AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsEng : அறிமுகமாகும் 15 வயதான சூர்யவன்ஷி – சச்சினின் சாதனைக்கு முற்றுப்புள்ளி

இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி! இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலம், 15 வயது 99 நாட்களில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமான இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IndvsEng : அறிமுகமாகும் 15 வயதான சூர்யவன்ஷி – சச்சினின் சாதனைக்கு முற்றுப்புள்ளி
வைபவ் சூர்யவன்ஷி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Jul 2026 20:07 PM IST

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணியில் சர்வதேச அளவில் அறிமுகமான மிக இளம் வயது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்று வைபவ் வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச போட்டியில் அறிமுகமாகும் 15 வயதான சூர்யவன்ஷி

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் அணியில் சேர்க்கப்படுவதாக டாஸ் நிகழ்வின்போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அறிவித்தார். போட்டி தொடங்குவதற்கு முன், இந்திய வீரர்களின் கைதட்டல் மற்றும் உற்சாக முழக்கங்களுக்கு மத்தியில், சக வீரர் திலக் வர்மாவிடமிருந்து இந்த இளம் வீரர் தனது அறிமுகத் தொப்பியைப் பெற்றுக்கொண்டார். மைதானத்தில் இருந்த அனைவருக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.

இதையும் படிக்க : IND vs ENG ODI Series: 3 போட்டிகள்.. 16 வீரர்கள்! ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! முதல் போட்டி எப்போது?

வெறும் 15 வயது 99 நாட்களாகும் சூர்யவன்ஷி இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டியில் விளையாடியதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்தார். இதன் மூலம், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் ஷஃபாலி வர்மா ஆகியோர் வசம் இருந்த சாதனைகளை அவர் முறியடித்தார். மேலும் ஷஃபாலி வர்மா 15 வயது 239 நாட்களிலும், சச்சின் டெண்டுல்கர் 16 வயது 205 நாட்களிலும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நிலையில், அவர்கள் இருவரின் சாதனைகளையும் வைபவ் இப்போது முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வு என்னவென்றால், கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்த அதே மான்செஸ்டர் மைதானத்தில்தான் வைபவ் இன்று அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற சச்சின் ஆட்டமிழக்காமல் 119 ரன்கள் குவித்துத் தனி ஒருவராகப் போராடினார். அதே வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில் வைபவ் இப்போது தனது சர்வதேசப் பயணத்தைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : IND vs ENG: கட்டாய வெற்றிக்காக போராடும் இந்தியா.. சொந்த மண்ணில் கெத்து காட்டுமா இங்கிலாந்து..? பிட்ச் ரிப்போர்ட் இதோ!

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பிறகு, கேப்டன் ஷ்ரேயாஸ், வைபவ் குறித்து பேசியதாவது, கடந்த சில மாதங்களாக ஐபிஎல்லில் வைபவ் வெளிப்படுத்திய ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை அவர் முழுமையாகத் தகுதியுடன் பெற்றுள்ளார். எந்தவித அழுத்தமும் இன்றி இயல்பாக விளையாடுவதற்கான மனவலிமை அவரிடம் உள்ளது என்று ஷ்ரேயாஸ் குறிப்பிட்டார். அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் போன்ற முன்னணி வீரர்களுடன் இணைந்து, இந்த இளம் திறமையாளர் ஆட்டத்தைத் தொடங்கவுள்ளார்.

Follow Us