AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பக்தர்கள் திரளும் பழனி: பங்குனி உத்திர திருவிழா தேதி அறிவிப்பு!

Palani temple festival: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 2026 மார்ச் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 2026 மார்ச் 31-ந்தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 1-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. 2026 ஏப்ரல் 4-ந்தேதி கொடி இறக்குதலுடன் 10 நாள் திருவிழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் திரளும் பழனி: பங்குனி உத்திர திருவிழா தேதி அறிவிப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 10 Mar 2026 18:15 PM IST

 

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா வருகிற 2026 மார்ச் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 2026மார்ச் 31-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 2026 ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4.20 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. 2026 ஏப்ரல் 4-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரமும் ஒன்றாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதுதான். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழா பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்துடன் நடைபெறும் முக்கிய ஆன்மிக நிகழ்வாக கருதப்படுகிறது.

கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம்

இந்த வருடத்திற்கான திருவிழா வருகிற 2026, மார்ச் 26-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, வெள்ளியானை, தங்க குதிரை, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த வாகன ஊர்வலங்கள் பக்தர்களுக்கு ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாகும்.

மார்ச் 31-ல் திருக்கல்யாணம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 2026 மார்ச் 31-ந்தேதி நடைபெறும். அன்றைய தினம் இரவு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணி அளவில் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி சன்னதி வீதி, கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வை காண பக்தர்கள் பெருமளவில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 1-ல் தேரோட்டம்

பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 2026 ஏப்ரல் 1-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 4.20 மணி அளவில் தேரோட்டம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து சுவாமியை தரிசிப்பது இந்த விழாவின் மிக முக்கிய ஆன்மிக நிகழ்வாக கருதப்படுகிறது.

Also Read: ராம நவமி திருவிழாவின் முக்கியத்துவம் மற்றும் ராம நாமத்தின் அர்த்தம்…

கலை நிகழ்ச்சிகளுடன் விழா

2026 ஏப்ரல் 4-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம், நாதஸ்வர கச்சேரி, வீணை இன்னிசை, பொம்மலாட்டம், தேவராட்டம், சாக்ஷபோன் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தங்க ரத புறப்பாட்டில் மாற்றம்

திருவிழா நடைபெறும் மார்ச் 30-ந்தேதி முதல் 2026 ஏப்ரல் 3-ந்தேதி வரை மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 மார்ச் 30-ந்தேதி மட்டும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தங்க ரத புறப்பாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கியுள்ளது.

Follow Us