T20 World Cup 2026: நிதி இழப்பா? பேச்சுவார்த்தையில் இறங்கிய ஐசிசி.. முடிவை மாற்றுமா பாகிஸ்தான்?
India vs Pakistan Match: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி டி20 உலகக் கோப்பையில் மிக முக்கியமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி நடைபெறவில்லை என்றால் ஒரு குறிப்பிடத்தக்க நிதி இழப்பு ஐசிசிக்கு ஏற்படும். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) வரவிருக்கும் குரூப் ஸ்டேஜில் இந்தியாவிற்கு எதிரான போட்டியை புறக்கணிப்பது குறித்து விவாதங்களில் ஈடுபடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை அணுகியுள்ளது. முன்னதாக, கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான தனது வரவிருக்கும் குரூப் ஸ்டேஜ் போட்டியை புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் வெளியேறியதை தொடர்ந்து, ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் (Pakistan Cricket Team) இத்தகைய முடிவு எடுத்துள்ளது.
ALSO READ: இந்திய போட்டி புறக்கணிப்பு! பாகிஸ்தான் வீரர்களின் திறமையை அழிக்கும் செயல்.. கபில் தேவ் விமர்சனம்!




ஐசிசியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் பிசிபி:
ஐசிசி., பிசிபியுடன் இதுதொடர்பான உரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும், சரியான பேச்சுவார்த்தை மூலம் இந்த சர்ச்சையை தீர்த்து வைக்க ஐசிசி விரும்புவதாகவும் தெரிகிறது. ஏனெனில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டிகள் உலக கிரிக்கெட் ரசிகர்களை எதிர்பார்ப்பை தூண்டும் ஒரு போட்டியாகும். எனவே, இத்தகைய போட்டியின் முக்கியத்துவத்தை அறிந்து ஐசிசி பேச்சுவார்த்தை நடத்துகிறது. லாகூரில் நடந்த போட்டி தொடர்பாக ஐ.சி.சி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் (பி.சி.பி) ஒரு சந்திப்பை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் பிசிசிஐயின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் யோசித்தால், ராஜீவ் சுக்லா பதிலளித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பிசிசிஐயின் நிலைப்பாடு என்ன..?
#WATCH | Delhi | On Pakistan to boycott its match against India in the ICC Men’s T20 World Cup 2026, BCCI Vice-President Rajeev Shukla says, “We will follow whatever decision is taken by ICC… BCCI has no statement on this…” pic.twitter.com/gug8zToSic
— ANI (@ANI) February 9, 2026
இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பிசிசிஐயின் நிலைப்பாடு தொடர்பாக பேசிய பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா, “ஐசிசி எடுத்த முடுவை நாங்கள் பின்பற்றுவோம். இதுகுறித்து பிசிசிஐ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.” என்றார்.
ஐசிசியின் இந்த பேச்சுவார்த்தைக்கு காரணம் என்ன..?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி டி20 உலகக் கோப்பையில் மிக முக்கியமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி நடைபெறவில்லை என்றால் ஒரு குறிப்பிடத்தக்க நிதி இழப்பு ஐசிசிக்கு ஏற்படும். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால்தான் போட்டி நடைபெறுவதை உறுதிசெய்ய ஐசிசி எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால் ரூ.4500 கோடி இழப்பு – என்ன காரணம்?
இந்தியா – பாகிஸ்தான் போட்டி சர்ச்சை எப்போது தொடங்கியது..?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் முஸ்தாபிசுரை வாங்கியது. முஸ்தாபிசுரை போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்தியாவில் கோரிக்கைகள் எழுந்தன. பிசிசிஐ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கொல்கத்தா அணி முஸ்தாபிசுரை நீக்கியது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல்லில் இருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக, வங்கதேச அணி இந்தியாவில் உலகக் கோப்பை போட்டியை விளையாட மறுத்தது.
பின்னர் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி வங்கதேசம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை விளையாட மறுத்தது. அப்போது பாகிஸ்தான், வங்கதேசத்தின் மீது அனுதாபம் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மறுத்துவிட்டது.