AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Tamil Nadu Temples

Tamil Nadu Temples

இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

 

Read More

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாரணை குழு அமைப்பு.. ஜூன் 20-க்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு..!

Tiruchendur Murugan Temple Investigation Committee: திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாரணை மேற்கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு மேற்கொண்டு வரும் ஜூன் 20- ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வைகாசி பிரம்மோற்சம்.. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது!

Kanchipuram Varadaraja Perumal chariot: வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது.

தேரில் வரும் ஜனக மாரி… தேடி வரும் குடும்ப அமைதி: சோழவந்தான் ரதோற்சவ வைபவம்!

Chozhavandan Mariamman Temple: இன்று ஜூன் 2, சுப காரியங்களைச் செய்ய உகந்த தேய்பிறை துவிதியை மற்றும் சித்தயோக நன்னாளாகும். மதுரை சோழவந்தான் அருள்மிகு ஜனக மாரியம்மன் கோவிலின் பிரம்மாண்ட தேரோட்ட விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இன்றைய தினத்தில் அம்பிகையை மனதார வழிபட்டால் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும் பெருகும்.

வைகாசி மாத பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

Tiruvannamalai Girivalam Auspicious Time: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, எந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்பன உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத கோயில் திருவிழா: பாரம்பரியத்தை தக்கவைத்த மறையூர் கறிவிருந்து

Men-Only Temple Festival: விருதுநகர் அருகே மறையூரில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசாணம் சுவாமி கோயில் திருவிழா தனித்துவமான மரபால் கவனம் பெற்றுள்ளது. இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று சிறப்பு அசைவ விருந்தில் கலந்து கொள்வது பாரம்பரியமாக தொடர்கிறது. சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக இந்த விழா பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்

Palani Murugan Temple: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை (மே 22) மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக ரோப்கார் சேவை ஒரு நாள் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு வடக்கயிறுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைப் பரிசோதிக்கும் இந்த வழக்கமான பணிக்காக நாளை இச்சேவை முழுமையாக நிறுத்தப்படுகிறது.

வைகாசி விசாகம் 2026 – வினை நீங்கி வெற்றி தரும் விரத முறை, வழிபாட்டு முறை

Vaikasi Visagam: வைகாசி விசாக திருநாளில் முருகப்பெருமானின் திருவடிகளைச் சரணடைந்து விரதமிருப்பதன் மூலம் தீவினைகளும், நீண்ட கால வேதனைகளும் துகள்துகளாகச் சிதறி மறைந்துவிடும், இந்த நன்னாளில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் பொருட்டு ஏழைகளுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம் போன்றவற்றை வழங்குவது நம் வினைகளின் அளவைக் குறைத்து முழுமையான விரத பலனைத் தரும்.

கோவில்களில் சிறப்பு பூஜையின் போது ஏன் மங்கள இசை இசைக்கப்படுகிறது…?

Divine Music: தமிழர்களின் தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்கள் மற்றும் பரிபாடல் போன்ற நூல்கள் அக்கால மக்களின் வாழ்வில் இசைக்கருவிகளும் பண்களும் பெற்றிருந்த முதன்மையைப் பறைசாற்றுகின்றன. தேவாரத்தின் தூய்மையான பண்ணிசையும், திருவாசகம் மற்றும் திருப்பாவையின் எளிய நாட்டுப்புற வடிவங்களும் இன்றும் ஆலயங்களில் அதிகாலை வேளையில் ஒலித்து பக்தர்களின் மனங்களை இறைவழியில் நெறிப்படுத்துகின்றன.

தமிழனின் உலக சாதனை: 1000 ஆண்டுகளைக் கடந்த தஞ்சை பெரிய கோவிலின் வியக்கவைக்கும் ரகசியங்கள்!

Thanjavur Brihadeeswarar Temple: மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், தமிழர்களின் ஒப்பற்ற கட்டிடக்கலைத் திறனுக்குச் சான்றாக விளங்குவதோடு யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இயற்கை பேரிடர்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கும் இக்கோவில், வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் உலகளாவிய அடையாளமாகத் திகழ்கிறது.

நடராஜரின் ஆனித் திருமஞ்சனம்: பக்தர்களைப் பரவசப்படுத்தும் தேர் திருவிழா தேதி அறிவிப்பு!

Chidambaram Natarajar: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் புகழ்பெற்ற ஆனித் திருமஞ்சனப் பெருவிழா வரும் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாகத் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நான்கு ரத வீதிகளிலும் கோலாகலமாக நடைபெற உள்ளது.

தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இந்த அபூர்வ நரசிம்மரை தரிசியுங்கள்!

Lakshmi Narasimhar Temple: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் தம்பதியர் ஒற்றுமைக்காக பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. மகாலட்சுமியை மடியில் அமர வைத்த அபூர்வ திருக்கோலத்தில் நரசிம்மர் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். திருமணத் தடை, செவ்வாய் தோஷம், கடன் பிரச்சினைகள் மற்றும் குடும்ப சிக்கல்கள் நீங்க பக்தர்கள் அதிக அளவில் வழிபடுகின்றனர்.

சீறி எழுந்த பார்வதி… முகவாயைப் பிடித்து கொஞ்சிக் கெஞ்சிய ஈசன்! – ஓர் அபூர்வ தல வரலாறு

The Divine Reconciliation: திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், சிற்பக் கலைக்கும் புராண வரலாற்றுக்கும் பெயர்பெற்றது. அங்கே வடிக்கப்பட்டுள்ள ஒரு தனித்துவமான சிற்பம், உலகைக் காக்க இறைவன் தன் மனைவியிடமே மண்டியிட்டு சமாதானம் செய்த நெகிழ்ச்சியான கதையை நமக்கு விவரிக்கிறது.

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம்!

Velliangiri Hills Heavy Rain Alert: கனமழை எச்சரிக்கையால் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 13-5-2026 இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை. தடையை மீறுவோருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குடும்பத்தோட திருப்பதி போறீங்களா..? ஜூன் மாதம் வரை தரிசனம் ரத்து!

Tirupati Rush Alert: திருப்பதியில் கோடை கூட்டம் அதிகரித்ததால் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விஐபி தரிசனமும் இலவச டோக்கன்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடைபாதை பக்தர்களுக்கு நேர வரம்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவஸ்தானம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சித்ரா பவுர்ணமி- பாவ மன்னிப்பை அருளும் சித்திரகுப்தர் வழிபாடு

Chitra Pournami: சித்ரா பவுர்ணமி ஆன்மிக ரீதியாக பாவ நிவர்த்தி தரும் முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சித்திரகுப்தரை வழிபட்டால் கடந்த பிழைகளுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. விரதம், உப்பு தவிர்ப்பு மற்றும் தானம் செய்வது கர்ம பிணைப்புகளை குறைக்கும். இரவு நிலவொளியில் செய்யும் பிரார்த்தனை மன அமைதி மற்றும் நல்ல மாற்றங்களை அளிக்கும்.