IND W vs PAK W: பாகிஸ்தானுக்கு எதிராக இது நடந்தால்.. ரன் வேட்டையில் நம்பர் 1க்கு முன்னேறும் ஸ்மிருதி மந்தனா!
Smriti Mandhana: மிதாலி ராஜ் மற்றும் பிஸ்மா மஹ்ரூஃப் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், தற்போது 3வது இடத்தில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, வருகின்ற 2026 ஜூன் 14 அன்று முன்னாள் ஜாம்பவான் வீராங்கனை முந்தி முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 (ICC Womens T20 World Cup 2026) போட்டியில் இந்திய மகளிர் அணி தனது பயணத்தை 2026 ஜூன் 14 ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக தொடங்குகிறது. இந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் (IND W vs PAK W) இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சிறப்புமிக்க சாதனையை படைக்கவிருக்கிறார். அதாவது, இரு நாடுகளுக்கும் இடையிலான டி20 போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
ALSO READ: நேருக்கு நேரில் இந்திய மகளிர் ஆதிக்கம்.. பின்னடைவில் பாகிஸ்தான் மகளிர்..!
இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டிகளில் அதிக ரன்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தற்போது 3வது இடத்தில் உள்ளார் . ஸ்மிருதி மந்தனா பாகிஸ்தானுக்கு எதிராக 10 டி20 போட்டிகளில் 239 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை, பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மரூஃப் பிடித்துள்ளார். மரூஃப் இதுவரை 14 போட்டிகளில் 248 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில், மிதாலி ராஜ் பாகிஸ்தானுக்கு எதிராக 10 டி20 போட்டிகளில் விளையாடி 315 ரன்களுடன் தற்போது முதலிடத்தில் உள்ளார்.




ஸ்மிருதி மந்தனாவுக்கு நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வாய்ப்பு:
மிதாலி ராஜ் மற்றும் பிஸ்மா மஹ்ரூஃப் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், தற்போது 3வது இடத்தில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, வருகின்ற 2026 ஜூன் 14 அன்று முன்னாள் ஜாம்பவான் வீராங்கனை முந்தி முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். முதலிடத்தைப் பிடிக்க ஸ்மிருதி மந்தனாவுக்கு இன்னும் 77 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இப்போது நீங்கள் கேட்கலாம், பாகிஸ்தானுக்கு எதிராக 77 ரன்கள் அடிப்பதன் மூலம் ஸ்மிருதியால் முதலிடத்தைப் பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு எளிதானது அல்ல என்றாலும், கடினமானதும் அல்ல என்றே கூறலாம்.
ALSO READ: ஒரே ரன்தான்.. இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் செய்யப்போகும் சாதனை
இங்கிலாந்து மைதானமும் ஸ்மிருதி மந்தனாவும்..
ஸ்மிருதி மந்தனா கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் தனது அதிகபட்ச டி20ஐ ஸ்கோருடன் தனது முதல் சதத்தை அடித்தார். அந்தப் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இம்முறை, 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை எட்ஜ்பாஸ்டனில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற உள்ளது. இருப்பினும், மாதம் ஒரே ஜூன் மாதம் என்பதால், ஸ்மிருதி அந்த வரலாற்றை மீண்டும் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம். அப்படி நடந்தால், 2026 ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, ஸ்மிருதி மந்தனா இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற டி20ஐ போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெறுவது மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு வெற்றியையும் தேடி தர முடியும்.