
Tamil Nadu Temples
இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
நம்பினால் கெடுவதில்லை.. தீராத நோய்களைப் போக்கும் நம்பு நாயகி அம்மன்!
தனுஷ்கோடியில் அமைந்துள்ள நம்புநாயகி அம்மன் கோயில், ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது. இங்குள்ள தீர்த்தங்கள் நோய் தீர்க்கும் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குழந்தை பாக்கியம், திருமணத் தடை, மனநோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண இக்கோயிலில் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்புகள் பற்றிக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 30, 2025
- 15:50 pm
திருச்செந்தூரில் மகா கும்பாபிஷேகம் விழா: 76 ஓம குண்டங்களுடன் யாகசாலை அமைப்பு
Tiruchendur Temple Maha Kumbabhishekam 2025: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஜூலை 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 8000 சதுர அடி யாகசாலை 76 ஓம குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தங்க அலங்காரத்துடன் கூடிய யாகசாலை பூஜைகள் 2025 ஜூன் 30 முதல் தொடங்கி, கும்பாபிஷேகத்திற்குப் பின் சண்முகர் தங்க சப்பரத்தில் வீதியுலா வருவார்.
- Sivasankari Bose
- Updated on: Jun 30, 2025
- 10:15 am
நெல்லையப்பர் கோவில்: ஆனிப் பெருந்திருவிழா கோலாகல தொடக்கம்..!
Nellayappar Temple's 518th Ani Festival: நெல்லையப்பர் கோவிலின் 518வது ஆனிப் பெருந்திருவிழா 2025 ஜூன் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் வாகன சேவைகள், பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறும். 2025 ஜூலை 8 அன்று தேரோட்டம் முக்கிய நிகழ்வாகும். பக்தர்கள் பாதுகாப்புக்காக 147 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Jun 30, 2025
- 09:33 am
Tiruchendur Temple: திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. யாகசாலை பூஜை பணிகள் தீவிரம்!
Tiruchendur Murgan Temple Maha Kumbabishegam 2025: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2025 ஜூலை 7 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ரூ.300 கோடி மதிப்பிலான பெருந்தட்ட மற்றும் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன. கணபதி பூஜையுடன் தொடங்கிய விழா, 2025 ஜூலை 1 முதல் யாகசாலை பூஜையுடன் தொடர்கிறது.
- Sivasankari Bose
- Updated on: Jun 29, 2025
- 08:11 am
கோவையின் காவல் தெய்வம்.. ‘கோனியம்மன்’ கோயில் பற்றிய சிறப்புகள்!
கோயம்புத்தூரின் மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோனியம்மன் கோயில், கொங்கு மண்டலத்தின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. கோவன் ஆட்சிக்காலத்தில் தோன்றிய இந்த கோயில், பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டுள்ளது. தினசரி பூஜைகள், ஆடி மாத ஊஞ்சல் உற்சவம், மாசி மாத திருவிழா என இக்கோயில் புகழ் பெற்றது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 28, 2025
- 13:38 pm
Laksmi Kuberar Temple: வாழ்க்கை செழிக்கும்.. இந்த லட்சுமி குபேரர் கோயில் தெரியுமா?
அருள்மிகு மகாலட்சுமி குபேரன் கோயில், செல்வ வளம் மற்றும் நிறைவான வாழ்க்கைக்காக பக்தர்களால் வழிபடப்படுகிறது. 2005 இல் கட்டப்பட்ட இக்கோயிலின் வரலாறு, மகாலட்சுமி, குபேரன் மற்றும் பிற தெய்வங்களின் சன்னதிகள், அஷ்டலட்சுமி, அட்சய திருதியை விழா போன்ற சிறப்புகள் பற்றி நாம் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 27, 2025
- 12:40 pm
Nellayappar Temple Car Festival 2025: நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்..!
Nellayappar Temple Car Festival 2025: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் 2025 ஜூலை 8 அன்று நடைபெறுகிறது. பாதுகாப்பான தேரோட்டத்திற்காக, நான்கு ரத வீதிகளிலும் மேல்நிலை மின் கம்பிகள் அகற்றப்பட்டு புதைவட மின் பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Jun 27, 2025
- 08:40 am
புதன் தோஷத்தால் அவதியா? – வழிபட வேண்டிய நவகைலாய கோயில்!
தூத்துக்குடி அருகிலுள்ள தென் திருப்பேரை கைலாசநாதர் கோயில், நவக்கிரகங்களில் புதனுக்குரிய ஆலயமாகும். நவகைலாயங்களில் ஏழாவது தலமாகவும் விளங்கும் இக்கோயிலில், தாமரை மலர் போன்ற பீடத்தின் மீது சிவலிங்கம் அமைந்துள்ளது. புதன் தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற நான்கு நவக்கிரக பகவான்கள் குதிரை வாகனத்தில் காட்சி கொடுக்கின்றனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 26, 2025
- 12:21 pm
பரணி நட்சத்திரமா நீங்கள்?.. கட்டாயம் வழிபட வேண்டிய கோயில் இதுதான்!
Tamilnadu Temples: மிருகண்ட மகரிஷியின் யாகத்துடன் தொடர்புடைய இக்கோவிலில், அக்னிஸ்வரர் மேற்கு நோக்கியும், சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பரணி நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபாடு செய்வதால் பெரும் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோயிலில் பல தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளது சிறப்பானதாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 25, 2025
- 12:10 pm
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
Tiruchendur Temple Kumbabhishekam: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா 2025 ஜூலை 7 அன்று நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 2025 ஜூலை 4 முதல் 8 வரை 400 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
- Sivasankari Bose
- Updated on: Jun 25, 2025
- 06:41 am
Saptha Kannigal: வேண்டிய வரம் தரும் சப்த கன்னிகள் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
இறை வழிபாட்டில் சப்த கன்னிகள் வழிபாடு என்பது மிக முக்கியமானது. பல்வேறு கோயில்களிலும் தங்களுக்கென தனி சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள சப்த கன்னிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றனர். அந்த கோயிலின் வரலாறு, சிறப்பு உள்ளிட்ட தகவல்களை நாம் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 24, 2025
- 12:40 pm
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரம் மாற்றமா? மதுரை கிளை உத்தரவு
Tiruchendur Temple Kumbabishekam: திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலின் குடமுழுக்கு விழா ஜூலை 7, 2025 அன்று காலை 6.15 முதல் 6.50 மணி வரை நடைபெறும் என உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மாற்று நேரம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எதிர்கால நிகழ்வுகளுக்கு கோவில் விதாயகரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jun 23, 2025
- 19:46 pm
Madurai Muruga Devotees Conference 2025: மதுரையில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு..!
Madurai Muruga Devotees Conference 2025: மதுரையில் 2025 ஜூன் 22 அன்று இந்து முன்னணி சார்பில் பிரமாண்ட முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் மலையைப் போன்ற மேடை மற்றும் அறுபடை வீடுகளின் மாதிரி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- Sivasankari Bose
- Updated on: Jun 22, 2025
- 06:39 am
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு… பாதுகாப்பு சரியாக உள்ளதா? ஏ.டி.ஜி.பி. ஆய்வு
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2025 ஜூலை 7-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதை முன்னிட்டு, ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
- Sivasankari Bose
- Updated on: Jun 21, 2025
- 13:42 pm
Varadharaja Perumal Temple: தமிழகத்தின் திருப்பதி.. இந்த கோயில் பற்றி தெரியுமா?
அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வரதராஜப் பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் திருப்பதி என அழைக்கப்படுகிறது. பஞ்சபாண்டவர்களின் வனவாசத்துடன் தொடர்புடைய இந்தக் கோயில், 7 என்ற எண்ணுடன் தொடர்புடைய சிறப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் கோயிலின் வரலாறு, சிறப்புகள், தரிசன நேரம் ஆகியவைப் பற்றிக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 21, 2025
- 11:54 am