Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Jammu Kashmir

Jammu Kashmir

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணைக்க ஒப்புக் கொண்டார். அதாவது, இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாக பிரிக்கப்பட்டபோது, ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்த வந்த மன்னர் இந்து என்பதால், அவர் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க ஒப்புக் கொண்டார். அன்றில் இருந்து இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் 1952ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தனி மாநிலமாக இருந்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கம் செய்துவிட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறியது. கூடுதலாக லடாக் பிரிக்கப்பட்டு மற்றொரு யூனியன் பிரதேசமாக மாறியது. இதற்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீரின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்றன. அதே நேரத்தில், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி காஷ்மீருக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு எல்லையில் பாதுகாப்பு படைகளை குவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது

Read More

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு.. புதைந்த வீடுகள்.. 4 பேர் உயிரிழப்பு

Jammu Kashmir Cloud Burst : ஜம்மு காஷ்மீர் கதுவா பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Rahul Gandhi : 22 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல் காந்தி.. ஏன் தெரியுமா?

Rahul Gandhi Adopt 22 Childrens : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். குழந்தைகளின் கல்விச் செலவையும் ராகுல் ஏற்று உள்ளார். இதற்கான முதற்கட்ட தொகை 2025 ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆபரேஷன் மகாதேவ்..! பஹல்காம் பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற இந்திய ராணுவம்!

ஸ்ரீநகரின் லிட்வாஸ் பகுதியில் மறைந்திருந்த 3 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் இன்று அதாவது 2026 ஜூலை 28ம் தேதி ஆபரேஷன் மகாதேவ் என்ற திட்டத்தின் கீழ் கொன்றது. பஹல்காம் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான ஹாஷிம் மூசாவும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகளை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இருப்பினும், மீதமுள்ள இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் 2024 சோனமார்க் சுரங்கப்பாதை திட்டத்தின் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் செனாப் நதியில் திடீரென உயர்ந்த நீர்மட்டம்.. பொதுமக்கள் செல்ல தடை விதிப்பு..!

செனாப் நதியில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தடைசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றத் தவறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். செனாப் நதி இன்னும் அபாய அளவை எட்டவில்லை என்றாலும், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் நீர்மட்டம் 2 முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதல்.. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது.. என்ஐஏ தீவிர விசாரணை!

Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான இருவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு, தேவையான உதவிகளை செய்ததாகவும் என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம்.. இவ்வளவு ஸ்பெஷலா?

World's Tallest Rail Bridge: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 359 மீட்டர் உயரமும் 1315 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம், பூகம்பம் மற்றும் சூறாவளிக்கு எதிரான வடிவமைப்புடன் 120 ஆண்டுகள் ஆயுளுடையது.

”பழி போடுவதை நிறுத்துங்க” சிந்து நிதி நீர் ஒப்பந்தம்.. பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக சாடிய இந்தியா!

Indus Water Treaty : சிந்து நிதி நீர் ஒப்பந்தம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. பயங்கரவாதத்தின் மூலம் சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது என்றும் விளக்கியது.

ஆபரேஷன் சிந்தூர் துவங்கிய 30 நிமிடங்களில் பாகிஸ்தானை தொடர்பு கொண்டோம் – வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

Jaishankar clarifies Pakistan alert timeline : 'ஆப்பரேஷன் சிந்தூர்' தொடங்கிய 30 நிமிடங்களுக்கு பின் பாகிஸ்தானை தொடர்பு கொண்டு, இந்தியாவின் தாக்குதல் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே என்பதையும் தெரிவித்தோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாராளுமன்ற குழுவில் விளக்கம் அளித்தார்

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் – குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!

Health worker turns traitor : இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து ரகசியத் தகவல் வழங்கியதாக, குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுகாதார பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜெண்டுடன் வாட்ஸ்அப் வாயிலாக இந்திய எல்லை பாதுகாப்பு படை சம்பந்தமான முக்கிய புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்ததாக அவரர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Turkey : பாகிஸ்தான் ஆதரவு சர்ச்சை.. துருக்கிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ள இந்தியா!

India Warning : ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளிப்பதால் இந்தியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி தயாரித்த ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க முயற்சித்தது. இந்தியாவின் எதிர்வினையாக, துருக்கி பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடலாம்.

Jammu and Kashmir Encounter: ஜம்முவில் அடுத்தடுத்து பதட்டம்! பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. இராணுவ வீரர் வீரமரணம்!

Indian Army Operation: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், சிங்போரா கிராமத்தில் இந்திய ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே கடும் மோதல் நடந்தது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். மோதலில் ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். இராணுவத்தின் தீவிர நடவடிக்கையால் பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறைந்தது.

‘டெல்லி போவதாக சொன்னார்’- யூடியூபரின் தந்தை சொன்ன பகீர்… அடுத்தடுத்து வெளியாகும் திடுக் தகவல்கள்!

youtuber jyoti malhotra : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர் சோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருக்கிறது. இவரிடம் தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு முன் இவர் 2 முறை பாகிஸ்தான் சென்றிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் திடீர் அறிவிப்பு.. இந்தியா முடிவு என்ன?

Pakistan PM Shehbaz Sharif : இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நிகழ்ந்த இராணுவ மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இந்தியா என்ன முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Operation Keller: ஜம்மு காஷ்மீரில் சுற்றி வளைத்த இந்திய இராணுவம்.. 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற சம்பவம்..!

Indian Army Operation: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், இந்திய ராணுவம் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் நடத்திய என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உளவுத் தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த என்கவுண்டரில் இந்திய ராணுவத்தினருக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. மேலும், அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

சிவ தாண்டவம்’ இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம் – வைரலாகும் வீடியோ

Shiv Tandav marks Operation Sindoor briefing : ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்திய ராணுவ படைகள் ஒன்றாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் சிவ தாண்டவம் எனும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.