Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Tamil Nadu Temples

Tamil Nadu Temples

இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

 

Read More

கோயில்களில் இனி இந்த பொருட்களுக்கு தடை.. பக்தர்களே நோட் பண்ணுங்க.. அறநிலையத்துறை அறிவிப்பு!

Plastic Ban In Tamil Nadu Temples : தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 12 திருக்கோயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த அறநிலையத்துறை தடை விதித்தள்ளது. திருச்செந்தூர், திருத்தணி, வடபழனி உள்ளிட்ட 12 கோயில்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாறாக, இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாடு செல்ல வாய்ப்பு.. வேண்டுதலை நிறைவேற்றும் மாரியம்மன்!

சிதம்பரம் அருகேயுள்ள நஞ்சை மகத்து வாழ்க்கை பனங்காடு மாரியம்மன் கோயிலின் வரலாறு பற்றிக் காணலாம். ஆங்கிலேயர் காலத்தில் தோன்றிய இந்தக் கோயில், வெளிநாடு செல்ல விரும்புவோர் மற்றும் குழந்தைப் பேறு வேண்டி பலர் வழிபடும் தலமாக உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் சூரிய ஒளி சிலைகள் மீது படும் அற்புத நிகழ்வும் இங்கு நடைபெறுகிறது.

Coonoor: வாழ்க்கை பிரச்னைகளை போக்கும் தந்தி மாரியம்மன் கோயில்!

நீலகிரி மாவட்டம் கூன்னூரில் உள்ள மேல்கடை வீதியில் அமைந்துள்ள தந்தி மாரியம்மன் கோயில், ஆங்கிலேயர் காலத்தில் தோன்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகும். சிறுமியாக தோன்றிய அம்மன், சுயம்புவாக இங்கு வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது. மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கும் இங்கு வருகை தந்து பிரார்த்தனை செய்கின்றனர்

வாழ்க்கையை வளமாக்கும் அந்தியூர் பத்ர காளியம்மன் கோயில்!

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் 2000 ஆண்டுகள் பழமையான தலமாகும். இக்கோயில் பாண்டிய மன்னர்களால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாகப்பாம்பு வடிவில் பசுவின் பால் குடித்த காளியம்மன், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயில் ராகு தோஷ நிவர்த்திக்கும் பிரசித்தி பெற்றது என ஐதீகமாக உள்ளது.

Angala Parameshwari: சிலிர்க்க வைக்கும் தெய்வீகம்.. இந்த அங்காள பரமேஸ்வரி கோயில் தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் அருகே அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலின் வரலாறு பொன்மேனி என்பவரின் வறுமை மற்றும் மகிசுரன் என்பவருடனான ஆதிக்கம் ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இக்கோயில் சென்னையில் இருந்து சரியாக 38 கிலோ மீட்டர் தொலைவில் அமையப் பெற்றிருக்கிறது.

சுமங்கலி வரம் அருளும் மாரியம்மன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில், சுயம்புவாக தோன்றிய அம்பாள் சிலையுடன் விளங்கும் புகழ்பெற்ற கோயிலாகும். நான்கு மலைகளுக்கு இடையே அமைந்த இக்கோயிலில் அம்பாளுக்கு எதிரே நிலைத்திருக்கும் கம்பத்தை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

சிவன், பெருமாள் இணைந்த உருவம்.. சங்கரநாராயணர் கோயில் சிறப்புகள்!

சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணர் கோயில், சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணக்கத்தின் அடையாளமாக விளங்குகிறது. சங்கன், பதுமன் ஆகிய நாக அரசர்களின் பக்தியின் விளைவாக உருவான இந்த கோயிலில், சிவன் மற்றும் பெருமாள் இணைந்த சங்கரநாராயணர் மூலவராக அருள்பாலிக்கிறார். கோயிலின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.

திருமண வரம் அருளும் தீப்பாய்ச்சி அம்மன்.. கோயில் எங்கே இருக்கு தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள தீப்பாச்சியம்மன் கோயில், அக்கம்மாள் என்ற பக்தியுள்ள பெண்ணின் தியாகக் கதையுடன் தொடர்புடையது. தன் கணவர் இறந்த பின்னர், அவருடன் உடன்கட்டை ஏறிய அக்கம்மாளின் பக்தியும், தோழி லட்சுமியின் உடன்பாடுமே கோயில் நிர்மாணத்திற்கு அடிப்படையாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

வேண்டியதை நிறைவேற்றும் மகா மாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?

சோழர் கால வரலாற்றைக் கொண்ட இக்கோயில், பயிர்த் தொழில் சிறக்கவும், செல்வ வளம் பெருகவும் கட்டப்பட்டது. குழந்தைப் பேறு, உடல் நலம், அம்மை நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இங்கு வழிபாடு செய்வது நன்மையளிக்கும். தினமும் திறந்திருக்கும் இக்கோயிலில், சித்திரை மாதத்தில் பத்து நாள் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும்.

பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்!

சிந்தாமணிநாதர் கோயில், வாசுதேவநல்லூரில் அமைந்துள்ளது. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை, சிவன் மற்றும் பார்வதியின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. கோயிலின் வரலாறு, பிருங்கி மகரிஷி மற்றும் ரவிவர்மன் மன்னனுடன் தொடர்புடையதாகும். புத்திர பாக்கியம் வேண்டி பலர் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த கோயில் பற்றி காணலாம்.

கண் தொடர்பான பிரச்னையை தீர்க்கும் கண்ணுடைய நாயகி அம்மன்!

ஆடி மாதத்தில் சிறப்பு வாய்ந்த சிவகங்கை நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் காணலாம். சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கும் அம்மன், பல்வேறு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதிலும் புகழ்பெற்றவர். ஆன்மிக சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதத்தில் இந்த கோயிலில் வழிபட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

மதுரையின் காவல் தெய்வம்.. வண்டியூர் மாரியம்மன் கோயில் சிறப்புகள்!

வண்டியூர் மாரியம்மன் கோயில், மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள 800 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலாக உள்ளது. பாண்டிய மன்னர் கூன் பாண்டியன் காலத்தில் உருவான இக்கோயிலில் மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் மூலவர்களாக உள்ளனர். இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழா புகழ்பெற்றது.

Kaveri Amman: ஆடிப்பெருக்கு நாள்.. கண்டிப்பாக வழிபட வேண்டிய கோயில் இதுதான்!

Aadiperukku Worship: திருச்சியில் உள்ள காவேரி அம்மன் கோயில், ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் இருந்து கரை ஒதுங்கிய அம்மன் சிலை இக்கோயிலில் வீற்றிருக்கிறது. ஆடிப்பெருக்கு நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நீர்வளம், குடும்ப நலன், விவசாயம் போன்றவற்றிற்காக மக்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

குழந்தை வரம்.. பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் சின்ன மாரியம்மன் கோயில்!

Chinna Mariamman Temple: ஈரோடு கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள 150 ஆண்டு பழமையான சின்ன மாரியம்மன் கோயில், குழந்தைகளால் கட்டப்பட்ட கூழாங்கல் கோயிலாகத் தொடங்கி இன்று பெரும் கோயிலாக வளர்ந்துள்ளது. மழை, நோய் விலகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆடி மாதம், கார்த்திகை மாதத் தேரோட்டம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளாகும்.

என்ன வேண்டினாலும் நிறைவேறும்.. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மகிமை!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயிலாகும். திப்பு சுல்தான் காலத்துடன் தொடர்புடைய இக்கோயில், தமிழ்நாட்டில் தசாவதாரம் கொண்டாடப்படும் ஒரே கோயில் என்பது சிறப்பானதாகும். தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.