Tamil Nadu Temples
இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
சீறி எழுந்த பார்வதி… முகவாயைப் பிடித்து கொஞ்சிக் கெஞ்சிய ஈசன்! – ஓர் அபூர்வ தல வரலாறு
The Divine Reconciliation: திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், சிற்பக் கலைக்கும் புராண வரலாற்றுக்கும் பெயர்பெற்றது. அங்கே வடிக்கப்பட்டுள்ள ஒரு தனித்துவமான சிற்பம், உலகைக் காக்க இறைவன் தன் மனைவியிடமே மண்டியிட்டு சமாதானம் செய்த நெகிழ்ச்சியான கதையை நமக்கு விவரிக்கிறது.
- Sivasankari Bose
- Updated on: May 13, 2026
- 13:10 pm IST
பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம்!
Velliangiri Hills Heavy Rain Alert: கனமழை எச்சரிக்கையால் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 13-5-2026 இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை. தடையை மீறுவோருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: May 13, 2026
- 12:32 pm IST
குடும்பத்தோட திருப்பதி போறீங்களா..? ஜூன் மாதம் வரை தரிசனம் ரத்து!
Tirupati Rush Alert: திருப்பதியில் கோடை கூட்டம் அதிகரித்ததால் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விஐபி தரிசனமும் இலவச டோக்கன்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடைபாதை பக்தர்களுக்கு நேர வரம்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவஸ்தானம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- Sivasankari Bose
- Updated on: May 8, 2026
- 12:20 pm IST
சித்ரா பவுர்ணமி- பாவ மன்னிப்பை அருளும் சித்திரகுப்தர் வழிபாடு
Chitra Pournami: சித்ரா பவுர்ணமி ஆன்மிக ரீதியாக பாவ நிவர்த்தி தரும் முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சித்திரகுப்தரை வழிபட்டால் கடந்த பிழைகளுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. விரதம், உப்பு தவிர்ப்பு மற்றும் தானம் செய்வது கர்ம பிணைப்புகளை குறைக்கும். இரவு நிலவொளியில் செய்யும் பிரார்த்தனை மன அமைதி மற்றும் நல்ல மாற்றங்களை அளிக்கும்.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2026
- 13:30 pm IST
சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு இலவச பேருந்து இயக்கம்!
Tiruvannamalai Girivalam Free Buses: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலத்தையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் சுமார் 100- க்கும் மேற்பட்ட இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்காலிக பேருந்து நிலையங்கள் முதல் கிரிவல பாதை வரை இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
- Gowtham Kannan
- Updated on: Apr 30, 2026
- 08:12 am IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
Madurai Meenakshi Temple: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று அதிகாலை உற்சாகமாகத் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் சுவாமியும் அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.
- Sivasankari Bose
- Updated on: Apr 29, 2026
- 09:30 am IST
பிரதோஷத்தில் இந்த வழிபாடு செய்தால் என்ன நடக்கும்?
Pradosham Worship: பிரதோஷம் என்பது சிவபெருமான் அவர்களை வழிபட மிகச் சிறந்த மாலை நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, மனதை சுத்தப்படுத்தி பக்தியுடன் வழிபடுவது முக்கியம். கோவிலில் அல்லது வீட்டில் பில்வ இலை, பால் போன்றவற்றால் பூஜை செய்து “ஓம் நமசிவாய” என ஜெபிப்பது வழக்கமாக உள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Apr 29, 2026
- 05:04 am IST
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2026: பெண்கள் தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம் அறிவிப்பு
Madurai Meenakshi Thirukalyanam 2026: மீனாட்சி திருக்கல்யாணம் 2026 ஏப்ரல் 28 அன்று நடைபெறுகிறது. முகூர்த்த நேரத்தில் தாலிச்சரடு மாற்றுவது சிறப்பாக கருதப்படுகிறது. மாற்ற முடியாதவர்கள் மாற்று நேரத்திலும் மாற்றிக் கொள்ளலாம். பெண்களுக்கு சில வழிமுறைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Apr 27, 2026
- 12:16 pm IST
சித்திரை திருவிழா.. “ஓம் நமச்சிவாய” கோஷத்துடன் அசைந்து வந்த தஞ்சாவூர் பெரிய கோவில் தேர்!
Thanjavur Brihadeeswarar Temple Chariot : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, திருத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேரானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.
- Gowtham Kannan
- Updated on: Apr 27, 2026
- 08:27 am IST
பக்தர்கள் கவனத்துக்கு.. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
Chitra Pournami Girivalam Time: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி, பக்தர்கள் கிரிவலம் வருவதற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- Gowtham Kannan
- Updated on: Apr 27, 2026
- 06:27 am IST
ஆன்மிகத்தின் அற்புதம்: வாரத்தின் ஏழு நாட்களும் விரதத்தின் பலன்களும்…
Divine Weekly Guide: வாரத்தின் ஏழு நாட்களும் இறை சிந்தனையோடு செயல்படுவது நம் வாழ்வை நல்வழிப்படுத்தும் ஒரு சிறந்த கருவியாகும். நம்பிக்கையுடன் கூடிய வழிபாடே வெற்றிக்கான திறவுகோல். நம் முன்னோர்கள் வகுத்து தந்த இந்த வழிபாட்டு முறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம், வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
- Sivasankari Bose
- Updated on: Apr 24, 2026
- 10:15 am IST
நந்தி வாயிலிருந்து வழியும் தீர்த்தம்: பெங்களூருவின் அதிசய தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்
The Divine Mystery of Malleshwaram Nandi Teertha: கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான தட்சிணமுக நந்தி தீர்த்த கோவில், நந்தி பகவான் சிவலிங்கத்திற்கு நேரடியாக அபிஷேகம் செய்யும் தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குள்ள நந்தி விக்ரகத்தின் வாயிலிருந்து இடைவிடாமல் தீர்த்தம் கொட்டுவதும், அது நேராகக் கீழே உள்ள சிவலிங்கத்தின் மீது விழுவதும் அறிவியலால் ஆன்மீக அதிசயமாகக் கருதப்படுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Apr 23, 2026
- 19:23 pm IST
பல்லக்கு பவனி, கம்பம் நடுதல்: பக்தர்களை ஈர்க்கும் சித்திரை விழாக்கள்
Chithirai Festival: மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி-அம்பாள் வீதியுலா பக்தர்களை ஈர்த்து வருகிறது. தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பாகற்காய் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேவேளை, வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலிலும் சித்திரை திருவிழா தொடங்கி பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Apr 23, 2026
- 09:00 am IST
சஷ்டி விரதம் என்றால் என்ன? அதன் காரணமும் பலன்களும்
Shashti Viratham: சஷ்டி விரதம் முருகப் பெருமானை வழிபடும் சிறப்பு நாள் விரதமாகும். இது தடைகள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் பெற உதவுகிறது. மன அமைதி மற்றும் ஆன்மீக நன்மைகள் கிடைக்கின்றன. குடும்ப நலன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒழுக்கம் மற்றும் பக்தி அதிகரித்து வாழ்க்கை நேர்மறையாக மாற உதவுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Apr 21, 2026
- 11:46 am IST
வாராகி அம்மன் அருளை பெறும் சித்திரை பஞ்சமி வழிபாடு!
Chithirai Valarpirai Panchami: சித்திரை வளர்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தீபம் ஏற்றி, மந்திர ஜபம் செய்து வேண்டுதல் செய்தால் செல்வ வளமும் நன்மைகளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக நிலைவாசல் பூஜை மூலம் அஷ்ட லட்சுமி மற்றும் குலதெய்வ அருளை பெறலாம்.
- Sivasankari Bose
- Updated on: Apr 20, 2026
- 15:15 pm IST