தையும் உயர்த்தும் என்பதில் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
- Sivasankari Bose
- Updated on: Mar 26, 2026
- 13:05 pm IST
ராமர் அருள் பெற வேண்டுமா? நாளை ராமர் கோவிலுக்கு செல்லுங்கள்!
Special Ram Navami: ராம நவமி தினத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடிநீர், மருத்துவ வசதி, வழிகாட்டுதல் மையங்கள் போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Mar 26, 2026
- 10:30 am IST
114 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குறுங்குடியில் நடக்கும் மகாகும்பாபிஷேகம்…
Grand Mahakumbabishekam at Thirukkurungudi: திருக்குறுங்குடியில் 114 ஆண்டுகளுக்கு பிறகு ராயகோபுர கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. மார்ச் 25 காலை 9.20–10.30 மணிக்குள் நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அழகிய நம்பி 5 வடிவங்களில் அருள்பாலிக்கும் திவ்ய தேசம் திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பி கோயில்.
- Sivasankari Bose
- Updated on: Mar 25, 2026
- 12:30 pm IST
விரதம் இருப்பதால் என்ன பலன்..? ஜோதிடம் சொல்லும் மகத்துவம் இதுதான்!
Fasting Practices: விரதங்கள் பல வகைகளில் இருந்து வாழ்க்கையின் பல துறைகளில் நன்மை தருகின்றன. வார, மாத, திதி, நட்சத்திர விரதங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பலன்களை வழங்குகின்றன. விரதம் ஆன்மீகமும் உடல் நலனும் சேர்க்கும் ஒரு சிறந்த வழி. ஜோதிட அடிப்படையில் சரியான நாளில் விரதம் இருப்பது அதிக பலன் தரும். ஆலய வழிபாட்டுடன் விரதம் இணைந்தால் தோஷங்கள் நீங்கி நலன்கள் பெருகும்.
- Sivasankari Bose
- Updated on: Mar 25, 2026
- 12:00 pm IST
ராம நவமி: தர்மத்தை கற்றுத்தரும் தெய்வ அவதாரம்..!
Rama Navami: தசரத மன்னன் நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக, தர்மத்தை நிலைநாட்டத் திருமால் ராமனாக அவதரித்தார். சாதாரண மனிதனாக வாழ்ந்து கடமை மற்றும் ஒழுக்கத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்தியதே ராமாவதாரத்தின் தனிச்சிறப்பு. ராம நவமி நாளில் விரதமிருந்து ராமரை வழிபடுவதும், அவர் நாமத்தை ஜபிப்பதும் வாழ்வில் நற்பலன்களையும் அமைதியையும் வாரி வழங்கும்.
- Sivasankari Bose
- Updated on: Mar 25, 2026
- 10:32 am IST
திருமண தடை நீக்கும் திருத்தலம்: நென்மேலி அபிமுக்தீஸ்வரர் கோவிலின் சிறப்பு
Nenmeli Abhimuktheeswarar Temple: 12-ம் நூற்றாண்டுக்கு முன் மலைமேல் இருந்த ஈசன், பின் பக்தர்களுக்காக நென்மேலியில் அபிமுக்தீஸ்வரராகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கவர். கிழக்கு நோக்கி நாகாபரணத்துடன் அருளும் மூலவர், மயானத்தை நோக்கியபடி அமர்ந்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு முக்தி அளிப்பதாக நம்பப்படுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Mar 24, 2026
- 18:30 pm IST
மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்… வெளியான முக்கிய அறிவிப்பு
Mylapore Kapaleeswarar Temple Panguni Festival: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் மார்ச் 29 அன்றும், புகழ்பெற்ற அறுபத்து மூவர் உற்சவம் மார்ச் 30 அன்றும் பக்தி விமரிசையாக நடைபெறவுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Mar 24, 2026
- 17:46 pm IST
சஷ்டி விரதம்: தமிழக முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Sashti Vratham: இன்று சஷ்டி விரதம் காரணமாக தமிழகமெங்கும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருத்தணி, வடபழனி, குன்றத்தூர் உள்ளிட்ட தலங்களில் அபிஷேகம் நடந்தது. சுவாமிமலை மற்றும் திருப்பரங்குன்றம் கோவில்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் பவனி நடைபெற்றது. சென்னை மற்றும் பிற பகுதிகளில் பல கோவில்களில் புறப்பாடு, திருமஞ்சனம் நடந்தது
- Sivasankari Bose
- Updated on: Mar 24, 2026
- 11:40 am IST
திருவண்ணாமலை கோவிலில் மீண்டும் தொடங்கப்படும் சேவை.. பக்தர்கள் மகிழ்ச்சி..!
Tiruvannamalai Temple: திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் முக்கிய சிவன் கோவிலாகும். கியாஸ் பற்றாக்குறையால் இலவச லட்டு வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்தது. விறகு அடுப்பு மூலம் லட்டு தயாரிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
- Sivasankari Bose
- Updated on: Mar 23, 2026
- 10:31 am IST
திருச்செந்தூர்: பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினால் ரூ.1 லட்சம் அபராதம்..!
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் கோவிலில் தரிசன பாதையில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மேலாளர் இதில் ஈடுபட்டனர். ஒப்பந்த விதிமுறைகள் மீறப்பட்டதாக நிர்வாகம் கண்டறிந்தது. 4 பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். பாதுகாப்பு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- Sivasankari Bose
- Updated on: Mar 21, 2026
- 11:36 am IST
பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை ரத்து.. எப்போது தெரியுமா?
Palani Murugan Temple: பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். இது அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாக கருதப்படுகிறது. இங்கு பக்தர்களுக்காக இயக்கபப்ட்டு வரும் பழனி கோவில் ரோப் கார் சேவை பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. புதிய பெட்டி பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு முழுமையான புதிய பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Mar 21, 2026
- 10:27 am IST