AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொகுதி மறுவரையறை – நாடாளுமன்ற அமர்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி

PM Narendra Modi Speaks in Lok Sabha : மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்த மக்களவை அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவயில் உரையாற்றினார். மூன்று முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி மறுவரையறை – நாடாளுமன்ற அமர்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Apr 2026 16:32 PM IST
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்த மக்களவை அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவயில் உரையாற்றினார். மூன்று முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் அதிகாரத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், நாடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை எடுத்துவைக்கத் தயாராகி வருகிறது என்று பிரதமர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  இந்த முக்கியமான மசோதா குறித்த விவாதம் இன்று காலையில் தொடங்கியது. பல உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். அது குறித்து விரிவான மற்றும் துல்லியமான விளக்கத்தை நாங்கள் இந்த சபையில் வழங்குவோம். அதனாலேயே, நான் அந்த விவரங்களுக்குள் இப்போது செல்ல விரும்பவில்லை என்றார்.
மேலும் பேசிய அவர்,  ஒரு நாட்டின் வாழ்வில் சில முக்கியமான தருணங்கள் அமைகின்றன. அத்தகைய தருணங்களில், சமூகத்தின் மனநிலையும், தலைமைத்துவத்தின் திறனும் இணைந்து அந்தத் தருணத்தைப் பற்றிக்கொண்டு, அதனை நாட்டிற்கு ஒரு சொத்தாக மாற்றுகின்றன. அதன் மூலம் ஒரு வலிமையான மரபை அவை உருவாக்குகின்றன. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில், இவையும் அத்தகைய தருணங்களே ஆகும் என்று தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசுகையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமை வளர்ந்து வருவதை நாம் காண முடிகிறது.  மகளிர் இடஒதுக்கீடு வழங்குவது ஏற்கெனவே காலதாமதமாகிவிட்டது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களைப் பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் கிடைத்த ஒரு கூட்டு வெற்றியாக அமையும். இது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதப்படாது இந்த மசோதாவிற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மேலும்,  இந்த வளர்ச்சிப் பயணத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் புனிதமான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. நாட்டில் மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளை எதிர்த்தவர்களை, இந்நாட்டின் பெண்கள் ஒருபோதும் மன்னித்ததில்லை  என்றார்.

ஒரு ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்பது வெறும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் அல்லது பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிப்பதல்ல. ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கொள்கை உருவாக்கத்தில், ‘அனைவருடன் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி என்ற உணர்வு பிரதிபலிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் மோடி கூறினார்.

இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!

அனைவரையும் ஒன்றிணைத்து முன்னோக்கி அழைத்துச் செல்வதே தனது பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டார். மகளிர் இடஒதுக்கீட்டின் தேவை முதன்முதலில் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பே உணரப்பட்டது. இது முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு என்பது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காகவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை; இது அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் ‘நாரி சக்தி’ (பெண் சக்தி) ஆற்றிவரும் பங்களிப்புகளை முழு மனதுடன் வரவேற்கக் கிடைத்த ஒரு வாய்ப்பே இது என்று பிரதமர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி

Follow Us