IPL 2026: பிளே ஆஃப் சுற்றில் ஒரு அணிக்கு மட்டும்.. தோற்றால் 2 வாய்ப்பு.. ஏன் தெரியுமா?
IPL 2026 Playoffs: இந்தியன் பிரீமியர் லீக்கின் போட்டி அமைப்பின்படி, தகுதிச்சுற்று 1-ல் விளையாடும் அணிகளுக்கு 2 வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஐபிஎல் 2026-ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. எனவே, வருகின்ற 2026 மே 26-ஆம் தேதி, தகுதிச்சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2026 (IPL 2026) பிளேஆஃப் சுற்று வருகின்ற 2026 மே 26ம் தேதி தொடங்குகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) ஆகிய 3 அணிகள் தங்களது பிளேஆஃப் இடங்களை உறுதி செய்துள்ளன. குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் சுற்றுகளில் பங்கேற்கும் அணிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஐபிஎல் போட்டி அமைப்பின்படி, ஒவ்வொரு அணிக்கும் இறுதிப் போட்டிக்குச் செல்ல 2 வாய்ப்புகள் வழங்கப்படும். அதாவது, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
ALSO READ: ஹெட்டுடன் கைகுலுக்க மறுத்த கோலி.. களத்தில் காரசார வாதம்.. போட்டியில் நடந்தது என்ன?




ஐபிஎல் 2026-ல் யாருக்கு 2 வாய்ப்புகள் கிடைக்கும்?
𝗜𝗧’𝗦 𝗙𝗜𝗡𝗔𝗟𝗟𝗬 𝗧𝗜𝗠𝗘! 🥳
General tickets for Qualifier 2 and Final are NOW LIVE 🎟️
Get your tickets here 👉 https://t.co/B4EmAuIpZm#TATAIPL | #TheFinalLeap pic.twitter.com/MyRuHqolzw
— IndianPremierLeague (@IPL) May 23, 2026
இந்தியன் பிரீமியர் லீக்கின் போட்டி அமைப்பின்படி, தகுதிச்சுற்று 1-ல் விளையாடும் அணிகளுக்கு 2 வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஐபிஎல் 2026-ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. எனவே, வருகின்ற 2026 மே 26-ஆம் தேதி, தகுதிச்சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. தகுதிச்சுற்று 1-ல் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். எனவே, வருகின்ற 2026 மே 26-ஆம் தேதி பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும். முதல் தகுதிச் சுற்றில் தோற்ற பிறகு, அந்த அணி இரண்டாவது குவாலிபையர் சுற்றில் விளையாடும். இரண்டாவது தகுதிச் சுற்றில், முதல் தகுதி சுற்றில் தோற்ற அணி, எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியை எதிர்கொள்ளும்.
ALSO READ: ஸ்பின் ஆக்ஷனில் வேகப்பந்து..? க்ருனால் பாண்ட்யா பந்துக்கு காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்!
எலிமினேட்டர் சுற்றில் யார் யாரை எதிர்கொள்வார்கள்?
எலிமினேட்டர் போட்டிக்கான இரு அணிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், நான்காவது மற்றும் இறுதி பிளேஆஃப் இடம் இன்னும் காலியாக உள்ளது. எலிமினேட்டர் போட்டியில், ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய நான்கு அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளும்.