
Tamil Nadu Temples
இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
திருமண தடை நீக்கும் சாஸ்தா கோயில்.. எங்கே இருக்கிறது தெரியுமா?
சாத்தமங்கலம் சாஸ்தா கோவில், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் அமைந்துள்ளது. திருடர்களின் தொல்லை நீங்க சாஸ்தாவை வழிபட்டதன் விளைவாக உருவான கோவில் இது. பூரண புஷ்கலை சமேத ஹரிஹர புத்திரர் சிலை, ஒரே கல்லில் செய்யப்பட்டது. வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: May 17, 2025
- 12:56 pm
நவகைலாய ஸ்பெஷல்.. சந்திர பகவானுக்குரிய கோயிலின் சிறப்புகள்!
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள அம்மைநாதர் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவகைலாய கோயில்களில் ஒன்றாக உள்ளது. உரோமச முனிவரின் பிரதிஷ்டையால் உருவான இக்கோயிலில் அம்மைநாதர் மற்றும் ஆவுடை நாயகி அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் வரலாறு, சிறப்புகள், வழிபாட்டு முறைகள் பற்றிக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 16, 2025
- 15:57 pm
Lakshmi Kuberar: செல்வ வளம் பெருக வேண்டுமா? – லட்சுமி குபேரரை வழிபடுங்க!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ள லட்சுமி குபேரர் கோயில், இந்தியாவில் குபேரருக்கென அமைந்த ஒரே கோயிலாகும். சிவ பக்தனான குபேரரின் கதை, கோயிலின் தோற்றம், சிறப்புகள் மற்றும் தரிசன நேரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை நாம் காணலால். அதேபோல் பௌர்ணமி அல்லது அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் முக்கியத்துவத்தையும் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 15, 2025
- 15:56 pm
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!
பாபநாசம் பாபநாதர் சுவாமி திருக்கோயிலில் சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த பாபநாசநாதர் கோயில், நவகைலாய தலங்களில் ஒன்று. இந்திரனின் பாவ மோட்சம், அகத்திய முனிவர் தொடர்பு, தாமிரபரணி ஆற்றின் சிறப்பு உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கது.
- Petchi Avudaiappan
- Updated on: May 14, 2025
- 13:17 pm
கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா: பூசாரியால் தாலி கட்டும் விழா கோலாகலம்..!
Koothaandavar Temple Festival:கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அரவான் கண் திறத்தல் விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர். திருமாங்கல்யம் ஏற்றுக் கொண்ட திருநங்கைகள் பக்தியுடன் வழிபட்டனர். தேரோட்டம், களப்பலி போன்ற பிற நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.
- Sivasankari Bose
- Updated on: May 14, 2025
- 08:00 am
45 வெள்ளிக்கிழமை சென்றால் பலன்.. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்!
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கொங்கு மண்டலத்தின் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். சுமார் 200 ஆண்டுகள் பழமையான இக்கோவில், கொங்கு சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோட்டை பெரிய மாரியம்மன் என்றும் அழைக்கப்படும் இந்த அம்மன், 24 நாடுகளையும் காத்த தெய்வமாக போற்றப்படுகிறாள்.
- Petchi Avudaiappan
- Updated on: May 13, 2025
- 12:41 pm
Chitra Pournami 2025: தென் மாவட்டத்தில் சித்திரகுப்தன் கோயில் எங்குள்ளது தெரியுமா?
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் மட்டுமல்லாமல் சித்திரகுப்தனுக்கு தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியிலும் கோயில் அமைந்துள்ளது. இந்த சித்திரகுப்தர் கோயிலின் வரலாறு, தரிசன நேரம் மற்றும் முக்கியத்துவம் பற்றி காணலாம். சித்திரம் என்றால் ஆச்சரியம் எனவும், குப்தம் என்றால் ரகசியம் என்றும் பொருள்படும் என்பதால் இவர் சித்திரகுப்தன் என அழைக்கப்படுகிறார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 10, 2025
- 15:44 pm
பக்தர்களே..! பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவையில் நேர மாற்றம்…
Palani Temple Ropeway:பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கோடை விடுமுறையால் அதிகரித்துள்ளது. இதனால் ரோப் கார் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6:30 மணிக்கு தொடங்கி, மதியம் 1:30 முதல் 2:30 மணி வரை பராமரிப்பு. பின்னர் இரவு 10 மணி வரை இயங்கும்.
- Sivasankari Bose
- Updated on: May 10, 2025
- 14:50 pm
சித்ரா பௌர்ணமி விழா.. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!
சித்திரை பௌர்ணமியன்று கொண்டாடப்படும் சித்திரகுப்த ஜெயந்தியின் சிறப்புகள், காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி நாம் காணலாம். சவுதாஸ் மன்னனின் கதை மூலம் சித்திரகுப்தரின் அருளின் பெருமையையும் இதில் சொல்லப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: May 8, 2025
- 14:01 pm
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி 2025: கோவில் திருவிழா, சிறப்பு ரெயில்கள், பேருந்துகள் அறிவிப்பு
Chitra Pournami 2025: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2025 மே மாதம் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள், கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும். பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா வாகனங்கள் நகரத்திற்குள் அனுமதிக்கப்படாது.
- Sivasankari Bose
- Updated on: May 7, 2025
- 08:53 am
Devi Karumariamman: வேண்டியதை அருளும் தேவி கருமாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோயில், பார்வதி மற்றும் மாரியம்மனின் அம்சமாகக் கருதப்படுகிறது. நாகப்புற்றில் இருந்து சுயம்புவாகத் தோன்றியதால் கருமாரியம்மன் எனப் பெயர் பெற்றது. சூரியனுடன் நிகழ்ந்த கதையின் மூலம் இக்கோயில் சிறப்புப் பெற்றுள்ளது. பங்குனி, புரட்டாசி மாதங்களில் சூரியக் கதிர்கள் அம்மன் பாதத்தில் படும் அற்புதம் இங்கு காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 6, 2025
- 13:03 pm
வேண்டியது நிறைவேறுமாம்! – பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் மாசாணியம்மன்!
கோவை அருகிலுள்ள ஆனைமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயில் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய தலமாக திகழ்கிறது. கர்ப்பிணிப் பெண்ணின் மரணதண்டனைக்குப் பின் ஏற்பட்ட வறட்சியைத் தொடர்ந்து அம்மனுக்குக் கோயில் எழுப்பப்பட்டதாக வரலாறு உள்ளது. பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் இக்கோயில் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: May 5, 2025
- 13:04 pm
சூரசம்ஹாரம் கிடையாது.. இப்படியும் ஒரு முருகன் கோயில்.. எங்கு தெரியுமா?
வேலூர் மாவட்டம் இரத்தினகிரியில் அமைந்துள்ள பாலமுருகன் கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானது. அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிய இக்கோயில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகை தருகின்றனர். ஆறு என்பதற்கான சிறப்புடன் நடத்தப்படும் பூஜைகள், ஆடி கிருத்திகை அலங்காரம் ஆகியவை இந்த கோயிலில் பிரபலமானது.
- Petchi Avudaiappan
- Updated on: May 4, 2025
- 18:55 pm
மதுரை சித்திரைத் திருவிழா: ஆட்டுத் தோல் பை செய்யும் பணி தீவிரம்..!
Madurai Chithirai Festival 2025: 2025 மே 12 ஆம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் விழாவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்டுத் தோல் பைகளின் விற்பனை கீழமாசி வீதியில் மும்முரமாக உள்ளது. பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வைகை ஆற்றின் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
- Sivasankari Bose
- Updated on: May 4, 2025
- 08:02 am
Thiruvalleswarar Temple: குருபெயர்ச்சி 2025.. சென்னையில் செல்ல வேண்டிய குருபகவான் கோயில்!
2025 மே மாதம் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சென்னையிலுள்ள திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். சென்னையில் இருக்கும் குரு பகவானுக்குரிய தலம் என்பது இதன் சிறப்பாகும். 2025 ஆம் ஆண்டு குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 2, 2025
- 16:51 pm