
Jammu Kashmir
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணைக்க ஒப்புக் கொண்டார். அதாவது, இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாக பிரிக்கப்பட்டபோது, ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்த வந்த மன்னர் இந்து என்பதால், அவர் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க ஒப்புக் கொண்டார். அன்றில் இருந்து இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் 1952ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தனி மாநிலமாக இருந்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கம் செய்துவிட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறியது. கூடுதலாக லடாக் பிரிக்கப்பட்டு மற்றொரு யூனியன் பிரதேசமாக மாறியது. இதற்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீரின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்றன. அதே நேரத்தில், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி காஷ்மீருக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு எல்லையில் பாதுகாப்பு படைகளை குவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது
அடுத்த 36 மணி நேரம்… இந்தியா எடுக்கும் நடவடிக்கை.. கதிகலங்கும் பாகிஸ்தான்!
India Pakistan Conflict : இந்தியா பாகிஸ்தான் என இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அடுத்த 36 மணி நேரத்திற்கு இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார். அதே நேரத்தில், இந்தியாவின் ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Apr 30, 2025
- 09:29 am
Pahalgam Terror Attack: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்.. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தீவிர ஆலோசனை!
India Pakistan Relations: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் உறவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனையில் விவாதிக்கப்பட்டன. இந்தியா தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Mukesh Kannan
- Updated on: Apr 29, 2025
- 19:00 pm
பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர், மீட்கும் முயற்சியில் இந்தியா – பரபரப்பு சம்பவம்
Pakistan detains Indian soldier : தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த .பி.கே.சிங் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் இருந்து துப்பாக்கி வாக்கி, டாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
- Karthikeyan S
- Updated on: Apr 24, 2025
- 22:21 pm
ஆதாரம் இருந்தால் இந்தியா காண்பிக்கட்டும்.. பாகிஸ்தான் அமைச்சர்கள் ஆவேசம்!
Pakistan Denies Involvement in Pahalgam Attack | ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியாவிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதனை காண்பிக்க வேண்டும் என்று அந்நாட்டின் துணை பிரதமர் இஷாக் தர் கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 24, 2025
- 21:33 pm
ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ரத்து.. இந்திய அரசு திட்டவட்டம்!
Pakistani's visas will be suspended from 27 April 2025 | ஜம்மு மற்றும் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 27, 2025 முதல் பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Apr 24, 2025
- 20:27 pm
சிம்லா ஒப்பந்தம் ரத்து.. இந்தியாவுடன் போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்?
Pakistan Government Cancelled Shimla Agreement | ஜம்மு & காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசு பதில் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. அதன்படி, சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Apr 24, 2025
- 20:54 pm
”ஒவ்வொரு பயங்கரவாதியும் தண்டிக்கப்படுவார்கள்” காஷ்மீர் தாக்குதல்.. கொதித்தெழுந்த பிரதமர் மோடி!
PM Modi On Pahalgam Terror Attack : பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கப்படும் என்றும், பயங்கரவாதிகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Apr 24, 2025
- 14:02 pm
“உயிர் பயமே வந்துவிட்டது” காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய பயணிகள் பேட்டி!
Pahalgam Terror Attack : பஹல்காம் தாக்குதலை அடுத்து, ஜம்மு காஷ்மீரில் இருந்து விமானம் மூலம் 19 பயணிகள் சென்னை வந்தடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக 50 பேர் காஷ்மீரில் இருந்து சென்னை வர உள்ளனர். பைசரன் பள்ளத்தாக்கை அருகில் சென்றபோது, தாக்குதல் குறித்து தகவல் தெரிவித்ததால் உயிர் தப்பியதாக பேட்டி அளித்துள்ளனர்.
- Umabarkavi K
- Updated on: Apr 24, 2025
- 11:12 am
Asia Cup 2025: பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. 2025 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுமா..?
India-Pakistan Cricket: பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து ஐயங்கள் எழுந்துள்ளன. 2025 ஆசியக் கோப்பையில் இரண்டு அணிகளும் மோதுமா என்பது சந்தேகம். இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என பலர் வலியுறுத்துகின்றனர். 2025 ஆசிய கோப்பை டி20 வடிவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஒரே குழுவில் இருந்தால் மூன்று போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும்.
- Mukesh Kannan
- Updated on: Apr 24, 2025
- 09:25 am
Pahalgham Terror Attack : தண்ணீர் முதல் வர்த்தகம் வரை.. பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தியாவின் திடீர் மூவ்!
India's Major Retaliatory Steps : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 2025, ஏப்ரல் 22ல் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 28 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு சில பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்றிருந்தாலும், இந்தியா நேரடியாக பாகிஸ்தானை இதற்கு குற்றஞ்சாட்டியுள்ளது.
- C Murugadoss
- Updated on: Apr 24, 2025
- 08:08 am
Pahalgham Terror Attack: மிருகத்தனமான செயல்! தக்க பதிலடி கொடுப்போம்.. பஹல்காம் தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் அதிரடி!
Defence Minister Rajnath Singh: தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்து 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் எனவும், இந்தியா பயங்கரவாதத்திற்கு அஞ்சாது எனவும் உறுதியளித்துள்ளார். தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோழைத்தனமான செயலுக்குப் பொறுப்பானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 24, 2025
- 07:37 am
India-Pakistan Cricket: இந்திய அணி இனி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடாதா..? பிசிசிஐ சொன்ன தகவல்..!
Pahalgam Terror Attack: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகி, பலர் காயமடைந்தனர். இந்தக் கொடூரச் செயலை பிசிசிஐ கண்டித்துள்ளது. ராஜீவ் சுக்லா, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து மத்திய அரசின் முடிவைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Apr 23, 2025
- 19:34 pm
Pahalgam Terror Attack: தனி ஆளாக பயங்கரவாதிகளுடன் சண்டை! சுற்றுலா பயணிகளை பாதுகாக்க உயிரை விட்ட முஸ்லீம் இளைஞர்!
Syed Adil Hussain Shah: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில், சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயன்ற உள்ளூர் வழிகாட்டி சையத் அடில் உசேன் ஷா வீரமரணம் அடைந்தார். அடில் ஷா குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்ததால், அவரது மறைவு குடும்பத்திற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.
- Mukesh Kannan
- Updated on: Apr 23, 2025
- 18:38 pm
Annamalai: மத்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும்! பஹல்காம் தாக்குதல் குறித்து அண்ணாமலை பேச்சு!
Pahalgam Terror Attack: பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அண்ணாமலை கண்டித்துள்ளார். அப்பாவி மக்கள் பலியான இந்தக் கோழைத்தனமான செயலைக் கடுமையாக விமர்சித்த அவர், மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். தாக்குதலுக்குப் பின்னர் பிரதமர் மோடி உடனடியாக இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை, சமூக அமைதியைப் பேணவும், அச்சமின்றி காஷ்மீர் செல்லவும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 23, 2025
- 17:30 pm
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: உலக தலைவர்களின் கண்டனங்கள்
Kashmir Terror Attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் பலியாகியதையடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
- Sivasankari Bose
- Updated on: Apr 23, 2025
- 15:02 pm