Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பஹல்காம் தாக்குதல்.. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது.. என்ஐஏ தீவிர விசாரணை!

Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான இருவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு, தேவையான உதவிகளை செய்ததாகவும் என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பஹல்காம் தாக்குதல்.. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது.. என்ஐஏ தீவிர விசாரணை!
பஹல்காம் தாக்குதல்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Jun 2025 14:39 PM

காஷ்மீர், ஜூன் 22 : பஹல்காம் தாக்குதலில் (Pahalgam Terror Attack) தொடர்புடைய இரண்டு பேரை என்ஐஏ கைது  (NIA) செய்துள்ளது. கைதான இருவரும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? பின்னிணி? உதவியர்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணையை என்ஐஏ மேற்கொண்டு வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்

இந்த விசாரணையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அதாவது, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இரண்டு பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. அவர்கள் இருவரும் பயங்கரவாதிகளுக்கு  அடைக்கலம் கொடுத்ததாக என்ஐஏ கூறியுள்ளது.

இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட அறிவிப்பில், “பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பட்கோட்டைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஹல்காமின் ஹில் பார்க்கைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரும் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் (LeT) தொடர்புடைய என உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு முன்னர், பர்வைஸ் மற்றும் பஷீர் ஆகியோர் ஹில் பார்க்கில் உள்ள ஒரு குடிசையில் மூன்று பயங்கரவாதிகளை தங்க வைத்துள்ளனர்.

இருவரை கைது செய்த என்ஐஏ


இந்த இருவரும் பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம், தேவையான உதவிகளை வழங்கி உள்ளனர். மத அடையாளத்தின் அடிப்படையில் பொதுமக்களை பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். இது இதுவரை நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும்.  பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 19 இன் கீழ் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல்

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மோசமான நாளாக அமைந்தது. ஜம்மு காஷ்மீரில் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் பலரும் இருந்தன. அப்போது, அங்கு வந்த 5 பயங்கரவாதிகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில்  26 அப்பாவி மக்களே கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு  பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டியது. இதனால், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க  ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்தது. இதனால், இந்திய பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போராக இருந்தது.

மூன்று நாட்கள் இரு நாடுகளுக்கு மாறி மாறி தாக்குதல் நடத்தினர்.  2025 மே 10ஆம் தேதி இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம்  தணிந்தது. இருப்பினும், பாகிஸ்தானுன் வர்த்தகத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. எதிர்காலத்தில் தாக்குதல் நடந்தால் தீவிரமாக பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.