IPL 2026: இன்னும் 3 லீக் போட்டிகள்.. ஒரு இடத்திற்கு போட்டியிடும் 4 அணிகள்.. எந்த அணிக்கு வாய்ப்பு அதிகம்?
IPL 2026 Playoff Scenarios: மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றாலும் ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறாது. ஒருவேளை தோல்வியடைந்தால், இன்றைய லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். இதற்கிடையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெல்ல வேண்டும்.
ஐபிஎல் 2026 (IPL 2026) பிளேஆஃப் போட்டி அட்டவணை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. ஏற்கனவே, 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. 4வது அணி எது என்பது இன்னும் 2 நாட்களில் தெரிந்துவிடும். இருப்பினும், தகுதிபெறும் நான்காவது அணியாக ஆவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings), ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளேஆஃப் இடத்திற்காக இன்னும் போட்டியில் உள்ளன. புள்ளி அட்டவணையில் முதல் 2 இடங்களைப் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது.
ALSO READ: பிளே ஆஃப் நோக்கி பஞ்சாப்.. லாக் செய்ய நினைக்கும் லக்னோ.. மழைக்கு வாய்ப்பா?
மூன்றாவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிளேஆஃப் சுற்று வருகின்ற 2026 மே 26ம் தேதி தொடங்குகிறது, இறுதிப் போட்டியானது வருகின்ற 2026 மே 31ம் தேதி நடைபெற உள்ளது. லீக் சுற்றில் இன்னும் 3 போட்டிகளே எஞ்சியுள்ளன. ஆனால் இந்த நான்காவது இடத்திற்கான சமன்பாடு என்ன, பிளேஆஃப் சுற்றுக்கு எளிதான பாதை யாருக்கு உள்ளது? முழுமையான பிளேஆஃப் சமன்பாட்டை இங்கே தெரிந்து கொள்வோம்.




ராஜஸ்தான் ராயல்ஸ்:
பிளேஆஃப்களுக்குச் செல்வதற்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மட்டுமே பாதை மிகவும் எளிதாக உள்ளது. வருகின்ற 2026 மே 24ம் தேதியான நாளை மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டும் போதும். மும்பையைத் தோற்கடித்தாலே ராஜஸ்தான் அணி பிளேஆஃப் இடத்தை உறுதி செய்துவிடும். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றாலே, தேவையான 16 புள்ளிகள் கிடைக்கும். பிளேஆஃப் போட்டியில் உள்ள 4 அணிகளில், ராஜஸ்தானால் மட்டுமே 16 புள்ளிகளை எட்ட முடியும்.
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றாலும் ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறாது. ஒருவேளை தோல்வியடைந்தால், இன்றைய லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். இதற்கிடையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெல்ல வேண்டும். ஆனால், டெல்லி அணியின் இந்த வெற்றி ராஜஸ்தானின் நிகர ரன் ரேட்டை மிஞ்சும் அளவுக்குப் பெரியதாக இருக்கக்கூடாது.
பஞ்சாப் கிங்ஸ்:
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் பணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அதன்பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது கடைசி லீக் கட்டப் போட்டியில் தோற்க வேண்டும் என்று நம்ப வேண்டும். இதுகூட பஞ்சாப் அணிக்கு பிளேஆஃப் இடத்தை உறுதி செய்யாது. ஏனெனில் பஞ்சாப் அணி, கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெறவும் பிரார்த்திக்க வேண்டியிருக்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
15 புள்ளிகளை எட்டுவதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைப் பெற வேண்டும். பஞ்சாப் அணியும் லக்னோவைத் தோற்கடிப்பதன் மூலம் 15 புள்ளிகளை எட்டும். ஆனால், புள்ளிகள் சமமாக இருக்கும் பட்சத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்கள் நிகர ரன் ரேட் பஞ்சாபின் விகிதத்தை விட சிறப்பாக இருக்கும் என்று நம்ப வேண்டியிருக்கும். மும்பை இந்தியன்ஸிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்பதும் கொல்கத்தாவுக்கு முக்கியமானதாக இருக்கும்.
ALSO READ: சிஎஸ்கே பயிற்சிக்குழுவில் தலையிட்ட தோனி.. வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு!
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகவும் கடினமான பிளேஆஃப் பாதை காத்திருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தினால், 14 புள்ளிகள் கிடைக்கும். மேலும், டெல்லியின் மோசமான -0.871 நிகர ரன் ரேட்டை ப்ளஸில் மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. கொல்கத்தாவை வீழ்த்திய பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டிகளில் தோற்க வேண்டும் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி காத்திருக்க வேண்டும்.