Wimbledon 2026: 36 ஆண்டுகளுக்கு பிறகு! விம்பிள்டன் காலிறுதியில் இந்தியர்.. புது சாதனை படைத்த அர்னவ்!
Arnav Paparkar: 6 அடி 1 அங்குல உயரம் கொண்ட அர்னவ் பாப்பர்கர், தனது சிறப்பான சர்வ்கிற்காக அறியப்படுகிறார். அர்னவ் பாப்பர்கர் அடிக்கடி 'A' சர்வ் மூலம் புள்ளிகளை வெல்வார். அர்னவ் தனது 6 வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். இந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் ஜூனியர்ஸ் போட்டியில் அர்னவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
விம்பிள்டன் 2026ல் (Wimbledon 2026) ஆடவர் ஒற்றையர் பிரிவில் 36 ஆண்டுகளில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அர்னவ் பாப்பர்கர் பெற்றுள்ளார். அவருக்கு முன்பு, டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் 1990ல் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக டென்னிஸ் களத்தில் இந்தியாவிற்கு எந்த நல்ல செய்தியும் இல்லாமல் இருந்தது. இப்போது, இந்த செய்தி இந்திய டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்நிலையில், இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான அர்னவ் பாப்பர்கர், டென்னிஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். அதன்படி, அர்னவ் பாப்பர்கர் (Arnav Paparkar) 2026 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.




36 ஆண்டுகளுக்கு பிறகு..
Asia’s lone warrior marches on at Wimbledon….💪
Arnav Paparkar 🇮🇳continues to carry the Asian challenge in the Boys’ Singles draw, moving into the quarter-finals with a commanding 6-2 6-1 win over Japan’s Ryo Tabata🇯🇵
The Indian youngster is standing tall as the last Asian… pic.twitter.com/fjp7W5R3aQ
— Asian Tennis Federation (@asian_tennis) July 9, 2026
18 வயதான அர்னவ் பாப்பர்கர், விம்பிள்டன் ஜூனியர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 36 ஆண்டுகளில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அர்னவிற்கு முன்பு, டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் 1990-ல் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். அர்னவ் இதுவரை இந்தத் தொடரில் ஒரு செட்டைக் கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்னவ் பாப்பர்கர் ஒரு சிறப்பான ஆட்டத்துடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியில், அவர் ஜப்பானின் ரியோ டபாட்டாவை வெறும் 52 நிமிடங்களில் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். அதுமட்டுமின்றி, போட்டியின் இரண்டாவது சுற்றில், ஜூனியர் உலகத் தரவரிசையில் 3-ஆம் இடத்தில் உள்ளவரும், ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் இறுதிப் போட்டியாளருமான அமெரிக்க வீரர் கீட்டன் ஹான்ஸை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ள அர்னவ் பாப்பர்கர், அங்கு அமெரிக்க வீரர் ஜோர்டான் லீயை எதிர்கொள்வார்.
யார் இந்த அர்னவ் பாப்பர்கர்..?
6 அடி 1 அங்குல உயரம் கொண்ட அர்னவ் பாப்பர்கர், தனது சிறப்பான சர்வ்கிற்காக அறியப்படுகிறார். அர்னவ் பாப்பர்கர் அடிக்கடி ‘A’ சர்வ் மூலம் புள்ளிகளை வெல்வார். அர்னவ் தனது 6 வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். இந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் ஜூனியர்ஸ் போட்டியில் அர்னவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு இந்தியா மீண்டும் இந்தச் சுற்றை எட்டியுள்ளது.
ALSO READ: ஃபிஃபா சுவாரஸ்யம்.. பரிசுத்தொகையை பெண்கள் அணிக்கு பிரித்துக்கொடுக்கும் அமெரிக்கா.. ஏன் தெரியுமா?
புனேவைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீரரான அர்னவ் பாப்பர்கர், பயிற்சியாளர் ப்ரோசன்ஜித் பாலின் வழிகாட்டுதலில் ஹேமந்த் பெண்ட்ரே டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெறுவதோடு, ஸ்பெயினிலும் தனது ஆட்டத்திறனை மெருகேற்றி வருகிறார். பஹ்ரைன் மற்றும் மலேசியாவில் ஜூனியர் பட்டங்களை வென்றது முதல் உலகின் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தது வரை, அர்னவ் பாப்பர்கர் இந்த வளர்ச்சி பல ஆண்டுகால அயராத உழைப்பின் விளைவாக அமைந்துள்ளது.