AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs PAK W: இந்தியா எப்போதும் ஒரு படி மேலேதான்.. பாகிஸ்தான் போட்டி குறித்து தீப்தி சர்மா!

IND W vs PAK W T20 Match: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 17 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், பாகிஸ்தான் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2022 அக்டோபரில் நடந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவைத் தோற்கடித்தது.

IND W vs PAK W: இந்தியா எப்போதும் ஒரு படி மேலேதான்.. பாகிஸ்தான் போட்டி குறித்து தீப்தி சர்மா!
தீப்தி சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Sep 2026 23:18 PM IST

2026 மகளிர் ஆசியக் கோப்பையில் (2026 Womens Asia Cup) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் (IND W vs PAK W) இடையே ஒரு பரபரப்பான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் எளிதாகவே கருதப்படுகின்றன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதுவரை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 17 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், பாகிஸ்தான் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2022 அக்டோபரில் நடந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவைத் தோற்கடித்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான கடைசிப் போட்டி 2026 டி20 உலகக் கோப்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. இதற்கிடையில், இந்தப் போட்டிக்கு முன்னதாக ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ALSO READ: பாகிஸ்தானை அடுத்த போட்டியில் எதிர்கொள்ளும் இந்திய மகளிர்.. எப்போது, எங்கு காணலாம்?

தீப்தி ஷர்மா என்ன சொன்னார்?

பிடிஐ-யிடம் பேசிய தீப்தி ஷர்மா, “பாகிஸ்தான் எதிரான போட்டியில் அப்படி எந்த சாதகமோ அல்லது அழுத்தமோ இருக்கவில்லை. விஷயம் என்னவென்றால், ஆசியக் கோப்பையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் தொடராக இருந்தாலும் சரி, நாங்கள் அவர்களுக்கு எதிராக வென்ற ஒவ்வொரு போட்டியிலும், நாங்கள் எப்போதும் அவர்களை விட ஒரு படி முன்னிலையில் இருந்திருக்கிறோம். அதுதான் முக்கிய காரணம். இந்த முறை ஒட்டுமொத்த இந்திய அணியும் சிறப்பாகச் செயல்படும்.  பேட்டிங் அல்லது பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் இந்திய அணி வலுவாக உள்ளது. போட்டி நாளில் சிறப்பாகச் செயல்படும் ஒரு வீரர் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வார். மற்ற வீரர்கள் அந்த வீரருக்கு ஆதரவளிக்கிறார்கள்.” என்றார்.

ALSO READ: ஒரே ஒரு சதம்.. 10 முக்கிய சாதனைகளை தூக்கிய ஸ்மிருதி மந்தனா!

தொடர்ந்து பேசிய தீப்தி சர்மா, “எங்கள் அணியும் அவர்களின் பந்துவீச்சாளர்களும் சிறந்தவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நான் முன்பே கூறியது போல், நாங்கள் ஒரு நல்ல மற்றும் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவே விரும்புகிறோம். எங்கள் முழு கவனமும் அதில்தான் உள்ளது. நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதுதான் எங்கள் ஒரே குறிக்கோள். அது பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி, ஒரு அணியாக ஒன்றிணைந்து விளையாடுவதுதான். கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடியது போல, முழு அணியும் ஒன்றிணைந்து விளையாட வேண்டும்,” என்றார்.

Follow Us