Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Tamil Nadu Temples

Tamil Nadu Temples

இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

 

Read More

சென்னையில் ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?

சென்னையின் நங்கநல்லூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஐயப்பன் தனக்கு இந்த இடத்தில் கோயில் அமைய வேண்டும் என விருப்பப்பட்டதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. சபரிமலைக்கு சென்று வழிபட்ட பின் இந்த ஐயப்பன் இந்த கோயிலில் எழுந்தருளினார் எனவும் சொல்லப்படுகிறது.

இன்ஸ்டா புகழுக்காக நெல்லையப்பர் கோவிலில் ரீல்ஸ் எடுத்த 2K கிட்ஸ்..!

Nellaiappar Temple: நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் சிறுவர்-சிறுமியர் ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. கோவில் நிர்வாகம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தது; ரீல்ஸ் விவகாரத்திற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சமூக வலைதள புகழுக்காக புனித இடங்களில் இப்படியான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

வராரு வராரு அழகர் வராரு.. மதுரை கள்ளழகர் கோயில் சிறப்புகள்!

Kallazhagar Temple: மதுரையின் மிக முக்கியமான ஆன்மிக தலமாக கள்ளழகர் கோயில் திகழ்கிறது. எமதர்ம ராஜனின் தவத்தால் உருவானதாக சொல்லப்படும் இந்த கோயில் ஏராளமான புராண பின்னணியைக் கொண்டுள்ளது. சைவ, வைணவ சமயத்தின் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அழகர் கோயில் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உலக அளவில் பிரசித்திப் பெற்றது.

மதங்களை கடந்த மாரியம்மனின் அன்பு.. இந்த கோயிலுக்கு இப்படி ஒரு சிறப்பா?

உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள 200 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில், அதன் தனித்துவமான சிறப்புகளுக்குப் பெயர் பெற்றது. திருப்பூர் சுற்றுவட்டார மக்களின் காவல் நாயகியாக திகழும் இந்த மாரியம்மன் வரலாறு மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் குறித்து நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

விபூதி பிரசாதமாக புற்றுமண்.. ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயில் சிறப்புகள்!

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயில், 300 ஆண்டுகள் பழமையானது. இந்த மாரியம்மன் வேம்பு மரத்தடியில் சுயம்புவாக காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் பூக்குழி திருவிழா மிகவும் பிரபலமானது. பக்தர்கள் அம்மை நோய், குழந்தை வரம், திருமணம், வேலை வாய்ப்பு போன்ற வேண்டுதல்களுடன் வழிபாடு செய்கின்றனர்.

புற்று மண்ணால் உருவான மாரியம்மன்.. இந்த கோயில் சிறப்புகள் தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரபலமானது. தொடர்ச்சியான நடை சாற்றப்படாமல் காலை முதல் இரவு வரை தரிசன வசதி கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். வெங்கோஜி மகாராஜாவால் நிறுவப்பட்ட இக்கோயிலின் மாரியம்மனுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் நடக்கிறது.

Nataraja Temple: உலகிலேயே உயரமான நடராஜர் சிலை.. தமிழ்நாட்டில் இந்த கோயில் தெரியுமா?

இந்த நடராஜர் கோயிலில் தான் உலகின் உயரமான நடராஜர் சிலை (10 அடி 1 அங்குலம்) உள்ளது. அதுமட்டுமல்லாமல் 63 நாயன்மார்களுக்கான தனிக்கோயில், பளிங்கு சபை, வித்தியாசமான நவகிரக மண்டபம் போன்ற சிறப்புகளும் அமையப் பெற்றுள்ளது. கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகளைப் பற்றி காணலாம்.

ராமரின் சிவ வழிபாடு.. நிற்கும் அம்பாளுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம்.. இந்த கோயில் தெரியுமா?

அகத்திய முனிவரின் வரலாற்றுடன் தொடர்புடைய இந்தக் கோயிலில், செண்பகவல்லி அம்மனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இக்கோயிலில் சித்திரைத் தீர்த்தம், வசந்த உற்சவம், நவராத்திரி போன்ற திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இக்கோயில் பல்வேறு மதத்தினரின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோவில்பட்டியில் அமைந்திருக்கும் இந்த கோயில் பற்றி காணலாம்.

Veera Anjaneyar: குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா?

புதுப்பாக்கம் மலையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலின் வரலாறு மிக சிறப்பானது. லட்சுமணனுக்கு சஞ்சீவினி கொண்டு வந்த ஆஞ்சநேயர் இங்கு சந்தியா வந்தனம் செய்ததாகக் கூறப்படுகிறது. 108 படிகள் கொண்ட இந்தக் கோயிலில், ஆறடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. அனுமன் ஜெயந்தி மற்றும் ராமநவமி இங்கு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

Milagu Pillayar: மழை வேண்டி மிளகு அரைத்து வழிபாடு.. இந்த பிள்ளையார் கோயில் தெரியுமா?

TamilNadu Temples: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகிலுள்ள மிளகுப் பிள்ளையார் கோயிலின் வரலாறு, கேரள மன்னனின் வியாதி குணமாகக் கன்னட பிரம்மச்சாரியின் பங்களிப்பு ஆகியவை கேட்பதற்கே ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மேலும் அகத்திய முனிவரின் வழிகாட்டுதலால் உருவான கன்னடியன் கால்வாய், மழை பெய்வதற்காக செய்யப்படும் வழிபாடு ஆகியவைப் பற்றிக் காணலாம்.

மருதமலை முருகன் கோயிலுக்கு இனி கார்களில் செல்ல தடை…

Coimbatore Marudhamalai Murugan Temple: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணி காரணமாக, விசேஷ நாட்களில் நான்கு சக்கர வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவில் பேருந்துகள் அல்லது படிப்பாதை வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கழிவுகள் அகற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெயரைக் கேட்டாலே மதுரையே அஞ்சும்.. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் சிறப்புகள்!

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அருகே அமைந்துள்ளது. பிரளய காலத்தில் மதுரைக்கு எல்லை காட்டிய ஆதிசேசனின் விஷத்தை உண்டதால் காளியாக எழுந்தருளியதாக கோயில் வரலாறு கூறுகிறது. இங்கிருக்கும் அய்யனார் காளியம்மனுக்கு அடைக்கலம் கொடுத்ததால், அடைக்கலம் காத்த அய்யனார் எனவும் அழைக்கப்படுகிறார்.

Yoga Narasimhar: பிரதோஷ நாளில் அவதாரம்.. ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயில்!

மதுரை ஒத்தக்கடையில் அமைந்திருக்கும் யோக நரசிம்மர் கோயில், யானைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயிலாகும். ரோமச முனிவரின் யாகத்தால் உருவான இக்கோயில், பிரதோஷ பூஜைக்குப் பெயர் பெற்றது. நரசிம்மரின் உக்கிரம் தணிந்த தலமாகவும், திருமணத் தடையை நீக்கும் தலமாகவும் இது போற்றப்படுகிறது.

Madurai: தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில் தெரியுமா?

கல்யாண சுந்தரேஸ்வரர் - பால மீனாம்பிகை திருக்கோயில், மணக்கோலத்தில் காட்சி தரும் மீனாட்சியால் பிரசித்தி பெற்றது. வில்வ மரம் தலவிருட்சமாக உள்ள இக்கோயில், பாண்டிய மன்னர் காலத்து தொன்மை வாய்ந்தது. திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் இங்கு வழிபாடு செய்வது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

Temple Special: அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவன் கோயில்!

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சிறந்த பரிகாரத் தலமாக பார்க்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் அமைந்த இந்த ஆலயத்தில் வழிபடுவதால் நோய் நீங்கும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஜல்லிகை என்னும் அசுரப் பெண்ணின் பக்தியினால் இந்த கோயில் உருவானதாக சொல்லப்படுகிறது.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...