AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி – ஈஷா மையம் அறிவிப்பு

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருவதாகவும், கிடைக்கும் முக்கியமான தகவல்களை குடும்பத்தினருக்கும், ஈஷா சமூகத்தினருக்கும் அவ்வப்போது தெரிவித்து வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தங்களது ஆழ்ந்த ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும் ஈஷா அறக்கட்டளை கூறியுள்ளது.

நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி – ஈஷா மையம் அறிவிப்பு
ஈஷா ஃபவுண்டேசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Sep 2026 19:50 PM IST

நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஏற்பட்டுள்ள கடும் திடீர் வெள்ளத்தால் ஈஷா மையத்தை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த கடினமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஈஷா தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் பல்வேறு நகரங்களில் உள்ள தன்னார்வலர்கள் நேரடியாகவும், தொலைதூரத்தில் இருந்தும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருவதாகவும், கிடைக்கும் முக்கியமான தகவல்களை குடும்பத்தினருக்கும், ஈஷா சமூகத்தினருக்கும் அவ்வப்போது தெரிவித்து வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தங்களது ஆழ்ந்த ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும் ஈஷா அறக்கட்டளை கூறியுள்ளது.

நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

 

Follow Us