Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Jammu Kashmir

Jammu Kashmir

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணைக்க ஒப்புக் கொண்டார். அதாவது, இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாக பிரிக்கப்பட்டபோது, ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்த வந்த மன்னர் இந்து என்பதால், அவர் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க ஒப்புக் கொண்டார். அன்றில் இருந்து இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் 1952ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தனி மாநிலமாக இருந்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கம் செய்துவிட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறியது. கூடுதலாக லடாக் பிரிக்கப்பட்டு மற்றொரு யூனியன் பிரதேசமாக மாறியது. இதற்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீரின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்றன. அதே நேரத்தில், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி காஷ்மீருக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு எல்லையில் பாதுகாப்பு படைகளை குவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது

Read More

பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் திடீர் அறிவிப்பு.. இந்தியா முடிவு என்ன?

Pakistan PM Shehbaz Sharif : இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நிகழ்ந்த இராணுவ மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இந்தியா என்ன முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Operation Keller: ஜம்மு காஷ்மீரில் சுற்றி வளைத்த இந்திய இராணுவம்.. 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற சம்பவம்..!

Indian Army Operation: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், இந்திய ராணுவம் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் நடத்திய என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உளவுத் தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த என்கவுண்டரில் இந்திய ராணுவத்தினருக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. மேலும், அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

சிவ தாண்டவம்’ இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம் – வைரலாகும் வீடியோ

Shiv Tandav marks Operation Sindoor briefing : ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்திய ராணுவ படைகள் ஒன்றாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் சிவ தாண்டவம் எனும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

‘அங்கிருந்து துப்பாக்கி, இங்கிருந்து பீரங்கி’: பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு மோடி உத்தரவு!

Modi's Stern Warning: பாகிஸ்தான் எல்லை மீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி ராணுவத்திற்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். "ஆபரேஷன் சிந்துர்" மூலம் ராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எல்லைக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு கடும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்.. முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு!

Pakistan Attack : பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், 2025 மே 10ஆம் தேதி மாலை 5 மணி முதல் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

காஷ்மீர் பிரச்னை… உள்ளே வரும் அமெரிக்கா… டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

US President Donald Trump : காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் அறிவிப்பு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால், காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஏற்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா மீதான தாக்குதலுக்கு நடுவே பாகிஸ்தானில் நிலநடுக்கம் – பரபரப்பு தகவல்

Earthquake Strikes Pakistan : பாகிஸ்தானில் இன்று அதிகாலை 01.44 மணிக்கு  ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

India Pakistan Conflict : ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்

Pak Provocation Continues : பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, ஜம்மு, சம்பா, பாதான்கோட், பெரோஸ்பூர், ஜெய்சல்மேர் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் பறந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ட்ரோன்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளன.

பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

India-Pakistan Border Tension: இந்திய எல்லையில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். "ஆபரேஷன் சிந்து" மூலம் பாகிஸ்தானின் விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் குறிவைக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் பொய்யான தகவல் பரப்புதலை கண்டித்ததாகவும் அவர் கூறினார்.

ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள்.. சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்.. எல்லையில் பரபரப்பு!

India Pakistan Conflict : ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதாக 7 பயங்கரவாதிகளை பாதுகாப்ப படை வீரர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.

காஷ்மீரில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள்.. உதவி எண்களை அறிவித்த அரசு.. மீட்க நடவடிக்கை!

India Pakistan Conflict : ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 75503 31902, 80690 09901 என்ற எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

India vs Pakistan Conflict: அது எங்கள் வேலை இல்லை – அமெரிக்க துணை அதிபர் அதிரடி

India Pakistan Conflict : பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அதில் தலையிட மாட்டாது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.

India vs Pakistan Conflict : வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு – வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்?

India Pakistan Conflict Response : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசு சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மே 9, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

India vs Pakistan Live Updates: இந்தியா- பாகிஸ்தான் தாக்குதல்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

India vs Pakistan War Tension : ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது இந்நிலையில் இன்று இரவு முதல் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக ஜம்முகாஷ்மீர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் இந்தியா முறியடித்துள்ளது

பறந்து வந்த ஆளில்லா விமானம்.. ராஜஸ்தானை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம்..!

Pakistan’s Drone Try to Attack: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மட்டும் 20 ஏவுகணைகள் அழித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது முப்படை தலைமை தளபது, படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்த முயற்சி நடந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பாகிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலை இந்தியா தடுத்து நிறுத்தியது. அப்போது பலத்த வெடிச்சத்தம் கேட்டது.

தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்...
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!...
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?...
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!...
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!...
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை...
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!...
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!...
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!...